என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98138"

    நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மின்கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

    திருவள்ளூர்:

    நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் மற்றும் பாலப்பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என உறுதி செய்ய உள்தணிக்கை என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டுமான மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையில் மாநில அரசு நிதியில் செயல்படும் பணிகள் மற்றும் சென்னை பெருநகர திட்ட அலகுகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

    இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மற்றும் காக்களூர் புட்லுாரை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாயில் 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய மேம்பாலம் கட்டும் பணி, நடந்து வருகிறது. இதில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் பணி நிறைவடைந்து விட்டது.

    இதேபோல், நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மின்கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

    இந்த மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சென்னை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.செந்தில் தலைமையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் ம.சத்தியசீலன் மற்றும் நான்கு உதவி கோட்டப்பொறியாளர்கள், 8 உதவிப்பொறியாளர்கள் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல் பட்டாபிராம் பகுதியில் ரெயில்வே கேட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், திருவலங்காடு பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பால பணிகள் உட்பட தமிழகத்தில் நடந்து வரும் சாலைபணிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று உள் தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் டில்லிபாபு உடன் இருந்தனர்.

    மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    சென்னை:

    நமது உரிமை காக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், 60 ஆண்டுகள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருந்த மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை ரத்து செய்த மத்திய அரசுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் இச்சலுகை ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரண்டு ஆண்டுகளில் ரூ.3000 கோடி கூடுதல் வருவாய் ரெயில்வே துறைக்கு கிடைத்த காரணத்தால் இந்த ரத்து தொடரும் என்பது பொறுப்பற்ற அறிவிப்பு, இதனை மறுபரிசீலனை செய்து உடனடியாக சலுகை ரத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள், வியாபாாிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    மதுரை

     மதுரை - தேனி இடையே வருகிற 27-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்த ரெயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்ட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளா, பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி - மதுரை ரெயில் போக்குவரத்து கடந்த 
    1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓடத் தொடங்கியது. 

    குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரெயில் சேவை பயனுள்ளதாக இருந்தது.

    இந்த ரெயில் பாதை அகலரெயில் பாதை பணிக்காக  2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை - போடி அகல ரெயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை - உசிலம்பட்டி 37 கி.மீ., துாரத்தை ஜனவரி 2020-ல் பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி - ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-ல் அபய்குமார் ராயும் ஆய்வு செய்தனர்.

     ஆண்டிபட்டி - தேனி 17 கி.மீ. தூரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரெயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார். 
     மதுரை - தேனிக்கு முதல் கட்டமாக ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடி மே 26-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் மதுரை- தேனி ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 

    12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி இடையே மே 27 முதல் ரெயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட ரெயில் பயணிகள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
    மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து, ரெயில் ஓடுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தோம். 

    பிரதமர் சென்னையில் ரெயில் சேவையை 26-ந் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி - போடி இடையே 15 கிலோ மீட்டருக்கு பணி நடக்கிறது. விரைவில் அதுவும் முடிந்துவிடும்.மேலும், மதுரை - போடிக்கு மின்சார ரெயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின்மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது என்றனர்.

    தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை வழியாக தேனிக்கு தினசரி ரெயில் இயக்க  வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் ரெயில் மீண்டும் இயக்கியதற்கு வணிகர் சங்கத்தினர் பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சேலத்திலிருந்து விருதாசலத்திற்கு 2 பயணிகள் ரெயில்  இயக்கப்பட்டு வந்தன.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. 2  ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.

    இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் வணிகர் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

    வணிகர் சங்கத் தலைவர் ரவிசங்கர் கூறும்போது, சேலம்- விருத்தாச்சலம் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் கோயம்புத்தூரில் இருந்து ஆத்தூர் வழியாக எழும்பூருக்கு பகல் நேரம் சென்னை செல்ல புதிய ரெயில் ஒன்றை இயக்க வேண்டும். பெங்களூர் காரைக்கால் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

    சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக ரெயில்வே துறை ஏற்கனவே அறிவித்தது.

    அதன்படி அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் பகுதிவாரியாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கனரக தொழில்நுட்ப எந்திரங்களை கொண்டு, 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில் சென்னை செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்றும் இன்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டன.

    இதனால் பயணிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். இந்த ரெயில்களில் சென்னைக்கு வரும் பயணிகள் வசதிக்காக காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    3 பஸ்கள் மட்டுமே காட்பாடி ரெயில் நிலையத்தில் சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

    உடைமைகளுடன் ரெயிலில் வசதியாக வரும் பயணிகள் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வர படாத பாடுபடுகின்றனர். அவர்கள் பஸ்களில் உடமைகளை வைக்க இடமில்லாமல் திண்டாடுகின்றனர்.

    3 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் மற்ற பயணிகள் காட்பாடியில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து சென்னைக்கு பஸ்சில் செல்கின்றனர்.

    சென்னை வரை ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்தாலும் பஸ்சில் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதேபோல வருகிற 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அப்போது கோவை இன்டர்சிட்டி, லால்பாக், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரெயில்களை சென்னை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    திண்டிவனம் பாலத்தின் மீது ரெயில் போகும் போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    திண்டிவனம்:

    மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பயணிகள் அமர்ந்திருந்த 6-வது மற்றும் 7-வது பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை. இந்தக் கழிவறைகளில் தண்ணீர் நிரப்பும் படி பயணிகள் ஒவ்வொரு ரெயில் நிலையமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை.

    இந்த ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு ரெயில் நிலையம் வந்தது. அங்கும் தண்ணி நிரப்பாமல் வேகமாக ரெயில் புறப்பட்டது.

    இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான பயணிகள் ஆத்திரமடைந்து திண்டிவனம் பாலத்தின் மீது ரெயில் போகும் போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    உடனே ரெயில் கார்டு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இறங்கி வந்த பயணிகளிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பும் வசதி இல்லை.

    விழுப்புரம் ரெயில் நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்புவதாக கூறி பயணிகளை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ரெயில் விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் காலதாமதமாக சென்றது.

    பொதுமக்கள் அனைவரும் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யும் போக்குவரத்திற்கு உறுதுணையாக இருக்கும் ரெயில்களில் தண்ணீர் பிரச்சினை போன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது பொதுமக்களின் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    உசிலம்பட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ரெயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.
    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு மதுரையில் இருந்து தேனி வரை ரெயில்  பாரத பிரதமர் மோடி அவர்கள் சென்னையில் நேற்று இரவு தொடங்கிவைத்தார். 

     மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு வந்த ரயிலை பி. அய்யப்பன் எம்.எல்.ஏ  தலைமையில் அ.தி.மு.க கட்சியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

    மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றிவிட்டு அகல ரெயில் பாதையாகும் மாற்ற நிதி ஒதுக்கி அதற்குண்டான வேலைகளை முடித்து பலமுறை சோதனை ஓட்டம் முடிந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்னையி லிருந்து காணொளி காட்சி வாயிலாக மதுரையில் இருந்து தேனி வரை ரயிலை இயக்க கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    மதுரையில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த ரெயிலை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் தலைமையில்  கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளங்களுடன் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பூமா ராஜா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம். வி. பி. ராஜா  மாநில அம்மா பேரவை இணைச் செயலா ளர்  துரைத்தன ராஜன் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் வந்த ெரயிலில் ஏறி தேனி வரை பயணம் செய்தார். 

    இதில் மதுரையிலிருந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மதுரையி லிருந்து உசிலம்பட்டி வரை பயணம் செய்து உசிலம்பட்டி பா.ஜ.க நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் சொக்கநாதன் மாவட்ட செயலாளர் மொக்கராஜ் நகரச் செயலாளர் முத்தையா ஒன்றிய செய லாளர் கருப்பையா பாஜக நிர்வாகிகள் பாண்டி யராஜன், தீபன் முத்தையா, நாகராஜ் மகளிரணி இன்பராணிஉற்சாகமாக வரவேற்றனர்.இந்தகழ்ச்சியில் பெரும் திரளாக பொதுமக்கள் கூடி ஆரவாரமாக ரெயில்வே வரவேற்றனர்.
    கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி வரைசெல்லும் புதிய ரெயிலுக்கு மானாமதுரை, சிவகங்கையில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    மானாமதுரை
     
    சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலேயர்  காலத்தில்  இருந்து மானாமதுரை, காரைக்குடி என  2 பெரிய ஜங்ஷன் ரெயில் நிலையங்கள்  இருந்தன. அப்போதைய மீட்டர் கேஜ்  ரெயில் பாதையில் ஏராளமான ரெயில்  வசதிகள் இருந்தது. 

    நாடுமுழுவதும்  அகலரெயில் பாதைகளாக மாற்றம் செய்து தற்போது  குறைந்த அளவு  ரெயில்கள் செல்கின்றது. தற்போது காரைக்குடி -மானாமதுரை வரை மின்  பாதை  பணிகளும் நடைபெற்றுவருகிறது. 

    காமராஜர் முதல்வராக இருந்தபோது சென்னை   செல்ல தென்மாவட்ட பயணிகளுக்கு  பயணநேரம்குறையும் வகையில்  விருதுநகர்- மானாமதுரை இடையே  ரெயில் பாதை அமைத்து சென்னைக்கு  இணைப்பு ரெயிலாக மானாமதுரை வரை சென்று வந்தது. தற்போது அந்த ரெயில் பாதையில் செங்கோட்டை-சென்னை வரை வாரந்திர ரெயில்  மட்டுமே செல்கிறது. தினசரி ரெயில் சேவை கிடையாது.
     
    தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை வாரம்ஒருநாள் செல்லும் சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. அந்த ரெயில் வருகிற ஜூன் 4-ந் தேதி எர்ணாகுளத்தில்இருந்து மதியம் புறப்பட்டு மறுநாள் காலை வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் வரை  செல்கிறது. 

    இதற்காக ரெயில் நின்று  செல்லும் ரெயில் நிலையங்கள்பட்டியலை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமான ஜங்ஷன் ரெயில் நிலையங்கள் தென்காசி, மானாமதுரை நிலையங்களில்  இந்த ரெயில்  நிற்காது. இதுதவிர விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர்,சிவகங்கை மாவட்ட தலைநகர் சிவகங்கை ஆகிய  ஊர்களில் ரெயில் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டு  உள்ளது. 

    இந்தியாவில்  முக்கியமான புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் வடமாநிலங்களுக்கு  செல்லும் அனைத்து  அதிவிரைவு  எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மானாமதுரை, சிவகங்கை ரெயில் நிலையங்களில்  நின்று செல்கிறது. ராமநாதபுரம் பகுதியில் இருந்தும்   ரெயில்நிலையங்கள் இல்லாத ஊர்களான கமுதி,முதுகுளத்தூர், இளையான்குடி,  பார்த்திபனூர், வீரசோழன், அபிராமம்  போன்ற  ஊர்களில்  இருந்தும் ஏராளமான பயணிகள் சென்னை  மற்றும்  பிறமாநிலங்களுக்கு செல்ல மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு  வருகின்றனர். 

    தற்போது புதிதாக விடப்பட்டுள்ள வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயிலை  மானாமதுரை, சிவகங்கையில் நின்று  செல்ல மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

    மீட்டர்கேஜ் பாதை   இருந்தபோது கொல்லத்தில் இருந்து  நாகூர் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி  தினமும் இருந்தது. அகலரெயில்பாதை வந்த பிறகு ரெயில்களில் தண்ணீர் நிரப்பும் வசதி கொண்ட மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்  நிற்காமல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகளை புறக்கணித்து  செல்வதா?  என பயணிகள் கேள்வி எழுப்பினர்.
      
    இதுபற்றி ஓய்வுபெற்ற ரெயில் என்ஜின் ஓட்டுநர், மாவட்ட  காங்கிரஸ் மனித உரிமைகள் தலைவர் ராஜாராம்  கூறுகையில்,  தமிழகத்தில்  அதிக அளவில் ரெயில்சேவைவசதி  குறைக்கப்பட்டு உள்ளது.   

    வட இந்தியாவில் அதிக   அளவில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்  வசதிகள்  தினசரி உள்ளது. ஆனால் தமிழகத்தில் போதுமான ரெயில் சேவைகள் இல்லை.  கொரோனாகாலத்தில் நிறுத்தப்பட்ட  பயணிகள் ரெயில் சேவை பலநகரங்களில் தொடங்கப்படவில்லை.  

    தற்போது விடப்பட்ட புதிய ரெயில் கேராளாவில்  அதிக ஊர்களில் நின்று செல்லும் வகையிலும், தமிழகத்தில் முக்கியமான  ரெயில் நிலையங்களான  தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மானாமதுரை, சிவகங்கை ஆகிய  ஊர்களில் ரெயில் நிற்காது என்றும்  அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதனால் சிவகங்கை  மாவட்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து  உள்ளனர்.

    இது குறித்து மதுரை ரெயில்வே  கோட்ட அதிகாரிகள் புதிய ரெயிலை   தென்காசி,  மானாமதுரை, சிவகங்கை  ஊர்களில் நின்று செல்ல நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து ரெயில்வே வாரிய  துறைக்கும் மனுக்கள் அனுப்பி வைக்க பட்டு உள்ளன.
    நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும்  இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும்.  நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில்  நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

    பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும்  பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது  2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.

    எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.

     பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ்  இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
    ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை:

    ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு ‘லக்கேஜ்’ கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. பயணத்திற்கும் ‘லக்கேஜ்’ கொண்டு செல்லும் அளவு மாறுபடுகிறது.

    முதல் வகுப்பு ஏசி முதல் 2-ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி வரை உள்ள பயணிகளுக்கு எத்தனை கிலோ ‘லக்கேஜ்’ கொண்டு செல்லலாம் என்று விதிமுறை உள்ளது.

    ஆனால் அதனை இதுவரை ரெயில்வே நிர்வாகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது ‘லக்கேஜ்’ அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ரெயில்களில் சமீப காலமாக ‘சங்கிலி’ இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், சக பயணிகள் சிரமப்படுவதை மனதில் வைத்து அதிக அளவு உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என எச்சரித்துள்ளது.

    பயணத்தின் போது அதிக அளவு உடைமைகளுடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் போது இன்பம் பாதியாக இருக்கும். அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளது.

    இந்த நிலையில் ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

    மேலும் யாரேனும் அதிக உடைமைகளுடன் பயணிப்பதை கண்டறிந்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். இது பயண தூரத்துக்கு ஏற்பமாறுபடும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் தடம் உள்ளது. மேலும் மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில்களும் இந்த வழியாக சென்று வருகின்றன.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் ரெயில் பாதை என்பதால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் வந்து, செல்கின்றன.

    ெரயில் தடமாற்றி தண்டவாளத்தில்...

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள முள்ளிசெட்டிபட்டி இடையே ரெயில் தடம் மாற்றியில் இடையே கற்களை வைத்துள்ளனர். தொடர்ந்து மற்றொரு தண்டவளத்தில் இரும்பு ராடுகளை எடுத்து தண்டவாளத்தின் குறுக்கே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து அவ்வழி வந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு ரெயில் நிலையத்திலிருந்த பாயிண்ட் மேன் அருண் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற பாயிண்ட் மேன் அருண் கற்களையும் இரும்புத் ராடையும் அப்புறப்படுத்தினார்.

    இதில் தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் அகற்ற முடியாத அளவுக்கு வைத்திருந்தால் அவற்றை அகற்ற சிரமம் ஏற்பட்டது. கடின முயற்சிக்கு பிறகு அந்த கற்கள் முழுவதும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    கற்கள் மற்றும் இரும்பு ராடு வைத்த சமயத்தில் அந்த வழியாக ரெயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் வைத்திருந்ததால் ரெயிலை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்டவாளம் நடுவே கல் மற்றும் இரும்பு ராடுகளை வைத்த மர்ம கும்பல் யார் ? என கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர். அவர்கள் தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த சம்பத்தை அடுத்து சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹேதா, துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    உள்ளூர் பகுதியை சேர்ந்த நபர் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்ததால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள், போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் சென்னை-மும்பை செல்லும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

    மேலும் சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.

    இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர் எனினும் தொடர் மழையால் வாட்டி வதைத்த வெயில்வெப்பம் தணிந்து குளிர்ச்சியானது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரக்கோணத்தில் 54 மி.மி. மழை பெய்துள்ளது.

    ×