என் மலர்
நீங்கள் தேடியது "cricket match"
- குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது.
- விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது.
இதில் முதலிடம் பிடித்த தேரியூர் அணிக்கு ரூ.15ஆயிரத்தை குலசை ஊராட்சி தலைவர் சொர்ணபிரியாதுரையும், 2-வது இடம் பிடித்த குலசை ஹசனியா பவுன்சர் அணிக்கு ரூ.10ஆயிரத்தை தாண்டவன்காடு எஸ்.ஜி டிரேடர்ஸ், 3-வது இடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் அணிக்கு ரூ.6ஆயிரத்தை ஜெயா மல்டி ஸ்பெஷாலிட்டிகிளினிக், 4-வது இடம் பிடித்த குலசை ஹசனியா அணியிணருக்கு ரூ.4ஆயிரத்தை கிராமநிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர். தொடர்நாயகன் விருதினை தேரியூர் சதீஷ்க்கு ஹாஜி வழங்கினார்.
சிறந்த பேட்ஸ்மேனாக தேரியூர் ரவி, சிறந்த பவுலராக முகமது யூசுப், கவுதம், சிறந்த பீல்டராக சபீர், சிறந்த அணியாக விண்ணவரம் அணியினரும் பரிசுகளை பெற்றனர். கிரிக்கெட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு ஹாஜா, 11-வது வார்டு கவுன்சிலர் முகமது அபுல்ஹசன் ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- 10 அணிகள் பங்கேற்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டு சங்கத்தின் 2022 - 2023 ஆண்டுக்கான முதல் லீக் போட்டிகள் தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கியது. கிரிக்கெட் போட்டிக்கு திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஏ.சுந்தர் தலைமை தாங்கினார்.
அனைவரையும் செயலாளர், ஜெயச்சந்திரன், வரவேற்றார், திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிற்கு வீரர்களை அறிமுகம் செய்து கலெக்டர் பேட்ங செய்து தொடங்கி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும் (பொது) துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், தூயநெஞ்சக் கல்லுரி உடற் கல்வி இயக்குனர் டாக்டர்.பின்டோ தேவராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி தொடரில் முதல் பிரிவில் 10 அணிகளும், இரண்டாவது பிரிவில் 10 அணிகளும் விளையாடுகிறது.
முதல் போட்டியில் மொன்ஸ்டர் கிரிக்கெட் கிளப் அணியும் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடியனர்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும்
வேலூர்:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்கள் வேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி என 8 மண்ட லங்களாக பிரிக்கப்பட்டு 5 நாட்கள் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.
மண்டலம் 'பி-யில் அடங்கிய வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் வேலூர் நறுவீ மருத்து வமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணி வீரர்களை எதிரிகளாக பார்க்காமல், வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்த படியாகும் என்று வீரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து போட்டியா ளர்களை வாழ்த்தினார்.
இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் விளையாட்டு (கிரிக்கெட் போட்டி) குழு தலைவர் கூத்தரசன், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய் விக்னேஷ்வரன், துணைத் தலைவர்கள் கிருஷ்ண குமார். கங்காதரன், இணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அணியும் மோதின. கிரிக்கெட் போட்டிகளை சென்னையை சேர்ந்த் கே.எச். கோபிநாத் நடுவராக இருந்து வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்கிறார்.
மாவட்டங்க ளுக்கு இடையிலான மாநில அளவிலான இப்போட்டி யில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வெற்றி பெறும் இரண்டு அணிகள் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்கும்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடைபெற்றது.
- இறுதிப்போட்டி வரும் பொங்கல் அன்று நடைபெறும்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியில் கருப்பு சிங்கம் கிரிக்கெட் குழுவினர் கடந்த 13 வருடங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியை பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார்.
இது குறித்து கருப்பு சிங்கம் கிரிக்கெட் அணி குழு தலைவர் இந்திர விஜய் கூறுகையில், கடந்த 13 வருடங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை கள்ளிமேடு பகுதியில் நடத்தி வருகிறோம்.
அதேபோல இந்த ஆண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது இதில் பல்லடம், திருப்பூர், உடுமலை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொள்கின்றனர்.
இறுதிப்போட்டி வரும் பொங்கல் அன்று நடைபெறும். அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.
- மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஊட்டி
தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியை நகர மன்ற தலைவர் சீலா கேத்ரின் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜா தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வெலிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நகர செயலாளர் ராமசாமி பரிசு வழங்கினார். இரண்டாம் பரிசு கன்னி மாரியம்மன் கோவில் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன் வழங்கினார். அருகில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், செல்லின் ராஜ், சாதிக் பாட்சா, நகர துணை செயலாளர் முருகேசன் மற்றும் வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், கிளை செயலாளர் சிக்கந்தர் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்டம் மாணவர் அணி துணை அமைப்பாளர் விஜய், ராஜ், நந்தகுமார் சதீஷ்குமார், மதிவாணன், பாலச்சந்தர், மகாலி, சதீஷ் தினேஷ், வினோத்குமார், செல்வா, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெரும் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு, கோப்பை வழங்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர், தெள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்க ளுக்கான ஒரு மாதகாலம் நடக்க இருக்கும் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள மைதா னத்தில் தொடங்கியது.
முதல் நாள் தொடக்க விழாவில் மாவட்ட கவுன்சிலர் த.பாபு, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தனர். முதல் நாளான நேற்று 5-க்கும் மேற்ப்பட்ட அணிகள் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடின.
இதனையடுத்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அடுத்தடுத்த நடக்க இருக்கும் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதற்கான போட்டிகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடத்தபடுகிறது.
ஒரு மாதம் நடக்கும் இந்த போட்டிகளில் இறுதியாக வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 7 அடி உயர கோப்பையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 5 அடி உயர கோப்பையும் இதனைத்தொடர்ந்து 10 பரிசுகள் மற்றுன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளனர்.
மேலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு பல்வேறு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
இதில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிய வாலிபர் ஒருவருக்கு தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ரூ.500 அன்பளிப்பாக வழங்கினார். இதில் தெள்ளூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார்
- கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது
வேலூர்:
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் கட்டிட பொறியாளர்களுக்கான புரோ லீக் ( ஐ.சி.பி.எல்.)என்ற கிரிக்கெட் போட்டி தொடர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேலூர் சி.எம்.சி. மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்டது. போட்டிகளை வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார். இதில் 6 அணிகள் கலந்து கொண்டன.
கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் ரீஜியன் 5 அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதில் கட்டிட பொறியாளர்கள் அமைப்பு நிர்வாகிகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த சி.புகழேந்தி, நாகசுந்தரம், ஜி.சரவணமூர்த்தி, எம்.டி.பாலச்சந்தர், ஜெ.சிவசக்தி, பி முரளிதரன். ஏ.கோகுல தாஸ், ஆர்.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வாழ்த்து பெற்றார்.
- இவருக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் நடந்த சக்கர நாற்காலி ஆசிய கோப்பை கிரிக்கெட் 20- 20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார்.
இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி ஆசிய கோப்பை கைப்பற்றியது. மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வினோத் பாபுவுக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்ததற்காக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை காண்பித்து மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி கிரிக்கெட் கேப்டன் வினோத்பாபு வாழ்த்து பெற்றார்.
- சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணியில் சோலை ஈகிள் கிரிக்கெட் கிளப்பின் 35-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சோழசிராமணி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் பரமத்தி ராஜா கிரிக்கெட் கிளப் அணி முதல் பரிசு தொகையான ரூ.30,035-ம், சேலம் சகாரா கிளப் கிரிக்கெட் அணி 2-வது பரிசாக ரூ.25,035-ம், கபிலர்மலை ஆர்.எம்.சி.சி கிரிக்கெட் அணி 3-வது பரிசாக ரூ.25,035-ம், பிலிக்கல் பாளையம் டைரோ கிரிக்கெட் அணி 4-வது பரிசாக ரு.15,035-ம் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் ஊராட்சித் தலைவரும், மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை அமைப்பாளருமான தளபதி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கிரிக்கெட் கிளப் செயலாளர் பரத் வரவேற்றார். கலை சுந்தரராஜன் கிரிக்கெட் கிளப் மேலாளர் நாட்ராயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு தலைவர் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், சமூக அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.
பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்கு முதல் பரிசாக ரூ.15,012, வேலாயுதம்பாளையம் எஸ்.எஸ்.பாண்டியன் அணிக்கு 2-ம் பரிசாக ரூ.10,012, வெங்கரை பெப்சி அணிக்கு 3-ம் பரிசாக ரூ.7,012, கொடுமுடி கே.எம்.டி அணிக்கு 4-ம் பரிசாக ரூ.5,012 வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமலிங்கம், தீபா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பிரதிநிதிகள், பில்லர்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.
- முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கியது.
போட்டியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏக்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கிரிக்கெட் போட்டி நேற்று இரவு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் பரிசு கோப்பையுடன் ரூ.50ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும், 2-ம் பரிசு கோப்பையுடன் ரூ.30ஆயிரம், 3-ம் பரிசு கோப்பையுடன் ரூ.20ஆயிரம், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.5ஆயிரம் முறையே வழங்கப்பட உள்ளது. விளையாட்டில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் தொடக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜனதா இளைஞரணி துணைத் தலைவர்கள் உமாசங்கர், ராக் பெடரிக், மாநில செயலாளர்கள் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் மாநில வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாசப்பெருமாள், ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், பிரண்ட்ஸ் மொபைல் சரவணன், ஆனந்த கண்ணன், பிரபுதாஸ், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.