என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu"
- கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை என பா.ஜ.க. ராம. சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார்.
- இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.
மதுரை
தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பது பொருத்தமானது என்று கவர்னர் ரவி சொன்னதை வைத்து, தி.மு.க. வினரால் பெரிய கருத்து மோதல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தை, இலக்கி யங்களில் இல்லை. தொல்காப் பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும், தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தேசிய கவியான பாரதியார் முதன்முதலில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிதான். அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை.
நாம் அன்றாடம் பாடும் தமிழ்தாய் வாழ்த்தில் கூட, தமிழ்நாடு என்று இல்லை. 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்றுதான் வரிகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதி, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா வில் பேசும்போது, 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்று தான் குறிப்பிட்டார். இதே தலைப்பில் அண்ணா சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது. கருணாநிதியும் எழுத்துக் களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதையே ஒரு கவர்னர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.
அண்ணா தாழ்ந்த தமிழ கமே என்று சொல்லும் போது வராத கோபம், கவர்னர் தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது? கவர்னர் என்ன பேசி னாலும் எதிர்ப்பது என்பது தான், ஆளுங்கட்சியின் வழக்கமாக உள்ளது. சட்டமன்றத்தில் கவர்னர் பேசும்போது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர்.
ஆகவே தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது, தமிழுக்கு என்று ஒரு மாநிலத்தை உருவாக்கியது, தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பது தேசியவாதிகள் தான்.
இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான்.
- கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
நெல்லை :
நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான். தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும், சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும், ராஷ்டரியம் என்றாலும் நாடு என்றுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்டிரம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.
மகாராஷ்டிரம் என்று சொல்லக்கூடாது, பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா?. கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
பண்டிகைகள் ஆட்டம், பாட்டம், கூத்து கொண்டாட்டம் என இழுத்துச்செல்லும். சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை சிந்திக்கவிடாமல் மயக்கும் மாயையை உருவாக்கும்.
கல்வி, சுகாதாரத்தை, மருத்துவத்தை தந்தது கிறிஸ்தவம். இந்த மண்ணில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்தான் சேரிகளுக்குள்ளும், குப்பங்களுக்குள்ளும், குக்கிராமங்களுக்குள்ளும் வெளிச்சம் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கோ, பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்கோ இப்படி பேசவில்லை. உண்மையை பேச வேண்டும், வரலாற்றை பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறேன்.
அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பப்புவா நியூகினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், கொக்கரையாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
- சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
- கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.
தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கதிர் ஆனந்த் எம்.பி. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்.
- தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
- பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்பட்டி, கட்டுக்குடிப் பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட செல்லியம்பட்டி, தேனம்மாள்பட்டி ஆகிய பகுதிகளிலும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் புதிய மின்மாற்றி கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மின்மாற்றி களை இயக்கி தொடங்கி வைத்து பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார்.
அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறை வேற்றும் பொருட்டு, பொது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதில் மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும், அத்தியாவசியமாகவும் திகழ்ந்து வரும் மின்சாரத்தை தங்கு தடையின்றியும், சீராக வும் வழங்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கும் வகையில் நடவ டிக்கைகள் மேற்கொள்வ தற்கென 2021-22-ம் நிதியாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புக்கள், நடப்பாண்டில் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் ஜான் கென்னடி, சோலை செல்வி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் ஜெயலெட்சுமி (பிரான்பட்டி), புகழேந்தி (கட்டுக்குடிப்பட்டி), சண்முகம் (செல்லியம்பட்டி), ஜெயலெட்சுமி (தேனம்மாள் பட்டி) மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
தஞ்சாவூர்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் கூடுதலாக்கும் வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழு சார்பில் நாளை ( வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று நாளை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், மனோகரன், இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், சாந்திசுந்தரராஜ், குணசேகரன், சோமசுந்தரம், சிவகுமார், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைத் தலைவர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
- தமிழ் நாட்டில் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
- 12 மணி நேர வேலை திருத்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
மேலும், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தன. இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறையின் 12 மணி நேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
- மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா்.
பல்லடம் :
பல்லடம் சித்தம்பலம் கிராமத்தில் சிவபெருமானை மையமாக கொண்டு 27 நட்சத்திரங்கள், 9 அதி தேவதைகள், 9 நவகிரகங்கள்,108 சிவலிங்கங்கள், நவகிரக கணபதி உள்ளடங்கிய நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம், சோபகிருது ஆண்டு விழா, வருண மகா மந்திர வேள்வி, சிவநாம பஜனை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் அருளுரை நிகழ்த்தினாா்.
அதன் பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில்-:தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாக நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா். எதிா்கால தலைமுறையை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். திராவிட பேரரசாக திகழும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நினைத்தால் இதனையும் செயல்படுத்தி காட்ட முடியும் என்றாா்.
- கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் சூழல், மக்கள் பிரச்சினைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
- இது தொடர்பாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ் நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரும் 7 ஆம் தேதி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டை தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் சூழல், மக்கள் பிரச்சினைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, அதற்கேற்ப பணியாற்றும் வகையில், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி தமிழ் நாடு அரசு சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும்.
- மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும்.
திருவாரூர்:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட ஊராட்சி செயலாளருக்கு பணி விதிகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும், இணை இயக்குனர் உதவி இயக்குனர் உதவி பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களின் போராட்ட காலங்கள் வேலை நாட்களாக கருதி ஆணையிடப்படும் என அளித்த வாக்குறுதியின் படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும் ஊராட்சி செயலர்களுக்கு மாத மாதம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 900-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
- தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் இவர்கள் கண்காணிப்பார்கள்.
மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-
அரியலூா் மாவட்டம்-சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராய், கோவை மாவட்டம்-டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன். கள்ளக்குறிச்சி மாவட்டம்-நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், காஞ்சீபுரம் மாவட்டம்-ஊரக வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா்.
செங்கல்பட்டு மாவட்டம்- விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம்-சிவில் சப்ளை கமிஷனர் வி.ராஜாராமன். நாகப்பட்டினம் மாவட்டம்-எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, நாமக்கல் மாவட்டம்-தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமர குருபரன், புதுக்கோட்டை மாவட்டம்-நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன்.
ராமநாதபுரம் மாவட்டம்-மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டம்-தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டம்-நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட் டம்-வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கரூர்-மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ். பழனிசாமி, மதுரை மாவட்டம்-முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன்.
புதுக்கோட்டை மாவட்டம்-எஸ்.நாகராஜன், தஞ்சாவூர் மாவட்டம்-ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர்-ஆனந்த், தேனி-கார்த்திக், தூத்துக்குடி மாவட்டம்-சிஜி தாமஸ் வைத்யன், திருப்பூர்-டான்சி, முதன்மை செயலாளர்-விஜயகுமார், வேலூர் மாவட்டம்-ஆதி திராவிட பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, விழுப்புரம் மாவட்டம்-பஞ்சாயத்து ராஜ் கமிஷனர்-ஹர் சஷாய் மீனா, விருதுநகர் மாவட்டம்-ஆனந்தகுமார்.
- தமிழ் நாட்டின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
- அரசு ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுக்க 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக், மின்துறை தொடர்பான அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ் நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தின் கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.