என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு திட்டங்கள்"

    • அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபைகூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
    • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், படியூர்ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது :- இனி வரும் காலங்களில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ந்தேதி மற்றும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர்-1ந்தேதி என 6 முறை கிராம சபைகூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும்கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டுஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும் போது அந்த ஊராட்சியின்அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபைகூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.

    இது போன்ற கிராமசபை கூட்டத்தில்திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தைகடைபிடித்தல், வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர்சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. குழுக்கள் மிகவும்குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு குழுக்களுக்கு 12 நபர்கள் இருந்தால் போதும். அவ்வாறு குழுக்கள் அமைக்கும் போது ரூ.1லட்சம் முதல் கடனாக வழங்கப்படுகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்லமுறையில்பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய நிதியாக ரூ.1.10லட்சம் மதிப்பீட்டில் காசோலையையும், புதிய வங்கி கணக்கு புத்தகங்களையும், வேளாண்மை த்துறையின் சார்பில் ரூ.4.500 மதிப்பீட்டில் ரூ.2,000 மானியத்தில் விசை தெளிப்பானையும் கலெக்டர் வினீத் வழங்கினார். தொடர்ந்துபொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன்,தாராபுரம் கோட்டாட்சியர்குமரேசன், முன்னோடி வங்கி மேலாளர்அலெஸ்சாண்டர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், படியூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்ராகவேந்திரன், நிர்மலா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர்-திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்பட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    குறிப்பாக நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பூங்கா (திறந்தவெளி காலி இடம்) மேம்பாடு செய்தல், அம்ரூத் திட்டத்தின் கீழ் விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள், கட்டிட மேற்கூரையில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,பிற துறைகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்துணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் நியாய விலைக்கடைகள், புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மத்திய அரசு திட்டமானாலும், மாநில அரசு திட்டமானலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சுப்பராயன் எம்.பி., தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைதுறை, கால் நடைதுறை, ஊராக வளர்ச்சிதுறை ஆகிய துறைகள் இணைந்து விவசாயி களுக்கு ஆலோ சனைகள் நேற்று வழங்கப்ப ட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் வரவேற்றார். இதில் தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு செயல்படுத்தும் வேளாண் திட்டங்கள் குறித்து விவ சாயிகளுக்கு தெரிவிக்க ப்பட்டது. மேலும், மண்மா திரி சேகரித்தல், மண்வள அட்டை பயன்பாடு குறித்தும், மண்வளம், இணை யதளம் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதேபோல் கால்நடை மருத்துவர் கவிதா கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்புமுறை, தடுப்பூசி பயன்பாடு, கால்நடை பராமரிப்பு குறித்து எடுத்து கூறினார். தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்க லை உதவி இயக்குனர் சிவாமலை கலந்து கொண்டு நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம், பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழமர செடி தொகுப்புகள் வழங்கப் பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஆரோக்கியசாமி, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கோடு கல்யாணி கிருஷ்ணன், செல்வராஜ், ஆன்டி சீனுவாசன், குப்புசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் விரிவாக விளக்குகிறார் TNAU ஏ.வி. ஞானசம்பந்தம்.
    • அனைவரையும் தொழிலதிபர்களாக்கும் நோக்கத்தோடு இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

    முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கனவுகள் காண்பதும், இலக்குகள் நிர்ணயிப்பதும் இயல்பு.

    அந்த வகையில் மக்களின் வேளாண் சார்ந்த தொழில் கனவுகள் நிறைவேற ஓர் அற்புத களத்தை உருவாக்கியுள்ளது ஈஷா மண் காப்போம் இயக்கம்.

    இவ்வியக்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று கோவையில் "அக்ரி ஸ்டார்ட்-அப்" திருவிழா நடைபெறுகிறது.

    புதிதாக வேளாண் சார்ந்த தொழில் தொடங்குபவர்களுக்கு தாங்கள் துவங்கப் போகும் தொழில் சார்ந்த தெளிவான பார்வை இருந்தாலும் கூட அதை நடைமுறைப் படுத்தும் போது பல சந்தேகங்கள் எழும்.

    ஒரு தொழிலை முறையாக எப்படி பதிவு செய்வது என்பது தொடங்கி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரையில் இருக்கும் அரசு நடைமுறைகள் மற்றும் அதற்கு ஆதரவாக இருக்கும் அரசுத் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கும்.

    இது அனைத்திற்கும் தீர்வளிக்கும் வகையில் TNAU தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலர் அலுவலர் திரு.ஏ.வி. ஞான சம்பந்தம் அவர்கள் "வேளாணில் வணிக வாய்ப்புகள்" என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார்.

    இதில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்குவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேச உள்ளார். TNAU வில் செயல்படும் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் மூலம் வேளாண் சார் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

    வேளாண் சார் தொழில்களுக்கு அத்தியாவசியமான தொழிநுட்ப வழிகாட்டுதல்கள், வணிக மேலாண்மை பயிற்சிகள், சந்தை வாய்ப்புகள், தேசிய அளவிலான கண்காட்சிகள், வங்கி மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைப்பு ஆகிய பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.

    ஞான சம்பந்தம் இத்திட்டங்கள் குறித்தும் இவற்றை எப்படி பெறுவது என்பது குறித்தும் விரிவான தகவல்களை இந்த அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

    விவசாயிகள் மற்றும் வேளாண் சார் தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரையும் தொழிலதிபர்களாக்கும் நோக்கத்தோடு இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

    இதில் விவசாயியாக இருந்து தொழில் முனைவோராக ஜெயித்த பல முன்னனி தொழிலதிபர்கள், சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்கிறார்கள். மேலும் விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டுவது எப்படி, அதை பேக் மற்றும் பிராண்டிங் செய்வது, மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதி என அனைத்து அம்சங்களிலிலும் வழிகாட்ட வேளாண் வல்லுநர்கள் வருகை தருகிறார்கள்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • இனி உங்களுக்கான வீட்டில் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
    • பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், கண்ணப்பர் திடலில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணப்பர் திடலில் உள்ள வீடற்றோர் குடியிருப்பில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு இன்று புதிய வீடுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த தேர்தலின் போது உங்களுக்கெல்லாம் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அடுத்த ஆண்டுக்குள் வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல இந்த ஆண்டு வீடுகள் கட்டப்பட்டு உங்களிடம் தரப்பட்டுள்ளது.

    இனி உங்களுக்கான வீட்டில் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். இவ்வளவு நாட்கள் வீடு இல்லாதவர்களுக்கு அரசில் பலன்கள் உங்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இனி எளிமையாக கிடைக்கும்.

    உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய திராவிட மாடல் அரசு தயாராக உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல நீங்கள் பங்கேற்பாளர்கள். எனவே அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், தாயகம் கவி, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்திய அரசாங்கத்துடன் இணைந்து $750 மில்லியன் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது
    • USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளது.

    இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாகக் கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் USAID அமைப்பிடம் பெற்ற நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், அமெரிக்க நிறுவனமான USAID, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து 750 மில்லியன் டாலர் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி  வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் அல்லது வாக்கு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

     

    ரூ. 6,498 கோடி (750 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் விவசாயம்-உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், குடிநீர்-சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை-சுகாதாரம், நிலையான காடுகள்-காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை(innovation) திட்டங்களுக்காக USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக குறிப்பிட்ட டிரம்ப் உடைய கூற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.  

    • இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள்.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் அம்மாநில காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால் இமாச்சலப் பிரதேச அரசு , சில நலத்திட்டங்களுக்கு நிதியளிக்க கோவில் அறக்கட்டளைகளின் உதவியை நாடியுள்ளது . காங்கிரஸ் அரசின் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், "கடந்த கால எந்த அரசாங்கமும் பட்ஜெட் திட்டங்களுக்கு கோவில் அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்தியதில்லை. வழக்கமான அரசு செலவுகளுக்கு கோவில் நிதியைப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள், மறுபுறம், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கொள்கைகளுக்கு நிதியளிக்க கோவில் நன்கொடைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.காங்கிரஸ் அரசின் இந்த முடிவை கோவில் கமிட்டி, பொதுமக்கள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.

    விவசாயிகளுக்கு நிவாரண உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 11வது தவணை நிதியை பிரதமர் இன்று வழங்குகிறார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன், இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

    பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம் , பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம்,  ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக ரூ.21,000 கோடிக்கு  தொகையை பிரதமர் விடுவிக்கவுள்ளார்.

    மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் வழியாக மாநில முதலமைச்சர்கள், மத்தி, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் காணொலி மூலம் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×