என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "station"

    • இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கூறும் போது:-

    கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன். இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை விட்டு விட்டனர்.

    இதனிடையே தனது மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றார். தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார். 

    • அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திறந்து வைத்தார்.
    • கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் வே.செழியன் திறந்து வைத்தார்.

    கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன்மொழி காங்கமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ஆதி மூலம், குமார், சுரேஷ், கனகராஜ், கணேசன், தமிழ்செல்வன், முருகேசன், ஜெயராமன் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் ராம கோவிந்தன், சிக்கந்தர், ராமு ,சிவ சக்திவேல்,தர்மர், விமல சேகர், முத்துசாமி, சதிஷ்குமார், செந்தில், பழனிவேல் முருகேசன், தண்டபாணி, மகேஸ்வரி, சேட்டு, கருணாநிதி உள்ளிட்டோரும், கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை நடைபெற உள்ளது.
    • அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியி–ட்டுள்ள செய்தி–க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் கீழவாசல் மின் வழித்தடத்தில் உள்ள கரம்பை முதல் புறவழி–ச்சாலை வரையும், வ.உ.சி. நகரில் மின் வழித்தடத்தில் ராமநாதன் மருத்துவமனை, மைனர் ஜெயில் ரோடு, திருச்சி ரோடு, தீர்க்க சுமங்கலி மகால், அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இரு–க்காது.

    இவ்வாறு அதில் கூற–ப்பட்டுள்ளது.

    • தகவல்கள் இணையத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றி மீண்டும் தாய் சேய் நல மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தாய் சேய் நல கண்காணிப்பு மையம் இன்று தொடங்கப்பட்டது. இம்மையத்தினை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார். துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லுகுளம், கரந்தை, மகர்நோன்புசாவடி , சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் 1212 கர்ப்பிணிகளில் 640 கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவம் சிசேரியன் அறுவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டு அவர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தின் மூலமாக செல்போன் வாயிலாக தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களின் சுகாதார குறியீடு அளவுகளின் அடிப்படையிலும், முறையாக பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பவர்களையும் கண்டறிந்து சிவப்பு நிறத்தில் அட்டவணைப்படுத்தி அவர்களின் தகவல்கள் இணையத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பின்னர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றி மீண்டும் தாய் தாய் சேய் நல் மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு இந்த தாய் சேய் நல மையத்தின் மூலம் மாதம் இருமுறை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு முறையான கர்ப்பகால கவனிப்பை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். மேலும் கர்ப்பகால உணவுமுறை உள்ளிட்ட பாதுகாப்பான தாய்மைக்கான ஆலோசனைகள் வழங்குதல்.

    கர்ப்பகாலத்தில் தடுப்பூசியை முறையாக தவறாமல் செலுத்தி கொள்வதை உறுதி செய்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் குறித்த வழிமுறைகளை விளக்கி கூறுதல், தாய் சேய் நல குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குதல்.

    அட்டவணைப்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல், அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பாக ஒருங்கிணைந்த பேறுகால அவசரகால சிகிச்சை மற்றும் சிசு பராமரிப்பு பிரிவுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    பேறுகாலம் நிறையுற்றபின் 42 நாட்கள் வரை தொடர்ந்து தாய் சேய் நல கவனிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தை 78458 49867 என்ற செல்போன் எண்ணில் தொடப்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களின் கர்ப்பகால இறப்பு மற்றும் சிசு இறப்பே இல்லை என்ற நிலையை எட்டுவதே இந்த தாய் சேய் நல மையத்தின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்விழாவில் மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்கள், தரவு உள்ளீட்டாளர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை அடுத்து கர்ப்பிணிகளுக்கு பேரிச்சம்பழம், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட பல்வேறு சத்து பொருட்கள் அடங்கிய தாய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முன்னதாக புள்ளி விபர உதவியாளர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் பகுதி சுகாதார செவிலியர் மல்லிகா நன்றி கூறினார்.

    • கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
    • புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரில் இருந்து உக்கடம் செல்லும் புட்டு விக்கி சாலையில் உள்ள புறக்காவல் நிலையம், புதிய கட்டிடங்கள் உடன் புனரமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அப்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், மதிவாணன், சுகாசினி, உதவி கமிஷனர் ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.

    அங்கு உள்ள போக்குவரத்து சாலையில் ஆங்காங்கே சிசிடிவி கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்படும. இதன்மூலம் அந்த பகுதியில் குற்றங்கள் குறைவதற்கு, இந்த புற காவல் நிலையம் ஏதுவாக அமையும் என்று தெரிவித்து உள்ளார்.

    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது.
    • வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு, 

    தமிழகத்தில் பள்ளிக ளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த தால் பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையேற்று ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது. இதனால் மீண்டும் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனையேற்று 2-வது முறையாக பள்ளி தேதி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 12-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், ஜூன் 14-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் நாளை பள்ளிகள் திறப்பையொட்டி வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதன்படி ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் நேற்று இரவு முதலே மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தொலைதூரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் முன்பதிவு நிரம்பிவிட்டன.

    இதனையடுத்து வெளியூரில் இருந்து ஈரோடுக்கு வரும் மக்கள் சிரமம் இன்றி வருவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.

    இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையங்க ளிலும் கடந்த 2 நாட்களாக பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றன. வெளியூர் சென்றவர்கள் குடும்பம், குடும்பமாக மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வரத் தொடங்கி யுள்ளனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் இடம் பிடிக்க மக்கள் போடா போட்டி போட்டனர்.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களிலும் அங்கிருந்து ஈரோடு வந்த ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பள்ளி திறப்பையொட்டி ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் போன்ற பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு புதிய புத்தகப்பை, நோட்டுகள், எழுதுப்பொருட்கள் வாங்க குவிந்தனர். இதேபோல் ஷூ, பெல்ட் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி திறப்பையொட்டி ஏற்கனவே பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

    • மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது.
    • இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது.

    மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வேலை நாட்களில் பணிக்கு செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும் பொழுது தங்களுக்கு தேவையான அஞ்சல் சேவைகளை தடையின்றி பெறலாம். சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல் பதிவு தபால்களை அனுப்புதல், மணி ஆடர்களை அனுப்புதல் , அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களை செலுத்துதல் போன்ற சேவைகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து திருச்செங்கோடு தலைமை அஞ்சலகத்திலும் இந்த சேவை விரிவுபடுத்தபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அதிகாரி உதயகுமார் மற்றும் துணை அஞ்சலக அதிகாரி தீபா முன்னிலையில் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அஞ்சல் உட்கோட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் சங்ககிரி அஞ்சல் உட்கோட்ட அதிகாரி நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    • மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த திட்டம்
    • மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் மாதிரி புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலையம் கடந்த 1873-வது ஆண்டு தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ்-அகல ரெயில் பாதைகளை உடைய மிகச்சில ரெயில் நிலையங்களில் மேட்டுப்பாளையமும் ஒன்று.

    மேட்டுப்பாளையம் - சென்னை இடையேயான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இந்த பாதை வழியாகவே கோவை வந்துசெல்கிகிறது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை தினமும் சராசரியாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. அங்கு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகனப் போக்கு வரத்திற்காக அகலமான பாதைகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் தனி நடைபாதைகள், வாகனங்களுக்கான தனி நுழைவு, மற்றும் தனியாக வெளியேறும் வசதிகள், 2 சக்கர-4 சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்தம் ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளன.

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலைய வளாகமும் அழகுபடுத்தப்பட உள்ளது. மேலும் பிரதான நுழைவாயில், முன்ப திவு அலுவலகங்கள், காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறைகளின் உட்புறங்களும் மேம்ப டுத்தப்படுகிறது. ரெயில்கள் நிற்கும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பலகைகள் பயணிக ளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    தொடர்ந்து நடைமேடை மேற்பரப்பு மேம்படுத்தப்படுகிறது. அங்கு கூடுதலாக நடை மேடை நிழற்கூரைகள் அமைய உள்ளன. மேலும் பழைய தங்குமிடங்கள் சீரமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது. லிப்ட், எஸ்கலேட்டர் வசதி செய்து தரவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் பாது காப்புக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இதுதவிர தூய்மையான குடிநீர் வசதி, மின்சார சிக்கனத்திற்காக ரெயில் நிலையத்தில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

    இத்தகைய சிறப்பம்சங்களுடன் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளது. இதற்காக அங்கு மாதிரி புகைப்படம் ஒன்றையும்தென்னக ரெயில்வே தற்போது வெளியிட்டு உள்ளது.

    நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும்  இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும்.  நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில்  நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

    பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும்  பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது  2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.

    எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.

     பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ்  இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
    ×