என் மலர்
நீங்கள் தேடியது "எல்.முருகன்"
- மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்.
- மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும்.
புதுடெல்லி:
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்கெனவே மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை மந்திரியாக பொறுப் பேற்றுக் கொண்டார்.
பாராளுமன்ற மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் உறுப்பினர்களின் பதவிகளுக்கு அவ்வப்போது மத்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டு 68 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. அதன் அடிப்படையில் மத்திய மந்திரி எல்.முருகனின் பதவிக்காலமும் இந்த ஆண்டு முடிவடைகிறது.
இதையடுத்து புதிய மேல்சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் வருகிற 27-ந் தேதி நடத்துகிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தலில் மத்தியபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.

இதேபோல் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும் மத்தியபிரதேச பிரதேசத்தில் இருந்து உமேஷ் நாத் மஹராஜ், மாயா நரோ லியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மந்திய மந்திரி எல்.முருகன் 1977-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பிறந்தார். அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூர் ஆகும். 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தை பெற்றார். 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக பணிபுரிந்தார். 2017 முதல் 2019 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தார்.
அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி வரை அவர் அப்பதவியில் இருந்தார். 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில், தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது எல்.முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர் மீண்டும் மத்தியபிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.
- நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்
- நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அவ்வகையில் ஆ. ராசா, எல். முருகன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
- கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது
- முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.
கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். மோடி தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
- டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
- தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.
10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.
ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.
2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.
அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.
நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.
இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும்.
- கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம்மை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட கையேந்தும் நிலையில்தான் உள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருசிலர் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீரில் யாராவது கைவைத்தால், அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி.
இந்த பகுதியின் வனவிலங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும். கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.
- தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.
திருச்சி:
மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை நடந்து முடிந்த தொகுதிகளில் 310 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான சாதகமான நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ள தேர்தல்களிலும் சேர்த்து மொத்தம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை பாரதிய ஜனதா செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெற உள்ளது, யாரும் இதுவரை எதிர்பாராத வண்ணம் அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற இருக்கின்றது. வரும் 4-ம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.
தமிழக முதலமைச்சர், மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என்று கூறி வருகிறார். அது அவர்களுடைய பகல் கனவாகவே இருக்கப்போகிறது. காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.
பிரதமர் மோடி பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே பொய்யாக திரித்து பேசி வருகிறார். பிரதமர் என்ன பேசினார் என்பதை முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் தமிழர் கட்சி சீமான் என்னை விட அதிகமாக அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நான் கட்சியை கலைத்து விடுகிறேன் என சொல்லி உள்ளார் என்ற கேள்விக்கு, அவர் கட்சியைக் கலைக்க தயாராகி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்.
தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கான ஆதரவு அலை வீசுகிறது. நாட்டில் நடை பெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். விவேகானந்தர் தியானம் செய்த குமரி முனையில் பிரதமர் தியானம் செய்து கொண்டிருக்கிறார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலி பரை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழக காவல் துறையினர் 2 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீதும், தாய் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
சமூகவலைதளத்தில் ஏதாவது தகவல் வெளியிட்டால் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யும் காவல்துறை இந்த சம்பவத்தில் இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்.
2014-ம் ஆண்டு 10-வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். 2027-க்குள் 3-வது இடத்தை அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கேரண்டி கொடுத்துள்ளார். அதனை நாம் நிச்சயம் அடைவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆலோசனைக் கூட்டம் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.
- சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி:
பா.ஜ.க. கூட்டணியில் யார், யாருக்கு மந்திரி பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.
இதில், அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் புதிய மத்திய மந்திரிகள் தேர்வு செய்யப் பட்டனர். அதன் பிறகு இன்று காலை அமித்ஷா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுபவர்களை பற்றிய முடிவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவையில் இணைய உள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் அனை வரும் டெல்லி லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமர் மோடி இல்லத்துக்கு உடனடியாக புறப்பட்டு வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுக்க இருக்கிறார் என் றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய மந்திரிகளாக தேர்வானவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள்.
அப்படி வந்தவர்கள் அனைவரும் இன்று இரவு புதிய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அந்த வகையில் பிரதமர் இல்லத்துக்கு வந்தவர்கள் விவரம் வருமாறு:-
அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, ஜே.பி.நட்டா, பியூஸ்கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன், சிவராஜ் சிங் சவுகான், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கட்டார், ஹர்ஸ் மல்கோத்ரா, சாவித்திரி தாகூர், ரன்வீத் சிங் பிட்டு, சர்பானந்த் சோனாவால், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, பங்கஜ்சவுத்ரி, அன்னப்பூர்ணதேவி, அர்ஜுன்ராம் மேக்வல், தர்மேந்திரபிரதான், ஜிதேந் திரசிங், ராம்தாஸ் அத்வாலே, கஜேந்திர செகாவாத் ஆகியோர் பிரத மர் இல்லத்துக்கு வந்தனர்.
இவர்களில் புதிய மந்திரிகள் ஆவது யார்-யார் என்று பிரதமர் மோடி இறுதி முடிவெடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான கூட்டம் இன்று ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. அதன் பிறகு பிரதமர் மோடி வீட்டில் இருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து பரபரப்பு தகவல்கள் வெளி யாக தொடங்கியது.
முந்தைய மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்தியானந்த் ராய், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, எஸ். ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் புதிய மந்திரி சபையிலும் இடம்பெறுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, தென் மாநிலங்களில் யார், யாருக்கு மந்திரி பதவிகள் வழங்கப்பட உள்ளன என்கிற விவரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஏற்கெனவே மத்திய இணை மந்திரியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி என்று தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை பா.ஜ.க. வுக்கு பெரும் பலத்தைக் கொடுத்த ஒக்கலிகர் சமூ கத்தின் வாக்கு வங்கியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலை வர் குமாரசாமிக்கு வேளாண் துறை ஒதுக்கப்பட லாம் என்று கூறப்படுகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே மத்திய மந்திரியாக இருந்த வருமான பிரகலாத் ஜோஷி மீண்டும் மந்திரி ஆகிறார்.
தேசிய ஜனநாயக கூட் டணியின் முக்கியக் கட்சி யான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு இணை மந்திரி பதவியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கேபினட் மந்திரியாக மோகன் நாயுடுக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அக் கட்சியின் பி. சந்திரசேகருக்கு நிதித் துறையின் இணை மந்திரி பதவியும் வழங்கப் படும் எனத் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரிக்கு இணை மந்திரி தனிப் பொறுப்புடன் வர்த்தக தொழில் துறையும், சி.எம். ரமேசுக்கு சுற்றுலாத் துறை இணை மந்திரி பதவி யும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தெலுங்கானாவிலும் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலை யில், ஏற்கனவே மத்திய மந்திரியாக இருந்த ஜி.கிஷன் ரெட்டிக்கு கேபினட் பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மாநி லத்தைச் சேர்ந்த பண்டி. சஞ்சய், டிகே அருணாவுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பீகாரை சேர்ந்த ஜிதன்ராம் மன்ஜிகி, சிராக் பஸ்வான் ஆகியோரும் மந்தரி சபையில் இடம் பெறுகிறார்கள். அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுபிரியா பட்டேலும் மந்திரியாவது உறுதியாகி இருக்கிறது.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
- பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார்.
மேலும் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட பலர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் செங்கோல் வழங்கப்பட்டது.
- பிரதமர் நரேந்திர நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.
சென்னை:
தமிழர் ஆட்சியின் பாரம்பரிய அடையாளமான 'செங்கோல்' புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்தபோது அங்கு பிரதமர் மோடியால் வைக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றதும் பிரிட்டீஷ் கவர்னர் மவுண்ட்பேட்டனும், நேருவும் ஆட்சி அதிகாரத்தை எவ்வாறு வழங்குவது என்று யோசித்தபோது ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் செங்கோல் வழங்கப்பட்டது.
அன்றைய தினம் நேருவிடம் வழங்கப்பட்ட அந்த செங்கோல் பின்னர் அருங்காட்சியகத்தில் இருந்தது. பிரதமர் மோடி அதை கண்டுபிடித்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் முறைப்படி கொண்டு வந்து வைத்தார்.
நீதி வழுவாத ஆட்சியின் அடையாளமாக போற்றப்படும் செங்கோல் பாராளுமன்றத்தில் இடம் பெற்றதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை கிடைத்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஆர்.கே. சவுத்ரி பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அது மன்னராட்சியின் அடையாளம். இங்கு நடப்பது மக்களாட்சி என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.
இந்த கருத்தை தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஆதரித்துள்ளார். செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் இதை ஆதரித்துள்ளது.
டி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, `செங்கோல் மன்னராட்சியின் அடையாளம். ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உள்பட இந்தியா கூட்டணியினர் செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மத்திய மந்திரி எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அரசு நடத்துவதில் செங்கோல் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை பற்றி திருக்குறள் பேசுகிறது. சுதந்திரத்திற்கு பின் பிரிட்டீஷ் கவர்னர் மவுண்ட்பேட்டனும், நேருவும் அதிகாரத்தை எப்படி ஒப்படைப்பது என்று ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.
அவர் செங்கோலை பயன்படுத்தி நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை காங்கிரஸ் ஓரம் கட்டிவிட்டது. செங்கோல் எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதை பிரதமர் மோடி கண்டு பிடித்து பெருமை சேர்த்தார்.
மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. சவுத்ரி, பாராளுமன்றத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளது கண்டனத்துக்குரியது.
தமிழக மன்னர்கள் தங்களின் மானமாகவும், நீதியின் சின்னமாகவும் காத்த செங்கோல், அவர்களின் காலத்துக்குப் பிறகு, சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் வழங்கப்பட்டன. அத்தகைய செங்கோலை புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் வைத்து பிரதமர் நரேந்திர நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.
சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் கடிதத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சியினரும் செங்கோல் மீது வெறுப்பை தெரிவித்து வருகின்றனர்.
செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் எனவும், ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை எனவும், அதனால்தான் அருங்காட்சியகத்தில் இருந்தது என்றும் தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து மூலம் 'இந்தியா'கூட்டணியினர் தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
- திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவரும் இணையமைச்சருமான எல்.முருகன் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூகவிரோத கும்பல்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோத கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ளார்கள்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கும் மற்றும் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவருக்கும் பாதுகாப்பில்லை. அதுவும் சென்னை பெரம்பூர் போன்ற முக்கிய நகர்ப்புறத்தில் சமூக விரோத கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடுவது போலி திராவிட மாடல் திமுக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல் துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளது.
வேங்கை வயல், கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணம் ஆகிய சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், செயலற்று நடவடிக்கை எடுக்காமல் நின்ற திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது.
போலி திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.