என் மலர்
நீங்கள் தேடியது "மீன்பிடி திருவிழா"
- திருப்பத்தூர் அருகே கண்மாய் பராமரிப்பு நிதிக்காக நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
- கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசெவல்பட்டியில் புது கண்மாய் பராமரிப்பு பணிக்காக நிதி திரட்டுவ தற்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப் படுவது வழக்கம். இந்த ஆண்டும் விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் வற்றியது.
இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். கண்மாய் மடை பராமரிப்பு மற்றும் இதர பராமரிப்புக்கு நிதி திரட்ட முடிவு செய்து ஊத்தா கூடை மூலம் முதலில் மீன் பிடிக்கவும், தொடர்ந்து கிராமமக்கள் மீன்பிடித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.
கீழ செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரிய வர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சா, அரி, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகர ணங்களை கொண்டு ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்று மையாக கண்மாயில் மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத் தன. கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.
- மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
- மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் அவதரித்த இங்கு பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் திருவாதவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வருடந்தோறும் விவசாயம் முடிந்தவுடன் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி விவசாய பணிகள் முடிந்த நிலையில் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், சிறுவர்-சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் நேற்று இரவு முதலே கண்மாய் கரையில் திரண்டனர். இன்று காலை ஊர் பெரியவர்கள் கொடியசைத்ததுடன் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, உளுவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. சிலருக்கு குறைந்த அளவு மீன்கள் கிடைத்தன.
மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
- விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே கிராமத்தில் வழக்கமாக உள்ளது.
- ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ளது வெற்றியூர் கிராமம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மருதுடைய அய்யனார் கோவில் அருகில் பெருவஞ்சி கண்மாய் உள்ளது.
இந்த கண்மாயின் மூலம் 85 ஹெக்டர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே இந்த கிராமத்தில் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன் பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் கொடுங்குளம், புதுவெட்டி, சாத்தரசன்பட்டி, காளக் கண்மாய், கருங்குளம், வாவாரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.
முன்னதாக கிராம பெரியவர்கள் துண்டை அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
இதில் விரால், கெழுத்தி, கெண்டை, சிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கின. அதனை கிராம மக்கள் மகிழ்ச்சியாக அள்ளி சென்றனர். ஒரே நேரத்தில் பலர் மீன்களை பிடித்த சம்பவம் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
- சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்
- கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும்.
நத்தம்:
நத்தம் தாலுகா சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டி கேசரி கண்மாயில் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆண்டுதோறும் மழை காலத்தில் கேசரி கண்மாயில் நீர் சேகரிக்கின்றனர். கண்மாயில் நிறைந்த நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். கோடையில் நீர் வற்றும் போது மீன்பிடி திருவிழா நடைபெறுகிறது.
சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காலை முதலே கண்மாயில் பொதுமக்கள் குவிந்தனர். முதற்கட்டமாக வெளியூர், உள்ளூர் நபர்களுக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். விரால், ஜிலேபி கெண்டை ஆகிய மீன்களை பிடித்தனர்.
கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும். இதையடுத்து கட்டணம் இன்றி கிராமத்தினர் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் தங்களிடம் உள்ள வலை, பரி, கச்சா, கூடை, கொசுவலை, சேலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடிக்கும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
முடிவில் தங்களுக்கு கிடைத்த மீன்களை பலருடன் பகிர்ந்து கொண்டன்ர். இதனால் பக்கத்து கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் மீன் குழம்பு மனம் கமகமத்தது. இதன் மூலம் கிடைத்த வருவாயை கிராமத்தில் பொது தேவைக்கு பயன்படுத்து கின்றனர்.
- கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
- ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குட்டையன்பட்டி கூவனக் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடந்தது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே திரளான கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று மீன்களை அள்ளி செல்ல காத்திருந்தனர்.
கிராம பெரியவர்கள், கண்மாய் ஆயக்கட்டு தாரர்கள் அருகில் உள்ள அய்யனார் கோவிலில் வழிபாடுகளை முடித்து கண்மாய் கரையில் இருந்து வெள்ளை வீசி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து காத்திருந்த கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர். கச்சா, பரி, ஊத்தா முதலிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

அவர்களிடம் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
நல்ல மழை பொழிந்து விவசாயம் பெருகவும், மக்களிடம் ஒற்றுமையை மேம்படுத்தவும், ஜாதி-மத பேதமின்றி அனைவரும் இலவசமாக மீன்பிடித்து செல்ல அமைக்கப்பட்டிருந்த இந்த மீன்பிடித் திருவிழா சமூக ஒற்றுமைக்கு குறிப்பிட்ட அம்சமாக விளங்கியது.
- தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அதிகாலை முதல் பெரியகாரை கிராமத்தை சுற்றியுள்ள பணங்காட்டான்வயல், கள்ளிக்குடி, கோட்டவயல், நயினார்வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, வாளி, கூடையுடன் வந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கிராமத்து முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளைக்கொடி காட்டிய தும் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கி னர்.
இதில் விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ அளவிலும் மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபோன்ற மீன் பிடி திருவிழாக்களால் விவசா யம் செழித்து கிராம மக்க ளின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.
- திருப்பத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சென்னல்குடி கண்மாயில் ஊத்தாகூடை மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். கண்மாயில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தாகூடைகளில் மீன் பிடித்தனர். இதில் சிலருக்கு நாட்டு மீன்களான கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாப்புலெட், வயித்து கெண்டை உள்ளிட்ட பெரிய மீன்கள் கிடைத்தன.
பலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதும் ஆர்வத்துடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.
- கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.
- பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் அருகே முதலைக்குளம் கண்மாய் உள்ளது. 487 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் இந்தப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.
கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.
இந்த கண்மாயை ஏலம் விடும் நடைமுறை இல்லை. ஆனால் வருடந்தோறும் முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா உற்சாகமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.
மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முதலைக்குளம் கண்மாயை முற்றுகையிட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி, பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தபின் 3 முறை வெடிகள் வெடிக்கப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது. வெடி வெடித்து முடித்தவுடன் கரையில் நின்றிருந்த சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் முதலைக்குளம் கண்மாயில் திபுதிபுவென இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர்.
இதில் பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
- பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
- பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சியில் புகையிலைப்பட்டி உள்ளது. இங்கு உள்ள பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பெரியகுளம் நிரம்பியது. விவசாயத்திற்கு பெரியகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ஊர் நாட்டாமை சூசைமாணிக்கம், மணியக்காரர் சின்னப்பன், கோவில்பிள்ளை சின்னப்பன், ஊர் நிர்வாகிகள் காமராஜ், சரவணன் மற்றும் பொதுமக்கள் பெரிய குளத்தின் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் வான வேடிக்கையுடன் பெரியகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த மீன்பிடி திருவிழாவில் ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி, பெரியகோட்டை மற்றும் திருச்சி, மணப்பாறை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக பெரியகுளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை கிராம மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதோடு, தங்கள் உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விருந்தோம்பலை போற்றி கொண்டாடினர்.
- சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
- கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் தி.பள்ளபட்டி உள்ளது.இங்கு உள்ள மாங்குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் மாங்குளம் நிரம்பியது. விவசாயத்திற்கு மாங்குளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று ஊர் பொதுமக்கள் மாங்குளத்தில் அருகே உள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் மாங்குளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் மணியக்காரன்பட்டி, ராமராஜபுரம், மந்தநாயக்கன்பட்டி,வேட்டைக்காரன் புதூர், திம்மணநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.
சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன.
கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
- மணப்பாறை அருகே 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா
- விரால், காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் கிடைத்தனர்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. சுமார் 13 ஆண்டுகளுக்கு இந்த மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மீன்பிடிக்க திரண்டனர்.
வலை உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். விரால், காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் பலருக்கும் சிக்கிய போதும் பெரிய அளவிலான மீன்கள் சிலருக்கு மட்டுமே கிடைத்தது.
பலருக்கும் சிறிய அளவில் தான் மீன்கள் சிக்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு மீன்கள் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் சிறிய மீன்களை பலரும் கரையில் போட்டு விடவே அந்த மீன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் அந்த மீன்களை குளத்திலேயே எடுத்துப் போட்டது தான் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
- ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
- காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ளது கொண்டையம் பள்ளி. இங்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
கட்லா, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் இந்த ஏரியில் உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு மீன்பிடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கொண்டையம் பள்ளி ஊர் பொதுமக்கள் ஏராளமான பேர் அதிகாலை முதலே ஏரி பகுதியில் குவிய தொடங்கினர்.
இதனால் ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் காலை 6 மணியளவில் மீன்களை பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏரிக்குள் இறங்கி பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஏரியில் பிடித்த மீன்களை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். இந்த மீன் பிடி திருவிழாவில் ஒருவருக்கு 12 கிலோ எடையுள்ள மீன் கிடைத்தது.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன் பிடி திருவிழாவை பலரும் கண்டு ரசித்தனர்.