என் மலர்
நீங்கள் தேடியது "மான்"
- காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் ,முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்
மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழிஎன்றனர்.
- வனக்காப்பாளரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
- கண்மாய் கரையில் புள்ளிமான் செத்து கிடந்தது.
புதுக்கோட்டை,
காரையூர் அருகே அரசமலை சம்புருதி கண்மாய் கரையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற அரசமலை வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோர் கிராம உதவியாளர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனக்காப்பாளர் கனகவள்ளியிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
- ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
- மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.
- வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
- நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேவகோட்டை
தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.
அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.
அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.
மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
- மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காங்கயம் :
காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலையில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் ஊதியூா் வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய புள்ளிமான் குண்டடம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடிநீர் தேடி வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே வனங்களில் குடிநீா்த் தொட்டி அமைத்து தண்ணீா் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
- பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.
வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.
- புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
- மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி அருகே காட்டுப்பள்ளி வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
கும்முடிப்பூண்டி அடுத்த மாதவரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
காங்கயம்:
காங்கயம் அடுத்துள்ள ஊதியூா் மலையில் 100 க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. கோடை காலங்களில் மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் குடிநீா் மற்றும் உணவுக்காக மலையில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்டங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மலையிலிருந்து கீழிறங்கி, குண்டடம் சாலையைக் கடக்க முயன்ற ஒரு புள்ளிமான், ஒரம்பபுதூா் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிரிழந்தது. இது குறித்த தகவலறிந்த காங்கயம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மானின் உடலை கைப்பற்றினா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
- சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
- மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது
- ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
சைவ உண்ணியான மான் புல் போன்ற தாவர வகைகளை சாப்பிடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வன பகுதியில் உலாவும் மான் ஒன்று தனது அன்றாட உணவை போல் பாம்பை கடித்து விழுங்குவதை காணமுடிகிறது.
வனத்துறை அதிகாரியான பர்வின் கஸ்வான் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வனப்பகுதியில் சாலையோரத்தில் நிற்கும் ஒரு மானின் வாயில் பாம்பு தொங்குகிறது. அந்த மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. பிகேன் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை வன அதிகாரியான பர்வின் கஸ்வான் ரீடுவிட் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார். இதே போல ஏராளமான பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் கடித்தன.
- கடப்போகத்தி காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன.
அதனை கண்ட பொதுமக்கள் நாய்களை அங்கிருந்து துரத்தி விட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர் நேரில் வந்து பார்த்தபோது நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த மான் பெண் மான் என்றும், அதற்கு 3 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கடப்போகத்தி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது. அங்கிருந்து தப்பி ஊருக்குள் வந்த மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.
- நீர்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன.
- மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
திருப்பூர்:
பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூா் பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இதன் நீா்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன. தற்போது மான்களின் இனப்பெருக்கக் காலமாக உள்ளது.
இந்நிலையில், உப்பாறு ஓடையில் காணப்படும் மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.மேலும் இப்பகுதியில் காணப்படும் மான்களை பாதுகாக்க மான் வேட்டையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.