என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 1-ந் தேதி நடக்கிறது.
    • பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

    இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டமானது மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடை வளாகத்தில் நடைபெற்றது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ,திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி, திருப்பூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது எனவும், மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

    அவினாசி : 

    ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமையான மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களில் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 31 ஊராட்சிகளில் பணியாற்றும்செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெ றுகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் நடத்திட வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

    அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை, அதிகாரிகள் இக்கிராம சபைக் கூட்டத்தில் வெளியிட வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குடியரசு தினத்தை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது.

    பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்.கலெக்டர் அரவிந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சனை, உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

    கூட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்,திடக்கழிவு மேலாண்மை திட்டம் உட்பட பல்வேறு திட்ட பணி கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் அரவிந்த் கூறுகையில்:- குமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.

    பறக்கை ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் தனிநபர் உறிஞ்சி குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.நமது மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். எனவே பொதுமக்கள் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டாமல் அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் போட வேண்டும்.இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா ஆர்டிஓ சேதுராமலிங்கம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 95 ஊராட்சிகளில் 54 கிராம ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் இருப்பது மிகவும் பெருமைக்குரியது
    • 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊராட்சித் துறையின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பெண் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    குமரி மாவட்டத்திற்குட்பட்ட 95 ஊராட்சிகளில் 54 கிராம ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 73-வது திருத்தத்தின்படி பெண்கள் சுயமாக முடிவெடுத்தல், சமூக நடவடிக்கைகளில் பங்கெடுத்தல், சமுதாயத்தில் நலிவுற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு இன்றியமையதாகக் கருதப்பட்டு, ஊராட்சி அமைப்புகளில் மூன்றில் 1 பங்கு பதவியிடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்டம் 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது கிராம ஊராட்சியே ஆகும். கிராம ஊராட்சியில் பெண்கள் ஆண்களுக்கு, நிகராக சுய முடிவெடுத்து தங்களது நிர்வாகத்திறனில் முத்திரை பதிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சித்தலைவர்கள் எந்த ஒரு தனிநபர்களின் தலையீடும் இன்றி முழு சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கலெக்டர் ஸ்ரீதர் 9 வட் டார வளர்ச்சி அலுவலகங்களுக்குட்பட்ட பெண் கிராம ஊராட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கான வீட் டுவரி 2022-23 முழுமையாக வசூல் செய்த ஊராட்சி கள் குறித்தும், வணிக நிறு வனங்களுக்கான சொத்து வரி (வீட்டுவரி), சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கான சொத்து வரி, தண்ணீர் கட்டணம், தொழில்வரி முழுமையாக வசூல் செய்யப்பட்ட கிராம ஊராட்சிகள் குறித்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறியப்பட்டது.

    மேலும், புதிய கட்டடங்களுக்கான மின் இணைப்பு வழங்குதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பின் அவ்விபரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    10 ஆயிரம் சதுர அடி வரை பரப்பளவுள்ள 8 வசிப்பிடம் கொண்ட கட்டடங்களுக்கு (உயரம் 12 மீட்டர் வரை சில்ட் மற்றும் 3 தளங்கள் அல்லது தரைதளம் மற்றும் 2 தளங்கள்) ஊராட்சித் தலைவரால் கட்டிட வரை பட அனுமதி வழங்கலாம். வணிக நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் சதுர அடிவரை ஊராட்சித் தலைவரால் கட்ட அனுமதி வழங்குவது குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்ட பணிகளையும் கண்காணித்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • கும்பகோணம் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடம் கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினரும், கும்பகோணம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான அசோக்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.எஸ்.பாலசுப்ரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி லட்சுமி பிரியா, மாவட்ட பிரதிநிதி குணாளன், பேரூராட்சி உறுப்பினர்கள் குணசேகர், இளவரசி ராமலிங்கம், ராதிகா ஜெய்சங்கர், கலா ராமமூர்த்தி மற்றும் செழியன், ஆறு.மதியழகன், யூசுப், கோபால் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.
    • குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    பல்லடம் :

    உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்ப ட்டதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட ப்பட்டு இருந்தது. அதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சி னைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி, அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    இதேபோல செம்மிபா ளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமை யிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையி லும், மல்லேகவுண்ட ம்பாளை யத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளுக்கும் இணையதள சேவை கிடைக்கும்.
    • 31-ந் தேதிக்குள் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    பாரத்நெட் திட்டத்தில் அதிவேக இணையதள வசதியுடன் ஊராட்சிகளில் இ-கிராம சேவை மையம் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது.நகரங்களுக்கு இணையாக, கிராமங்களுக்கும் இணை யதள சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கு டன், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளுக்கும் இணையதள சேவை கிடைக்கும். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்து றை அதிகாரிகள் கூறுகை யில், பாரத் நெட் திட்டத்தில் , இ-கிராமசேவை மையம் துவங்க இருப்பதால் 31-ந் தேதிக்குள் உட்கட்ட மைப்பு பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான பணி நிறைவடைந்த நிலையில் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    இ-கிராம சேவை மையத்தில் அதி வேக இணைய தள வசதி யுடன் ஊராட்சி மக்களுக்கு அனைத்து வகை சேவை களையும் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது என்றனர். 

    • ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
    • உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் பேசியதாவது:- காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஊராட்சி சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலைகள் ஊராட்சி வசமே இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலை மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை ஊராட்சிகளுக்கு வழங்கி அதன் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களான செல்வம் ராமசாமி, தாபினி மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, ஐயனார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி 5 ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க பள்ளி பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால் தொடக்க கல்வி பயில்வதற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஊராட்சி சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் தொடக்கப்பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் கோட்டைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2023-24 கல்வியாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டால் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதாக மக்கள் உறுதி அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் மற்றும் கோட்டைபட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார்.

    கள்ளக்கறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எலவனாசூர்கோட்டை, இறையூர், குன்னத்தூர், கிளியூர், காட்டுயடியார் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான ப. ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான யூ.எஸ். வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், ராஜேந்திரன், மேலாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், வழக்கறிஞர் சிவசங்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், சிவா, பாலசிங்கம், அனுசியா ஆரோக்கியராஜ், துணைத்தலைவர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ×