என் மலர்
நீங்கள் தேடியது "Tahsildar"
- வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராக சைலஜா மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக8 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, திருப்பூர்இந்து சமய அறநிலையத்துறைஉதவியாளர் அலுவலகதனி தாசில்தாராக இருந்தகோபாலகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், வடக்கு தாசில்தாராக பணியாற்றி வந்த கனகராஜ் இந்து சமய அறநிலை ய துறை உதவியாளர் அலுவலக தனிதாசில்தாராகவும், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தங்கவேலு,ஊத்துக்குளி தாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்த சைலஜா, தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோல் திருப்பூர் டாஸ்மாக் கிடங்குமேலாளராக பணியாற்றிவந்த செல்வி, மடத்துக்குளம் தாசில்தாராகவும்,மடத்துக்குளம் தாசில்தாராக பணியாற்றி வந்த சபாபதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவிவேகானந்தன் உடுமலைசமூக பாதுகாப்பு திட்டதனிதாசில்தாராகவும், உடுமலை சமூகப் பாதுகாப்புதிட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ஜலஜா,உடுமலை ஆர்டிஓ. வின்நேர்முக உதவியாளராகவும்பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் வினீத்உத்தரவிட்டார்.
- முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில், தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் நடந்தது. நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 6 பேருக்கு பட்டா மாறுதல் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகளும் வழங்கப்பட்டன. கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ரேசன் கடையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். ரேசன் கடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக வேலை நாட்களில் திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முகாமில் முதுகுளத்தூர் ேவளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், வழங்கல் அலுவலர் கதிரவன், மண்டல துணை தாசில்தார்கள் முருகேஷ், மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சேது மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் காத்தாயி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது 2-வது மகன் ஜெயபிரகாஷ். இவர் கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயபிரகாஷ் நகை, பணம், சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக, பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து இருந்தார்.
சதாசிவம் கொடுத்த புகார் மனு தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு வந்திருந்த சதாசிவத்திடம், பெற்ற மகன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள். இது தவறு என்று அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சதாசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தா ருமான செல்வராஜன் என்பவர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் செல்வராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
- டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக தாசில்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உடன்பாடு ஏற்படாததால் பெண்கள் போராட்ட அறிவித்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் சமீபத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தினர். ஆய்வுக்கு வந்த டாஸ்மாக் மேலாளரிடம் கடையை மூடக்கூடாது என மது பிரியர்கள் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
மது கடைைய அகற்றுவது தொடர்பாக நேற்று உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். பேச்சு வார்த்தையின் போது தாசில்தார் கருப்பையா கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமை தான் உள்ளது. உசிலம்பட்டி- தேனி ரோட்டில் நாடார் பள்ளி முன்பு டாஸ்மாக் கடை உள்ளது. எங்கள் பிள்ளைகளும் அங்கு தான் படிக்கிறார்கள். நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், மது கடைைய அகற்ற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம். அப்புறப்படுத்த மறுத்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம். எங்கள் ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஆகியவற்றை திருப்பி கொடுப்போம் என்றும், உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்றும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.
- ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றார்.
- கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள செல்வமருதூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 22). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுவனிடம் விசாரணை
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த சிறுவன் தனது நண்பரிடம் நான் கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவார்கள் என நினைத்தேன். ஆனால் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரித்தனர் என்றான்.
இந்த தகவல் போலீசாருக்கு சென்றது. உடனடியாக வள்ளியூர் டி.எஸ்.பி. லோகேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ஜோஸ் சிறுவனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினார்.
கொன்று புதைப்பு
அப்போது கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சம்பவத்தன்று சக நண்பர்களான 2 பேருடன் சேர்ந்து ராஜேந்திரனை தட்டார்மடம் அருகே உள்ள செம்மந்தேரிக்கு அழைத்து சென்று கொன்று புதைத்தது தெரியவந்தது.
உடல் தோண்டி எடுப்பு
இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சாத்தான்குளம் தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராஜேந்திரன் உடலை இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
- முறைகேடு செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவில் இடத்திற்கான பட்டாவில் தனி நபர்களின் பெயரினை இணைத்து முறைகேடு செய்ததாக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலர் மீது தென்காசி தாசில்தாரிடம் ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோத பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதில் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார்,செல்லப்பா மற்றும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.
- இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 300ஆண்டுகள் பழமையான இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் கள்ளிப்பாளையம், வலையபாளையம், துத்தேரிபாளையம். உள்ளிட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.
இந்தநிலையில் தற்போது மீண்டும் விழா நடத்த மேற்படி 3 கிராமத்தை சேர்ந்த மக்கள் தீர்மானித்தனர்.இந்த நிலையில் ஒரு தரப்பினர் எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இன்று (நேற்று) இருதரப்பினரும் குழு தேர்வு செய்து பட்டியல் வழங்குவதாக கூறிச் சென்றனர். இந்த நிலையில்,நேற்று பல்லடம் தாசில்தாரிடம் இரு தரப்பினரும் பட்டியல் வழங்கினர். இது குறித்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கூறியதாவது:-. இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர். இதனை சப்- கலெக்டருக்கு அனுப்பி வைத்து அவரது அறிவுறுத்தலின்படி விழா கமிட்டி தேர்வு செய்து, கோவில் விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்றார். இதற்கிடையே பல்லடம் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில், கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் தங்களை விழாக்குழுவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
- சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த ஆய்வுகளின் போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவு, வட்டாட்சியர் அலுவல கங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களி டம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப் பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணியாளர்க ளின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறை வாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப் பட்டு வரும் கோப்புகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவவும், தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப் பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜி முன்னிசா, வட்டாட்சியர்கள் சாந்தி (சிங்கம்புணரி), வெங்கடேசன் (திருப் பத்தூர்), தனி வட்டாட்சி யர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஆனந்தன் (சிங்கம் புணரி), கண்ணதாசன் (திருப்பத்தூர்) உள்பட பலர் உடனிருந்தனர்.
- கீழக்கரை தாசில்தார் பொறுப்பேற்றார்.
- அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய தாசில்தாராக பழனிக்குமார் பொறுப்பேற்றார். அவரை துணை தாசில்தார் பரமசிவம், சமூக நலத்துறை தாசில்தார் ஜலால், தலைமை நிலஅளவர் சொக்கநாதன், வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் காசிநாதத்துரை, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அழகப்பா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதுவரை அங்கு தாசில்தாராக பணியாற்றிய சரவணன் புதிய தாசில்தாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனிக்குமாருக்கு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
- 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கனிமவள வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பல்லடம் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
- லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி,நடு வேலம்பாளையம்,கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 4 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற 10க்கும் மேற்பட்ட கேரளா மாநில லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.இதற்கிடையே, கனிம வளங்களை அதிக அளவில் எடுத்துச் செல்வதை தடுத்து நிறுத்த விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறை நடவடிக்கையால் தற்பொழுது வெளி மாநில லாரிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன், என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
கல்குவாரி மற்றும் பாரம் ஏற்பட்ட லாரிகளை புலத் தணிக்கை செய்ய உள்ளோம். கிராமப்புற சாலைகள் பழுதடையாமல் அனுமதிக்கப்பட்ட பாரம் கொண்ட லாரிகளை பயன்படுத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்ரமணியன், திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
- கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, காங்கயம் மண்டல துணை தாசில்தாராக இருந்த மோகனன், தாராபுரம், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், இப்பணியிடத்தில் இருந்த ஜெகதீஸ்குமார், திருப்பூர் 'டாஸ்மாக்' கிடங்கு, மேலாளாராக மாற்றப்பட்டார். கலெக்டர் அலுவலக (டி.என்.ஆர்.எஸ்.பி., நிலை - 2) துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.