என் மலர்
நீங்கள் தேடியது "tag 98643"
- ரூ.50 லட்சத்தில் 6 மாதகாலம் இலவச பயிற்சி வகுப்புகள்
- பயிற்சி முடித்த 40 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு சான்றிதழ் வழங்கினார்
கன்னியாகுமரி:
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பல்படை மற்றும் இதர பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக ரூ.50 லட்சத்தில் 6 மாதகாலம் இலவச பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதையடுத்து தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக தலா 40 பேர் கொண்ட 3 குழுக்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் இலவசப்பயிற்சி வகுப்புகள் கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் உள்ள பயிற்சி மையங்களில் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரியில் நடைபெற்ற இந்தப்பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமைதாங்கினார். தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் டி.எஸ்.பி.பிரதாபன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன்பிரசாத் சான்றிதழ்களை வழங்கி பேசினார். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் நன்றி கூறினார்.
- நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,
- இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடற்கரை வெறிச்சோை காணப்படுகிறது.
வேதாரண்யம்:
கோடியக்கரையில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடத்திற்குகொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுகளை காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இந்தநிலையில் இன்று வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.கடல் சீற்றத்தால் கடற்கரை யில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீனவர்கள் படகுகளை இழுவை டிராக்டர் மூலம் படகுகளை மேடான பகுதிகளுக்கு அவசரம் அவசரமாக கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்மற்றும் கடற்கரை ஓரத்தில் மீன்பிடி வலைகள் அடுக்கப்ப ட்டுள்ள நிலையில் தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடிவலைகளையும் வாகனம் மூலம் பாதுகா ப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
புயல் எச்சரிக்கை கார ணமாக மீன்வளத்துறை எச்சரிக்கை அடுத்து கோடிய க்கரை, ஆறுகா ட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தால் கடற்கரை பகுதி வெளிச்சோடி காணப்படுகிறது.
- குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
- ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளை தோப்பு, மணக்குடி, கோவளம் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதால் சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களுக்கு இதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பங்கு தந்தைகள் மற்றும் மீனவ அமைப்பு மூலமாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வள்ளங்கள் விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்துகொண்டே இருந்தது. வள்ளவிளை சின்னத்துரை நீரோடி இரயுமன்துறை பூத்துறை பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் வள்ளங்கள் கட்டு மரங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடல் சீற்றமாக காணப்பட்டது.
ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளை தோப்பு, மணக்குடி, கோவளம் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியிலும் ஒரு சில மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். சின்னமுட்டம், குளச்சல் துறைமுகங்களில் அவர்கள் கரை வந்த வண்ணம் உள்ளனர்.
- வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்.
- மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு ஏதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் குளங்கள் புனரமைப்பு பணிகள் நடந்துவருகிறது.
வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள், சிறுதலை காடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு எதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு உட்பட ரூ.1.25 கோடி செலவிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ, ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், அருள்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
- கடலில் விழுந்து தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
- கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கோவளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு வள்ளத்தில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
இருப்பினும் கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
- சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்
- குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய கடலோர கிராமங்களை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் கோடிமுனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் பாரம்பரியமாக தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடல் பகுதியில் சங்கு குளிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்.இதனால் குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர். தொழில் ரீதியாக குமரி மீனவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்களுடன் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது ஒரு சில மீனவர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி இங்கு நீங்கள் தொழில் செய்யக்கூடாது என விரட்டி உள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.காலங்காலமாக செய்து வரும் எங்கள் தொழில் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குமரி மீனவர்கள் தொடர்ந்து திரேஸ்புரத்தில் சங்கு குளிக்கும் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின் மற்றும் ஊராட்சி காங்.நிர்வாகிகள் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடனிருந்தனர்.
- கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை, இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
- அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
ராமேசுவரம்
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தமிழக மீனவர்களின் விசைபடகுகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ஏராளமான பிளாஸ்டிக் படகுகளில் ரோந்து வந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்றும், திரும்பி செல்லுமாறும் ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர்.
மேலும் அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். அவர்கள் இன்று காலை ராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை வெட்டி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும், இதனால் ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் படை–யால் சிறைபிடிக்கப் பட்டு வருவது மீனவ மக்களி–டையே பெரும் கொந்த–ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை திரும்ப ஒப்ப–டைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக மீனவர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தினர் வலி–யுறுத்தி உள்ளனர்.
- 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றி தெரிவித்தார்
- இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (7-9-2022) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த 6-9-2022 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
- 9 விசைப்படகுகள் மீன்கள் இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தம்
- தடயை மீறி சிறிய வள்ளங்களில் சிலர் செல்வதால் குழப்பம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதனால் நேற்று முன்தினம் மீன் பிடித்து வந்த 3 விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்து வாரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேலும் 6 விசைப்படகுகள் வந்துள் ளது. இந்த 9 விசைப் படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்கி விற்பனை செய்வதற்கு தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.
இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டதை தொடர்ந்து விசைப்படகுகள் துறை முக ஓரத்தில் நிறுத்தப்ப ட்டுள்ளது. இந்த விசைப்படகுகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வந்த மீனை விற்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கும் வரை துறைமுகத்தை திறக்க கூடாது என கூறியுள்ளனர்.
அதே நேரம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் சின்ன முட்டம், குளச்சல் போன்ற துறைமுகங்களில் சென்று மீன்பிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது என கூறி இந்த துறைமுகத்தை உடனே திறக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் இரு மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிப்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மீனவர் குறை தீர்ப்பு கூட்டத்திலும் எதிரொலித்தது.
தற்பொழுது துறைமுக நுழைவாயிலில் உள்ள செக்போஸ்டை மூடி உள்ளதால் இருசக்கர வாகனங்களும் கார் டெம்போ போன்ற எந்த வாகனங்களையும் உள்ளே விடாமல் அடைத்து வைத்துள்ளதால் மீனவர்கள் துறைமுகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தற்பொழுது வானிலை மிகவும் மோசமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என வலியுறுத்தியும் அதைக் கேட்காமல் சிலர் சிறிய வள்ளங்களில் சென்றுமீன் பிடிப்பதும் மீனவர்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
- நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்டணத்தில் தூத்தூர், இனையம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வசதியாக. மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது.
ஆனால் துறைமுகம் சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீன வர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற சைமன் என்பவர் முகத்துவாரத்தில் சிக்கி பரிதாபமாக பலி யானார். அவரது இறப்பைத் தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்து 8 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில தினங்க ளுக்குமுன்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும், முடிய வில்லை. 2 நாட்களாக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அமல்ராஜை தேடி வருகின்றனர். ஆனால் அவரைப் பற்றிய தகவல் இன்று வரை கிடைக்க வில்லை.
இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் அமைப்புகள் சார்பில் அறிவிக்க ப்பட்டது. இதையடுத்து இன்று காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.
காலை முதல் கொட்டி தீர்த்த மழையை பொருட்ப டுத்தாமல் உண்ணா விரதத்தில் மீன வர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பங்கு பணியாளர்கள் உட்பட ஏராளமான பேரும் இதில் பங்கேற்றனர்.
- அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.
- இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் சேகர் (வயது 54).
மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சேகர் நேற்று முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அப்பகுதி மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.
அப்பொழுது அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.
அப்போது சேகர் திடீரென்று தடுமாறி விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மகன் தினேஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பலியான சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- 4 அரசு பஸ்கள் சிறை பிடிப்பு
- நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார்.
கன்னியாகுமரி:
கைதவிளாகம் முதல் ஹெலன் நகர் வரை சீரமைக்கப்படாமல் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி மேல்மிடாலம் சந்திப்பில் மீனவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 அரசு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.
உதயமார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து கைதவிளாகம், மேல்மிடாலம் வழியாக கடலோரச்சாலை செல்கிறது. இச்சாலையை குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனயம், புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவர் கிராமங்களை சார்ந்த மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை மக்கள் பயன் படுத்த முடியாத வகையில் குண்டுகுழிகள் நிறைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்பயனாக தமிழக அரசு ரூ.1.30 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்க ஒதுக்கீடு செய்தது. இத்தொகையில் சாலை சீரமைக்கும் பணியை சில மாதங்கள் முன் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பணி தொடங்கிய சில நாட்களில் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதனால் அப்பகுதி வழியாக மக்கள் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனத்தில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேல்மிடாலம் மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டடனர். அப்போது அவ்வழியாக வந்த தடம் எண் 302 மணக்குடி - இரயும்மன்துறை பஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் 9 எ பஸ், மார்த்தாண்டம் செல்லும் 87 இ, பி ஆகிய 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஹெலன்நகர் மக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அருட்பணி யாளர்கள் ஹென்றி பிலிப், ஆன்றனி கிளாரட், ஜினிஸ் ஆகியோர் பேசினர்.
தகவல் அறிந்து வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. பின்னர் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார். அதன் பின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. போராட்டம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.