என் மலர்
நீங்கள் தேடியது "கடத்தல்"
- பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
- கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பஸ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பஸ், அறந்தாங்கி அருகே நிற்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
அறந்தாங்கி போலீசாரின் தகவலையடுத்து, ஆலங்குடி போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரி பஸ்சை மீட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அங்கு நின்ற கல்லூரி பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
பஸ் வெளியே சென்ற பிறகு தான், அந்த பஸ் அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.
இந்த பஸ்சை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பஸ்சை கடத்திய மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
- ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரெயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட ரெயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.
இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ரெயிலில் சிக்கி பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
"இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று ஒரு ராணுவ அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்தத் சம்பவத்துக்கு பலூச் விடுதலைப் படை (BLA) உரிமை கோரியது. தண்டவாளத்தில் வெடிப்பு நிகழ்ந்து, மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் வெளியே வருவது போன்ற வீடியோவை அது வெளியிட்டது.
- ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று கடந்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
ரெயிலில் பெண்கள், குழந்தைகளை விடுவித்த பின்னர், மீதமிருந்த 214 ஆண் பயணிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் குறைந்தது ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவைக்கையில் பாதுகாப்புப் படையினரால் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு ரெயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரெயில் கடத்தப்பட்ட பரபரப்பு வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.
இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள் சுரங்கப்பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரெயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.
ரெயில் தண்டவாளம் வெடிப்பது, ரெயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது புலனாகிறது.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
- சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் வழிமறித்தனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறும் போது, "பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) - ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
ரெயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரிண்ட் கூறியுள்ளார்.
- குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.
குமாரபாளையம், அக்.28-
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.
காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இது குறித்து இன்ஸ்
பெக்டர் ரவி கூறியதாவது:
காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.
குமாரபாளையம், அக்.28-
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.
காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இது குறித்து இன்ஸ்
பெக்டர் ரவி கூறியதாவது:
காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
- தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றிக் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அரிசி ஏற்றுக் கொண்டிருந்த மினி வேன் 840 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனபால் (27 ) உரிமையாளர் சின்னதுரை (43) ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு வசம் ஒப்படைக்க உள்ளனர்.
- அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
- கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே ஓச்சவிளை பகுதியில் இருந்து அனுமதியின்றி களிமண் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்புக்காவல் ஆய்வாளர் ரெத்தினதாஸ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு டெம்போக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவற்றில் அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் இரண்டு டன் வீதம் 4 டன் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
போலீசார் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
- நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். மேலும் அவர்களிடம் ஒரு மூட்டையும் இருந்தது.
இதைப்பார்த்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த மூட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் 30 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிங்கநேரியை சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 25), வேல்கண்ணன் (27) தூத்துக்குடியை சேர்ந்த வீரபத்ரன் (32) என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 4-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடுதிரும்பவில்லை.
- அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நாச்சியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடுதிரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தாய் எனது மகளை கடத்தூர் பகுதியை சேர்ந்த விவேக் (வயது22) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம்:
தஞ்சை மதினா வடக்கு தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 52). சென்னையில் உள்ளார். இவர் சிதம்பரம் வடக்கு ரதவீதி கே.கே.சி. தெருவில் வசித்து வரும் ஜமாலுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார்.
அந்த வீட்டை அவர் காஜாமைதீனுக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். ஆனால், அந்த வீட்டை ஜமாலுதீன் ஒப்படைக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் சென்னைக்கு சென்று காஜாமைதீனிடம் தனக்கு தருமாறு கேட்டார். ஆனால், காஜாமைதீன் மறுத்து விட்டார்.
எனவே, ஆத்திரம் அடைந்த ஜமாலுதீன், காஜாமைதீனை காரில் கடத்தி வந்து சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்தனர்.
இது தொடர்பாக காஜாமைதீன் செல்போன் மூலம் தனது மனைவிக்கு பேசியுள்ளார். அவர் ஆன்லைன் மூலம் போலீசுக்கு புகார் செய்தார்.
அதன் பேரில் சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு சிதம்பரம் பகுதிக்குட்பட்டதால் அங்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக ஜமாலுதீன், ரபீக், சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற வி.சி.க. செயலாளர் செல்லப்பன், விஜயபாஸ்கர், செந்தில், நடனம், நடராஜ், ரவீந்திரன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் வி.சி.க. பிரமுகர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் காஜாமைதீனிடம் விற்கப்பட்ட வீட்டை புதுவையை சேர்ந்தவருக்கு ரூ.2 கோடிக்கு விலை பேசியது தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது.
- புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் அரசு அனுமதியின்றி அதிக அளவில் மண் கடத்துவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவ இடத்தை பத்மநாபபுரம் சப்- கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அனுமதியின்றி மண் கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில் நேற்று புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது பெரிய பள்ளி தெருவில் எந்த வித அரசு அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் மண் கடத்திய டெம்போ ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு யூனிட் மண் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. போலீசார் மண் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து, டெம்போ ஓட்டுநர் பைங்குளம் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 56) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.