என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர்"
- சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார்.
- இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் புளூ கலர் சட்ைட, கிரே கலர் கருப்பு பார்டர் வேட்டி அணிந்திருந்தார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் கடந்த 23-ந்தேதி பள்ளப்பட்டி மெய்யனூர் சாலை முனியப்பன் கோவில் ஆட்டோ நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் பச்சை கலர் அரை கை சட்டை, சாம்பல் கலர் பேண்ட் அணிந்திருந்தார். வலது நெற்றியில் வெட்டு காய தழும்பு காணப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் இறந்த 2 பேருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? மற்றும் உறவினர்கள் குறித்த விபரம் தெரியவில்லை.
இதனால் உடலை ஒப்படைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து ேபாலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர்
- போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை
கன்னியாகுமரி:
திருவட்டார் பஸ் நிலையம் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் அதன் அருகில் போஸ்ட் ஆபிஸ், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. காலை, மாலை வேளைகளில் பஸ் ஏறுவதற்கு மாணவ, மாணவிகள் அதிகம் பேர் இந்த பஸ் நிலையத்தில் காத்து நிற்பது வழக்கம். அதன் அருகில் தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஆதிகேசவன் பெருமாள் கோவிலும் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான மதுபான கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் இளை ஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மது அருந்திக் கொண்டு பஸ் ஏறுவதற்கு இங்குதான் வருவார்கள்.
இதில் போதை தலைக்கு ஏறிய ஆசாமிகள் சிலவேளைகளில் அரு வருப்பான செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலையில் குமரன்குடி, செம்பருத்தி காளை விளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 34) மற்றும் ராஜேந்திரன் (43) 2 பேரும் சேர்ந்து மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர் இதனால் அந்த பகுதியில் பஸ் ஏறுவதற்கு நின்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்ப்பட்டது. உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து 2 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசா ரனை நடத்தினார்கள் திருவட்டார் உதவி ஆய்வா ளர் ஜெயராம் சுப்ரமணியன் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார்.
- வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- தகவலின் பேரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி அடுத்த பெரிய நாகலூர் தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 48). இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதேபோல் மாமரத்தூர் தின்னப்பட்டி பகுதி சேர்ந்தவர் ராணி (50). இவர் வீட்டில் மறைத்து லாட்டரி விற்றதாக கூறப்படுகிறது. இவரையும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- சேலம் ஜங்ஷன் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 29-ந் தேதி மாணவர்களிடை மோதல் ஏற்பட்டது.
- கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
சேலம்:
சேலம் ஜங்ஷன் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 29-ந் தேதி மாணவர்களிடை மோதல் ஏற்பட்டது. இதில் மெய்யனூர் வி.எம்.ஆர். நகரை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திகேயன்(20) காயம் அடைந்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாசநாயக்கன்பட்டி மதியழகன் மகன் விஷ்ணு (21), தாரமங்கலம் பவளத்தானூர் பகுதியை சேர்ந்த சத்தியகுமார் மகன் திலிபன்(20) ஆகியோர் மீது தகாத வார்த்தைகள் பேசுதல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
- சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து ரூபாய் 1000 பறித்துக் கொண்டனர்.
- இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து ரூபாய் 1000 பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த சேகர் மகன் ஜடேஜா என்கிற தியாகராஜன் ( 32) மற்றும் சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் தாஸ் ( 19) ஆகியோர் என்பதும் ஜடேஜா மீது போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. அவர் ரவுடி செயல்களில் ஈடுபட்டு வந்ததும், தெரியவந்தது.
போலீசார், பிடிபட்டவர்களிடம் காஞ்சி நகர் பகுதியில் ஏதேனும் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடிக்க வந்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆண்டவன் (60). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஆண்டவன் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை பார்த்து வந்தார். ஆண்டவனுக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு சரி வர கொடுக்காமல் செலவழித்து வந்துள்ளார். இதனை உஷா கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆண்டவன் வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு உஷா கணவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண்டவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
வெங்கடேசனுக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத–போது வெங்கடேசன் திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாட்டு துப்பாக்கி - கார் பறிமுதல்
- சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சியை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
நாகர்கோவில்:
அழகியபாண்டியபுரம் வனச்சரகம் தடிக்காரன்கோ ணம் அருகே பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் தோட் டத்தில் மிளா வேட்டை யாடப்படுவதாக மாவட்ட வன அதிகாரி இளைய ராஜாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். அதன் பேரில் உதவி வன அதிகாரி சிவகுமார் தலைமையில் வனவர்கள் பிரபு, பிரவீன் மற்றும் வன ஊழியர்கள் சரவணன், வேல்முருகன், சுரேஷ், பென்சாம், பிரபு சிங், பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தடிக் காரன்கோணம் வனப்பகுதி வீரப்புலியில் உள்ள ஒரு தோட்டத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மிளா இறைச் சியை சமையலுக்கு தயார் செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்த அதிகா ரிகள் உடனே வீட்டின் உரிமை யாளரான மனக்கா விளையை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அப்போது ராஜேஷ் குமார் மற்றும் தடிக்காரன் கோணத்தை சேர்ந்த ஜெகன் (29), ஜோஸ் மற்றும் சிவராஜன் ஆகியோர் சேர்ந்து மிளாவை வேட்டை யாடியது தெரியவந்தது.
வனத்துறையினர் ராஜேஷ்குமார் மற்றும் ஜெகன் இருவரையும் கைது செய்தனர். ஜோஸ், சிவராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மிளாவை வேட்டையாட பயன்படுத்திய ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சி ஆகிய வற்றை வனத்துறை அதிகாரி கள் கைப்பற்றினர்.
இதுபற்றி உதவி வன அதிகாரி சிவகுமார் கூறியதாவது:-
மிளா வேட்டையாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்னொரு நாட்டு துப்பாக்கி தலைமறைவாக உள்ளவர்களிடம் உள்ளது. இந்த மிளா வேட்டையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கி ளில் ஹெல்மெட் அணி யாமல் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அந்த 2 வாலி பர்களும் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர்கள் போலீசாரை வசைபாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரி வித்திருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜாஹங்கிர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சாரிடம் ரகளையில் ஈடுபட்ட ஈத்தாமொழி பெரியகாடு தெற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியம் (வயது 40), பெருவிளை பள்ளவிளை விநாயகர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (38) ஆகிய இருவர் மீதும் 2 பிரிவு களில் போலீ சார் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனை சட்டம் 294பி, 353 ஆகிய 2 பிரிவுகளில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே ஈசாந்திமங்கலம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). அ.தி.மு.க. பிரமுகர்.தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
தற்போது மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வின் பெர்னால்டு (35), பிரேம் (22), மனோசிங் (24) ஆகிய 3 பேரும் நாவல் காடு பகுதியில் இருந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்கள். கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் செல்வின் பெர்னால்டு, பிரேம், மனோசிங் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் செல்வின் பெர்னால்டு, பிரேம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைமறைவாக உள்ள மனோசிங்கை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். மணிகண்டனை தாக்கி யதற்கான காரணம் என்ன என்பது குறித்து கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு
- நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரகாஷ். இவரது மகன் ஜிம் ரெஜினால்ட் (வயது 21).
இவர், சென்னையில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.வெட்டூர்ணிமடம் பர மேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் இவரது மகன் கிரேசன் டேனியல் (23) என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இருவரும் ஞாலம் பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றனர். கால்வாயில் குளித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். ஆலம்பாறை பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜிம் ரெஜினால்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிரேசன் டேனியலை மீட்டு சிகிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இருந் தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.
பிணமாக கிடந்த ஜிம் ரெஜினால்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கிரேசன்டேனியல் உடலும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் 2 பேரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அங்கு திரண்டனர்.
விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வாலிபர்கள் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பலியான ஜிம் ரெஜினால்டு,கிரேசன் டேனியல் இருவரும் மோட் டார் சைக்கிளில் சென்று கால்வாயில் குளித்து விட்டு அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அந்த சாலையில் உள்ள சிறிய வளைவில் வரும்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதி இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லாரி டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த திலீப்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுமுறை யில் ஜிம் ரெஜினால்ட் ஊருக்கு வந்த நேரத்தில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கேரள அரசு பஸ்
- தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது பஸ் ஏறி இறங்கியுள்ளது.
கன்னியாகுமரி:
மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடந்தது.
இதில் கால் நடையாகவும், ஓட்டமாகவும், சிலர் இருசக்கர வாகனத்திலும் சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 12 சிவாலயங்களை வழிபடும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 54), மற்றும் ராஜன் (55) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.
9-வது சிவாலயமான திருவிடைக்கோடு மகாதேவர் கோவிலுக்கு செல்வதற்காக தக்கலை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் புலியூர்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் போது எதிரே வந்த கேரளா அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது அந்த பஸ் ஏறி இறங்கியுள்ளது.
இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். போலீசார் 2 பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தக்கலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கேரளா அரசு பஸ்சை சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வைத்து தேடி வருகின்றனர்.
- கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார்.
- அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
குமாரபாளையம்:
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைகுந்தகுமார்(வயது 46), சமையல் தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார். அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர் ஸ்ரீதர்(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம், புகளூர், பகுதியை சேர்ந்தவர் முருகன்(24.) மில் ஊழியர். இவர் தற்போது ஆனங்கூர் சாலை, ரங்கனூர் நால் ரோடு, பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் அப்பகுதி ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சேலம், கோவை புறவழிச் சாலையில் இடது புறமாக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இரவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.