என் மலர்
நீங்கள் தேடியது "Summer"
- சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவான நிலையில் பின்னர் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
இந்தநிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 101.1 டிகிரி வெயில் பதிவான நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து 103.3 டிகிரி பதிவானது. இது நடப்பாண்டில் உச்ச பச்ச வெயில் பதிவாகும். இதனால் வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிக அளவில் இருந்தது. சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தொப்பி அணிந்த படியும், குடைகள் பிடித்த படியும் பொதுமக்கள் சாலைகளில் சென்றனர். மேலும் தாகத்தை தணிக்க இயற்கை மற்றும் செயற்கை குளிர்பான கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
- புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.
- கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும்.
புதுச்சேரி:
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி விளங்குகிறது. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை புதுச்சேரியை நோக்கி மதுப்பிரியர்களை இழுக்கச் செய்கிறது.
புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன. புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது.
புதுவையில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதேபோல் புதுவையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.
டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுவையில் பீருக்கு என தனியான எக்ஸ்குளூசீவ் பார்கள் உள்ளது.
கோடை காலம் வந்து விட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். புதுவையில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதித்குள்ளாகி உள்ளனர்.
கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும். இதனால் மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.
இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.
சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.
- கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது.
- கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
கோடைவெயிலில் இருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பங்கூழை அருந்தலாம். கம்பங்கூழ் என்பது நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவே உள்ளது.
கம்பு, கேப்பை உள்ளிட்ட தானிய வகைகளை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக கூழ் கஞ்சி போல செய்து தங்களின் பிரதான உணவாகவே சாப்பிட்டு வந்தனர்.

20 வருடங்களுக்கு முன்பு தினசரி தமிழகத்தில் உள்ள அனைவரது வீட்டிலும் இந்த கம்பங்கூழை சாதாரணமாக தயாரித்து சாப்பிட்டு வந்தனர். இன்னும் அம்மன் கோவில் திருவிழாக்களில் திருவிழா நிறைவு பெறும் நாளிலும், ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் கம்பங்கூழ், கேப்பைகூழை அம்மனுக்கு பிரசாதமாக படைத்து ஊர் மக்களுக்கு அதனை பருகி வருகின்றனர்.
இந்த கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது. சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது. இந்த கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது வழக்கம்.
மிக முக்கியமாக உடல் சூட்டின் காரணமாக இளம் வயது வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கான பாரம்பரியமான அற்புத பானம் தான் இந்த கம்பங்கூழ். இது எங்கு கிடைத்தாலும் நாம் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஆரோக்கியமானது இது.
உடல் சூட்டை தணிப்பதாக நினைத்து சாலையோரங்களில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதே சாலையோரங்களில் விற்கப்படும் பாரம்பரிய உணவான கம்பங்கூழ் வாங்கி சாப்பிட்டால் நமது உடல் சூடு முழுவதுமாக குறையும்.
பாரம்பரிய தானிய வகைகளில் ஒன்றான கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். கம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவைகள் நிறைந்துள்ளது.
வைட்டமின் ஈ, பி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிம சக்திகள் பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை கம்பில் நிறைந்துள்ளது.
தினமும் காலை மோர் கலந்த குளிர்ச்சியான கம்பங்கூழ் குடிக்கும்போது உடல் சூடு குறைந்து நாள் முழுவதும் பசி உணர்வு இல்லாமல் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். கம்பங்கூழ் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.
கம்பை தினமும் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல், ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினையையும் இது போக்க உதவுகிறது.
கம்பங்கூழில் உள்ள ட்ரிப்டோ பேன் என்ற அமினோ அமிலம் நம் பசி உணர்வை குறைத்து உடல் எடையை நிர்வகிக்க உதவும். கம்பங்கூழை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.
இதேபோல கோடைவெயில் காலத்தை பொருத்தவரை தாகம் தணிப்பதில் தர்பூசணி முக்கிய இடத்தை பெறுகிறது. விலையும் மலிவு என்பதால் சாலையோர தர்பூசணி கடைகளில் விற்பனை தற்போது களைகட்டி வருகிறது.

அங்கு தற்போது ஒரு பிளேட் அல்லது ஒரு சிறு துண்டு தர்பூசணி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு பழமாக வாங்கினால் கிலோ ரூ.25-க்கு தருகின்றனர்.
மேலும் சாலையோர பகுதிகளில் கரும்பு மற்றும் சாத்துக்குடி சாறு பிழியும் விற்பனை கடைகளையும் அதிகளவில் பார்க்க முடிகிறது. அங்கு இளைஞர்களில் பலர் ஐஸ் கட்டி போட்ட கரும்பு ஜூஸை அதிகம் விரும்பி பருகுகின்றனர். பெண்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜூஸை விரும்பி குடித்து செல்கின்றனர்.
அதுவும்தவிர சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் நன்னாரி சர்பத், ஐஸ் மோரின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

நன்னாரி சர்பத்தின் சுவை பலருக்கும் பிடிக்கும் என்பதால், மதிய நேரங்களில் தள்ளு வண்டி குளிர்பான சர்பத் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.
அதே போல நீர்மோர் விற்பனையும் களைகட்டத் தொடங்கி உள்ளது. அங்கு ஒரு டம்ளர் சர்பத் ரூ.25-க்கும், மோர் ரூ.20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாலையோர கடைகளில் இளநீர் எல்லா நாட்களில் கிடைக்கிறது.
ஆனால் பதநீரும், நுங்கும் கோடை சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் பதனீர் கடைகளை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்தி விட்டு பதனீர் குடித்து செல்கின்றனர். அங்கு ஒரு டம்ளர் பதநீர் ரூ.30-க்கும், நுங்கு கலந்த பதநீர் ரூ.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 27ம் தேதி முதல் ஈரப்பதம் இல்லாத சூழல் உள்ளதால் வெயில் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
- வேலூரில் வரும் 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27ம் தேதி முதல் ஈரப்பதம் இல்லாத சூழல் உள்ளதால் வெயில் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
- ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது
- கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.
மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.
ரோமை சார்ந்த மல்யுத்த வீரர்கள் உடல் அழகு கூடும் என்பதற்காக வெங்காயத்தை அரைத்து உடலில் பூசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.
வெயில் காலம் வந்து விட்டது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வியர்வையுடன் வீடு திரும்பும் அனைவரும் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஒரு வெங்காயத்தை பொடிதாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீர்க்கடுப்பு வராது. குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலந்தும் நெய்யில் வறுத்தும் சாப்பிட கொடுக்கலாம். இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.
வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது.
பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது.
நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும்.

வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்.
நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.
- தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொளுத்துகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுவாகவே கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.
- கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது.
தென்காசி:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.
இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி, தேனருவி என்ற பல்வேறு அருவிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு.
தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் அருவியாக ஓடி வருவதால் அந்த நீரில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன. இதில் நாம் குளிக்கும்போது உடலுக்கு பெருமளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவது உண்டு.
இங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நிலவும். அந்த நேரங்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து அருவிகளில் குளிப்பார்கள்.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் தண்ணீர் கொட்டும். ஒருசில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத தொடக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட தொடங்கிவிடும்.
கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் நீரை நம்பி இருந்த பாசன குளங்கள் ஏராளமானவை நிரம்பின. இதனால் விவசாயம் ஓரளவு செழித்தது.
இந்நிலையில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கின்றன. புலியருவி முற்றிலுமாக வறண்டுவிட்டது.
மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் லேசாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறிச்சோடி கிடக்கும் அருவி மற்றும் அருவிக்கரைகளை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.
- நாடு முழுவதும், எதிர்பார்த்ததை விட வெயில் அளவு அதிகமாக உள்ளது.
- மின்சார தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு மத்திய மின்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும், எதிர்பார்த்ததை விட வெயில் அளவு அதிகமாக உள்ளது. வெயில் அதிகரிப்பதால், மின்சாரத்தின் தேவையும் உயர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கான அதிகபட்ச மின்தேவை 230 ஜிகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20-ந் தேதி, உச்சபட்ச மின்தேவை 205.52 ஜிகாவாட்டாக அதிகரித்தது. அன்றைய தினம் 4 ஆயிரத்து 281 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.
எனவே, மின்சார தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு மத்திய மின்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் இயங்கும் 15 அனல்மின் நிலையங்கள் தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
டாடா பவர், அதானி மின்நிலையங்கள், எஸ்ஸார் மின்உற்பத்தி நிலையம், ஜே.எஸ்.டபிள்யூ ரத்னகிரி, மீனாட்சி எனர்ஜி உள்பட 15 அனல்மின் நிலையங்களுக்கு இதுதொடர்பான நோட்டீசை பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டின் கோடைகால மின்தேவை அதிகரித்து வருகிறது. ஆகவே, மார்ச் 16-ந் தேதியில் இருந்து ஜூன் 15-ந் தேதிவரை, தங்களது அனல்மின் நிலையங்கள், இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தி, தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.
இதன்மூலம் கோடைகால மின்தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம்.
- கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம்.
சென்னை:
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வீட்டில் ஏர்கூலர், ஏ.சி. என எந்திரங்கள் வந்தாலும் இன்னும் பனை ஓலை விசிறியை மக்கள் மறக்காமல் உள்ளனர். பனை ஓலை விசிறியை வீசும்போது அதில் இருந்து ஜில்லென்று வரும் காற்று உடல் நலத்துக்கு ஏற்றது. பல இடங்களில் பனை ஓலை விசிறிகள் தயாரிக்கப்பட்டாலும் திருத்தணி பகுதியில் தயாராகும் பனை ஓலை விசிறிக்கு மவுசு அதிகம் தான். மிகவும் நேர்த்தியாக வண்ண, வண்ண கலரில் தயாரிக்கப்படும் திருத்தணி பனை ஓலை விசிறியை ஏராளமானோர் கேட்டு வாங்கி செல்கிறார்கள்.
திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை அருகே உள்ள சிறுகுமி கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தயாரிக்கும் பனை ஓலை விசிறிகள் அதிக அளவில் சென்னைக்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
சிறுகுமி கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக பனை ஓலை விசிறி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பனை ஓலை தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு விசிறி ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து விசிறி தயாரிக்கும் 70 வயதான ருக்குமானந்தன் கூறியதாவது:
நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம். தற்போது இளைய தலைமுறைகள் படித்து பட்டம் பெற்று வேலைக்கு சென்று விட்டனர். இதனால் இந்த தொழிலில் குறைவானவர்களே இன்னும் ஈடுபட்டு வருகிறார்கள்.
வசந்தி :
எங்களுக்கு இந்த தொழிலைவிட்டால் வேறு எதுவும் தெரியாது. ஒரு நாளைக்கு 40 முதல் 50 விசிறிகள் வரை செய்கின்றோம். குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. எனினும் நாங்கள் தொடர்ந்து செய்து வந்த தொழிலை விட மனது வரவில்லை.
சோமநாதன்:
தற்போது கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம். வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பனை ஓலை விசிறி வியாபாரம் சூடுபிடிக்கும்.தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும் பனை ஓலை விசிறிகளை அதிக அளவில் வாங்கி உபயோகிக்கின்றனர்.கோடை காலம் தொடங்க உள்ளதால் பனை ஓலை அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் இதற்கு உதவி செய்து பனை ஓலை விசிறி தயாரிப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தற்போது போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது.
- வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
செங்கோட்டை:
கேரள மாநிலம் ஆரியங்காவில் பாலருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் என்பதால் சுற்றுலா பயணிகள் எப்போதும் அதிகளவில் விரும்பி செல்வது வழக்கம்.
தற்போது போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. கோடை காலம் தொடங்கி உள்ளதையடுத்து குற்றாலம் மற்றும் ஜந்தருவிகளில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது. இதனால் அருகே உள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
இங்குள்ள வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அங்கிருந்து அரிய வகை வனவிலங்குகளுக்கோ, அருவியில் குளிக்க வரும் பயணிகளுக்கோ ஆபத்து வரலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
எனவே பாலருவியை மூடிவிட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை முதல் மே மாத இறுதிவரை பாலரு விக்கு செல்லவோ, அருவியில் குளிக்கவோ சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
வன விலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். அவை பாலருவியில் விழும் குறைந்தளவு தண்ணீரை குடிக்க அருவி பகுதிக்கு படையெடுத்து வரும் என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பாலருவியை மூடியிருப்பதாக வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
வருகிற மே மாதம் கடைசியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையை பொறுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நீர் இருப்பு சதவீதம், 67.46 ஆகும்.
- வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
உடுமலை :
உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.ஏழு குளங்களில் பெரிய குளம் 404 ஏக்கர் பரப்பளவும், 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். தற்போதைய நிலவரப்படி இக்குளத்தில் 7.90 அடி நீர்மட்டமும், 47.60 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர் இருப்பு சதவீதம், 67.46 ஆகும்.
செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரமும், 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். இதில் 5.10 அடி நீர்மட்டமும், 5.08 மில்லியன் கனஅடி நீர்இருப்பும், நீர் இருப்பு சதவீதம் 39.87 என மிகவும் குறைவாக காணப்பட்டது. ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். இங்கு 7.00 அடி நீர்மட்டமும், 8.40 மில்லியன் கனஅடி நீர்இருப்பும், நீர்இருப்பு சதவீதம் 59.53 ஆக உள்ளது.செட்டிகுளம் 67.49 ஏக்கர் பரப்பளவில், 7.5 நீர்மட்ட உயரம், 7.93 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இக்குளத்தில் 4.70 அடி நீர் மட்டமும், 4.06 மில்லியன் கனஅடி நீர்இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம், 51.19 ஆகும். தினைக்குளம் 51.19 ஏக்கர் பரப்பளவில் 9.25 அடி நீர்மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கனஅடியாகும். தற்போதைய நிலவரப்படி 8 அடி நீர்மட்டமும், 6.50 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், நீர்இருப்பு சதவீதம் 89.90 ஆக உள்ளது. கரிசல் குளம் 31.22 ஏக்கர் பரப்பளவு, 7.65 அடி நீர்மட்டம், 2.92 மில்லியன் கனஅடி நீர் இருப்பு கொண்டது. இங்கு 7 அடி நீர்மட்டமும், 2.60 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம் 89.04 ஆகும். அம்மாபட்டி குளம் 31.22 ஏக்கர் பரப்பளவில், 4.50 அடி நீர்மட்டம், 1.76 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். 3.30 அடி நீர்மட்டமும், 1.56 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. சதவீதம் 88.63 ஆகும். வலையபாளையம் குளம் 52.80 ஏக்கர் பரப்பளவில், 4.20 அடி நீர்மட்டமும், நீர் கொள்ளளவு 7.79 மில்லியன் கனஅடி உடையதாகும். இங்கு 4.20 அடி நீர்மட்டமும், 3.17 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம் 40.69 ஆகும்.இக்குளங்களில் 75 சதவீதத்திற்கும் மேல் 3 குளங்களிலும் 50 சதவீதத்திற்கும் மேல் 3 குளங்களிலும் பாதிக்கும் குறைவாக 2 குளங்களிலும் நீர் இருப்பு உள்ளது.
கோடை காலம் முன்னதாகவே துவங்கியுள்ள நிலையில் உடுமலை பகுதியிலுள்ள குளங்களில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. குளங்கள் வழியாக 2,756 ஏக்கர் நிலங்களிலும், நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகக்கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.இப்பகுதிகளில் கரும்பு, தென்னை, வாழை, காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தேவையான நீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் வரை நீர் கொண்டு வரப்படும். விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பு கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.
உடுமலை பெரிய குளத்தில் பழங்காலத்தில் நீர் அளவீடு, நீர் தேங்கும் பரப்பிலுள்ள மகுளி எனப்படும் மண் சேருவதை தடுக்கும் வகையிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நீர் நிர்வாகத்துக்காக குளத்தில், தூம்பு அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூம்பின் கீழ் மட்ட வழிந்தோடி வழியாக தண்ணீர் திறக்கும் போது மகுளி மண் தேங்காது.நூற்றாண்டுகள் பழமையான இந்த தூம்பு இப்பகுதி நீர் மேலாண்மையில் சிறப்பு பெற்றிருந்தது என்பதற்கான சாட்சியாக உள்ளது.நீர் இருப்பு இருக்கும் போது வெளியில் தெரியாது. தற்போது குளத்தில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் இது வெளியில் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தூம்பு வெளியில் தெரியாத அளவுக்கு கோடை காலத்திலும் நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- நெல்லை மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
- கடைகளில் பழச்சாறு, தர்ப்பூசணி ஜூஸ் விற்பனை அமோக உள்ளது.
நெல்லை:
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட முன்னதாகவே இந்த மாதம் தொடக்கத்திலேயே அதிகளவு வெயில் வாட்டி வந்தது.
சுட்டெரிக்கும் வெயில்
நெல்லை மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. அத்தி யாவசிய தேவை மற்றும் பணிகளுக்காக செல்வோர் குடை பிடித்தபடி சென்று வருகிறார்கள்.
பகலில் இப்படி என்றால் இரவில் வீட்டிற்குள் எத்தனை மின் விசிறிகள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் சிலர் வீட்டின் முற்றத்திலும், மாடிகளிலும் தூங்கி வருகிறார்கள்.
கோடை மழை
இந்நிலையில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வளி மண்டல சுழற்சி காரணமாக மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இதனால் கடும் வெயிலால் தவித்து வந்த மக்கள் குளிர்ச்சியான கால நிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே நெல்லை மாநகர பகுதிகளில் கடும் வெயில் வாட்டியது. கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொது மக்கள் குளிர்பானங் களை நாடிச்செல்வது வழக்கம். இதையொட்டி அந்த கால கட்டத்தில் சாலை யோரங்களில் புதிதாக தற்காலிக கடைகள் அதிகளவில் தோன்றுவது வழக்கம்.
குளிர்பான விற்பனை
அதன்படி நெல்லை, டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் புதிது புதிதாக குளிர் பான கடைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கடை களில் பழச்சாறு, குளிர் பானங்கள், தர்ப்பூசணி ஜூஸ், பதநீர் விற்பனை அமோக உள்ளது.
இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளில் வருபவர்கள், பாதசாரிகள் குளிர்பான கடைகளை பார்த்ததும் சற்று இளைப்பாரி பழசாறு, நுங்கு, பதநீர் உள்ளிட்டவை களை அருந்தி செல்கிறார் கள்.
இதே போல் கம்பு, சோளம், ராகி கூழ் ஆகிய வையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப் படுகிறது. சில இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப் பட்டுள்ளது.
பழச்சாறு
இதே போல் பழக்கடை களிலும் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்டவை களை பொதுமக்கள் அதிக ளவு வாங்கி செல்கிறார்கள். பகல் நேரங்களில் அதிகளவு வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மாலை நேரங் களில் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருகிறார்கள்.
நெல்லை மாவட்ட அறிவியல் மையம், பாளை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் இன்று விடுமுறை நாளை யொட்டி காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு உற்சாகமாக விளை யாடி மகிழ்ந்தனர்.
கொக்கிரகுளம் மற்றும் பாளை வ.உ.சி. மைதான பகுதிகளில் ஏராளமான தற்காலிக குளிர்பான கடை கள் அமைக்கப் பட்டுள்ளது. அங்கும் இன்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.