search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "l murugan"

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
    • இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும்.

    சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியை ஒரு மொழியாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

    3-வதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருக்கிறது.

    மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதி உள்ள 3 பக்க கடிதத்தில் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். நாம் தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் எந்த அளவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

    உலகத்திலேயே தொன்மையான மொழி, பழமையான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி உலக நாடுகளிடம் போய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு நாட்டிலும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே 5 இடங்களில் ஆரம்பித்து உள்ளோம். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி சிங்கப்பூரில் கலாச்சார மையத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது,

    இதற்கு முழுமுதற்காரணம் ஸ்டாலின் அவர்களும், உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தான்.

    தமிழக மக்கள், தமிழக மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயல்களை செய்துகொண்டிருப்பது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தான்.

    துணை முதலமைச்சரின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள். முதலமைச்சரின் பேரன்கள் எங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 3-வதாக ஒரு மொழி இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 3-வதாக ஒரு மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

    அப்படி இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், பட்டியலின மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் 3-வதாக ஒரு மொழியை கற்பிக்க மறுக்கப்படுகிறது. இது நவீன தீண்டாமையின் உச்சமாக இருக்கிறது.

    உன்னை திட்டினால் கூட தெரியாது. சிரித்துக்கொண்டே திட்டுவான். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது அந்த மொழி மீது பற்றுதல் வரும். எப்படி தமிழ் மொழியை அதிகம் பேர் விரும்புகிறார்களோ அதே போல் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மொழியை கூடுதலாக கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.

    ஏன் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொடுக்கிறீர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.

    அதனால் 3 மொழி கல்வி என்பது வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோலம்போட்டு 3-வது மொழி வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். புதிய தேசிய கல்விக்கொள்கை வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    கல்வியில் விளையாடாதீர்கள். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள். இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

    • எண்ணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நின்று, பல்லாயிரம் ஆண்டுகளாய் செழித்து தமிழர்களின் மனதில் ஆழ வேரூன்றி நிற்கும் தமிழ் மொழி.
    • புதிய கல்விக் கொள்கையை ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மக்களும், தங்களது தாய்மொழியை போற்றுகின்ற வண்ணம், இன்றைய தினமானது 'உலக தாய்மொழி' தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், பன்முகத் தன்மை கொண்ட நமது பாரத தேசத்தில் உள்ள அனைவரும், அவர்தம் தாய்மொழியை நேசிக்கின்ற மற்றும் எண்ணிப் பெருமை கொள்கின்ற தினமாக இன்றைய தினம் அமைந்திட எனது தாய்மொழி தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், எண்ணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நின்று, பல்லாயிரம் ஆண்டுகளாய் செழித்து தமிழர்களின் மனதில் ஆழ வேரூன்றி நிற்கும் தமிழ் மொழியை, தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்.

    அதேசமயம், சிறுவயது முதலே தாய்மொழி வழிக் கல்வியில் நமது கற்றல் திறனை தொடங்குவது என்பது, ஒவ்வொரு மனிதரிடத்திலும் தனது மொழியின் பண்புகளான மனிதம் மற்றும் அனைத்து உயிர்களிடத்திலான நேசத்தை வலுப்படுத்துகிறது. அவ்வாறான பண்பை தேசம் முழுவதும் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற 'புதிய கல்விக் கொள்கையை' ஏற்படுத்திக் கொடுத்த நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
    • மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.

    மதுரை:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொலைநோக்கு பார்வையுடன் 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக் கொண்டு வருகிறார்.

    மத்திய கல்வித்துறை மந்திரி மிகத் தெளிவாக சொல்லி உள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின்வாங்கி விட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?

    ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை.

    இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.

    மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. நான் என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர் பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
    • இப்போது உள்ள இளைஞர்கள் தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடியவர்கள் அல்ல.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.

    பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    புதிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வி. தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வியை எதற்காக எதிர்க்க வேண்டும்.

    தி.மு.வி.னர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்களா? அரசியலுக்காக போலி வேஷம் போட்டுவிட்டு, புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது. தி.மு.க.வின் அரசியலுக்காக மாணவர்களை பலியாக்கக்கூடாது.

    இது 1965 அல்ல. அவர்கள் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த காலம் அல்ல.

    இப்போது உள்ள இளைஞர்கள் உலகத்தை பார்த்த இளைஞர்கள். தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடிய இளைஞர்கள் அல்ல.

    நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் என்று கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது.

    பின்னர் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை
    உக்குவிக்கும்.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்..   சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு
    ×