என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை"

    • வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
    • கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்ஸில் வந்தார். ஊரிலிருந்து பஸ்ஸில் வடசேரிக்கு வந்த போது பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார்.இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர்.அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.

    உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பெரிய வந்துள்ளது.

    அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறா ர்கள். ஒடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய முடியும்.

    மேலும், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    சேலம் மாநகராட்சியில் காலை உணவாக உப்புமா வகைகள், கிச்சடி வகைகள் மற்றும் பொங்கல் வகைகள் உள்ளிட்டவை சுழற்சி முறையில் நாள்தோறும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சேலம் மாநகராட்சியில் மணக்காடு சமுதாயக் கூடம், இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள டாக்டர்ஸ் காலணி, அம்மாப்பேட்டை வித்யா நகர், களரம்பட்டி சமுதாயக்கூடம், மணியனுர் காத்தாயம்மாள் நகர் சமுதாயக்கூடம் ஆகிய 5 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் ஏதுவாக 54 பள்ளிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தினசரி காலை உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட துணை கலெக்டர் நிலையில் ஒருவர் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு துறையில் 2 மணி நேரம் காத்திருப்பு
    • திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்றுஅதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.கன்னியாகுமரி கடலில்இன்றுஅதிகாலை யில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது.

    சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதே போல் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.
    • அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது:-

    நாமக்கல் நகராட்சியில் முதல் அமைச்சரின் காலை உணவு வழங்கும் 2-ம் கட்டத் திட்டம், சின்ன முதலைப்பட்டி, அழகுநகர், பெரியப்பட்டி, போதுப்–பட்டி, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியூர், கருப்பட்டிபாளையம் மற்றும் நாமக்கல் ரங்கர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள 9 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 1,088 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

    ராமாபுரம் புதூர், முதலைப்பட்டி, கொண்டி செட்டிபட்டி, முதலைப்–பட்டிபுதூர் மற்றும் காவேட்–டிப்பட்டி பகுதிகளில் உள்ள 5 நடுநி–லைப்பள்ளிகளைச் சேர்ந்த 533 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்–படுகிறது.

    அதேபோல் திருச்செங்கோடு நகராட்–சிக்குட்பட்ட கூட்டப்–பள்ளி, மலையடி–வாரம், சீத்தா–ரம்பாளையம், சாணார்பாளையம், சூரியம்பாளையம் மற்றும் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 6 தொடக்கப்–பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் முதல்- அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட 2-ம் கட்டத்தில் பயன்பெறு கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சுதா, கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தவராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • தினமும் கேரளாவுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், மண், எம்-சாண்ட், என்-சாண்ட் போன்றவை செல்கிறது

    திருவட்டார், ஜூன்.28-

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், மண், எம்-சாண்ட், என்-சாண்ட் போன்றவை செல்கிறது. அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக ஏற்றி ஓவர் லோடாக கேரளாவுக்கு பல்வேறு வழிகளில் செல்கிறார்கள். இந்த வாகனங்கள் தினமும் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது.

    அதிக அளவு லோடுகள் ஏற்றி செல்வதால் குமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய் விடும் அளவிற்கு தினமும் வெட்டி எடுக்கிறார்கள். அதன்பிறகு மழையின் அளவும் குறைந்து விடும் அபாயம் உள்ளது.

    உள்ளூர் மக்கள் அதிக விலை கொடுத்து கல் மண் வாங்க வேண்டிய நிலை கேராளவுக்கு அதிக வாகன ங்களில் கனி மவளங்கள் செல்வதால் உள்ளூர் பகுதி மக்களுக்கு வீடு கட்டுவதற்கு அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை உள்ளது. அதனால் உள்ளூர் பகுதி மக்களுக்கு வீடுகட்டுவதற்கும் தொழில் நடத்துவதற்க்கும் தேவையான பொருள்கள் கிடைப்பது இல்லை. கனரக வாக னங்கள் அதிவேகமாக செல்வதால் ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பல விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்த கனரக வாகனங்கள் காலை மாலை வேளைகளில் கேரளாவுக்கு அதிவேகமாக செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்வ தால் இந்த வாகனங்கள் அந்த வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது. சில இடங்களில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ரோட்டை கடந்து செல்லும்போது கனரக வாகனங்கள் செல்வதால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள். எனவே மாவட்ட கலெக்டர் தலை யிட்டு இந்த கனரக வாக னங்கள் காலை, மாலை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சென்றுவரும் நேரங்களில் செல்ல தடை விதிக்க வேண்டும். என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    தொடக்க விழா

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள காமலா பும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை காலை இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிர மணி, ரமேஷ், என்ஜினீயர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 1,418 பள்ளி களில் தொடங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறு வார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லி மலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது முதல்-அமைச்சரின் காலை உண வுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை யிலான 27,128 மாணவ-மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,497 மாணவ-மாண விகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல் பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி டவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா கூறி உள்ளார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ராசிபுரம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூ ராட்சி பகுதிகளில் உள்ள

    772 பள்ளிகளில் இத்திட்ட மானது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 35,544 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

    விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இதன் தொடக்க விழா ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த னர். பின்னர் பள்ளியில் பயிலும் 42 மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 842 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

    இந்த நிகழச்சியில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அரங்கசாமி, முத்துகாளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருண், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த திட்டம் மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி விரிவு படுத்தப்பட்டது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்ப டுத்தப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள னர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றி யம் நெரிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் கலெக்டர் கார் மேகம் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும் ஓமலூர் ஒன்றியம் மாங்குப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ததுடன் ஊழி யர்களிடமும் கேட்டறிந்தார்.

    ஆணைக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் கார்மேகம் அந்த பகுதியில் மாணவர்க ளுடன் அமர்ந்து உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் துணை கலெக்டர் தலைமையிலான அதிகாரி கள் திடீர் ஆய்வு செய்தனர். 

    • செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.
    • இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது.

    முதல் முக்கிய காலை பழக்கம், எழுந்தவுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான பானங்களையும் உங்கள் தினசரி காலையில் இணைத்துக் கொள்ளலாம்.

    காலையில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்களின் ஒரு பட்டியல் இதோ...

    ஜீரா நீர்

    ஜீரா அல்லது சீரக விதைகள் செரிமானத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கும், செரிமான செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜீரா நீர் ஒரு பெரிய எனர்ஜி பூஸ்டர். எனவே காலையில் உங்கள் எனர்ஜியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் மந்தத்தை நீக்குகிறது.

    எப்படிச் செய்வது: ஒரு கப் தண்ணீருக்கு 1 டீஸ்பூன் ஜீரா சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


    ஓம நீர்

    அஜ்வெய்ன்(ஓமம்) அல்லது கரோம் விதைகள் இரைப்பைக் குடல் வலி நீக்கும் பண்புள்ள தைமாலைக் கொண்டுள்ளன. இந்த தைமால் செரிமானத்தை மேம்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணெய், அமிலத்தன்மை நீக்கம் மற்றும் எடை இழப்புகளை ஊக்குவிக்கிறது. கரோம் விதைகளில் இருக்கும் தைமோல் வயிற்றில் இரைப்பைச் சாறுகளை சுரக்க வைக்கிறது, இதனால் செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.

    எப்படி செய்வது: அரை டீஸ்பூன் அஜ்வெய்ன் விதைகளை 1 கப் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்கவும். அது குளிர்ச்சியடைந்தவுடன், வடிகட்டி குடிக்கலாம்.


    இன்பியூஸ்ட் நீர்

    நீங்கள் வெற்று நீரைக் குடிக்க சலித்துப்போகும் போதெல்லாம், ஏன் மூலிகைகள், ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களை தண்ணீரின் சுவையை அதிகரிக்க அதனுடன் சேர்க்க முயற்சி செய்யக்கூடாது? எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு நோயெதிர்ப்பு அதிகரிக்கும் வைட்டமின் சி- யைக் கொண்டுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. வெள்ளரிக்காய் உங்கள் உடலில் நீரேற்றத்திற்கு உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது, மற்றும் துளசி அல்லது புதினா போன்ற மூலிகைகள் ஆன்டி பயோடிக், ஆன்டி - பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.


    எப்படிச் செய்ய வேண்டும்: ஒரு ஜக்கில் தண்ணீரை ஊற்றி, மேலே உள்ள பொருட்களில் ஒன்றினை அதனுள் சேர்க்கவும். சுவையூட்டுவதற்காக 2 முதல் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

    காலையில் உங்கள் நேரத்தை காப்பாற்றிக் கொள்ள, மேலுள்ள கலவையை இரவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, காலையில் தண்ணீரில் இருந்து மூலப்பொருளை நீக்கி குடிக்க வேண்டும்.

    தேங்காய் நீர்

    காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகிறது. தேங்காய் நீர், பல வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் உட்பட கனிமங்களால் நிறைந்தது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கத் தேவையான முக்கியமான இரண்டு எலக்ட்ரோலைட்களான சோடியம் மற்றும் பொட்டாசியதைக் கொண்டுள்ளது.


    காய்கறி சாறு

    இயற்கை ஜுஸ்களை குடித்தல் உங்கள் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. காய்கறிகளை ஜுஸ் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன. பச்சை இலை காய்கறிகள், அதாவது கீரை மற்றும் காலே போன்றவை உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அவை உங்கள் செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.

    எப்படி செய்ய வேண்டும்: நீங்கள் பயன்படுத்துகிற காய்கறிகளை பொடிப் பொடியாக வெட்டி சிறிது நீர் அல்லது தேங்காய் நீரைச் சேர்த்து ப்ளண்டரில் போட்டு அரைக்கவும்.


    அலோவேரா (கற்றாழை) ஜூஸ்

    அலோவேரா சாறு, இரைப்பை அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க் குறிக்கும் உதவுகிறது. இது செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.

    எப்படி செய்ய வேண்டும்: கற்றாழையை கிழித்து அதிலிருந்து வெள்ளை ஜெல்லை பிரித்தெடுக்கவும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்து ப்ளண்டரில் போடவும்.அதில் 3 கப் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும்.


    இஞ்சித் தேநீர்

    இஞ்சித் தேநீரை காலையில் எடுத்துக்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவற்றைக் குறைக்கும், ஏனெனில் இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மேலும், இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது. மேலும் காலை உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் அதைக் குடிப்பதால் நல்ல பயனடைவீர்கள்.

    எப்படி செய்ய வேண்டும்: உரித்து நறுக்கிய இஞ்சியை ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். கொதிக்க வைத்து 1 எலுமிச்சையின் சாறைச் சேர்க்கவும். பிறகு அதை வடிகட்டிக் குடிக்கவும்.


    தக்காளி ஜூஸ்

    உங்கள் காலையை சிறப்பாகத் தொடங்க மற்றொரு சிறந்த வழி தக்காளிச் சாறு. தக்காளி, 95 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டிருக்கும். அது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் இது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, அதிக அளவிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தொற்றுக்களை அழித்து நோயெதிர்ப்பு அமைப்பைப் பலப்படுத்துகிறது ஒரு பெரிய நச்சுநீக்கி பானமாக செயல்படுகிறது.


    எப்படி செய்வது: பிளெண்டரில் 1 துண்டு தக்காளி மற்றும் 3 கப் தண்ணீரை சேர்க்கவும். ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறைச் சேர்த்து மென்மையான கலவை வரும் வரை அரைக்கவும்.

    மேற்கண்ட இந்த பானங்களை காலையில் அருந்தி வர உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

    • மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுனர்களும் பாதசாரிகளும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ளது கொட்டாரம். இந்த ஊர் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தின் தலைநகராக கருதப்படுகி றது. அதுமட்டு மின்றி கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 5-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இந்த ஊரின்சந்திப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளிக்கூடத்துக்கு எதிர்புறம் தபால் நிலையம் உள்ளது. இந்த சந்திப்பில் இருபுறமும் ஓட்டல் மற்றும் கடைகளும் உள்ளன.

    இந்த சந்திப்பு வழியாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் மார்க்கமாக ஏராளமான வாகனங்கள் அடிக்கடி சென்று வரு கின்றன. இதனால் கொட்டா ரம் சந்திப்பு பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுனர்களும் பாதசாரிகளும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியான சாலையில் ஒரு புறம் அரசு மேல்நிலைப்பள்ளியும் மற்றொருபுறம் அரசு தொடக்கப் பள்ளியும் அமைந்து உள்ளது.

    இதனால் காலை பள்ளி தொடங்கும் நேர த்திலும் மாலையில் பள்ளி விடும் நேரத்திலும் மாணவ மாணவிகள் ரோட்டை கடக்க பெரும் சிரமப்படுகிறார்கள். முன்பு எல்லாம் "பீக்அவர்ஸில்" காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது வழக்கம். கொட்டாரம் சந்திப்பில் இரவு 8 மணி வரை போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார்கள்.

    ஆனால் சமீபகாலமாக இந்த பகுதியில் போக்கு வரத்து போலீசாரை காண முடிவதில்லை. போலீசார் இல்லாததால் மாணவ-மாணவிகள் ரோட்டை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வாகனங்களின் அசுர வேகம் மாணவ-மாணவிகளை மிரளச் செய்கிறது.

    பள்ளிகள் திறந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆன பிறகும் இதுவரை போக்கு வரத்து போலீசார் பள்ளிகள் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நியமிக்கப்படவில்லை. இந்தப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களே சிலசமயங்களில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். நெருக்கடி யால் பெரும்பா லான நேரங்களில் விபத்துக்களும் நேரிடுகிறது.

    போக்குவரத்து போலீ சார் பலர்வேறு பணி களுக்கு சென்று விடுவதால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஆள் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    விபத்துக்கள் அதிகரித்து வரும் வேளையில் இது போன்ற காரணங்களை காட்டாமல் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி முன்பு காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).

    இவரது மகள் ஆரல்வாய் மொழி அருகே செண்பக ராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.மகளை பார்ப்பதற்காக இன்று காலை ஜோசப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் தோவாளை அருகே முத்து நகர் பகுதியில் குருச டிக்கு செல்லும் சாலை யில் திரும்பும் போது நெல்லை யிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஜோசப் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட ஜோசப் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கினார். பஸ் சக்கரத்தில் சிக்கிய ஜோசப் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.அவரது மோட்டார் சைக்கிளும் பஸ்சுக்கு அடியில் சிக்கியது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பஸ்சுக்கு அடியில் சிக்கிய மோட் டார் சைக்கிளையும் சக்க ரத்தில் சிக்கிய ஜோசப்பை யும்போலீசார் போராடி மீட்டனர்‌.

    பின்னர் ஜோசப்பின் உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜோசப் பலியானது குறித்து அவரது மகள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகளை பார்க்க வந்த இடத்தில் தந்தை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
    • கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பட்டுக்கோட்டை கோட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.

    கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எரிவாயு சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×