என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrorist attack"

    • முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
    • இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

    நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் படுக்கையமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

    ஆனால் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 3 நாடுகளும் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சிக் குழுக்களால் நடத்தப்படும் கிளர்ச்சியை ஒடுக்க போராடி வருகிறது.  

    • காவல்நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தனர்.
    • இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்துவா மாகாணத்தின் தெற்கு வாரிஸ்தான் மாவட்டதில் லாகி மர்வத் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    கையெறி வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரீப் அல்வி இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    • சிரியாவின் கிழக்கு பகுதியில் ராணுவ வீரர்களுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது
    • 2019லிருந்து பெருமளவிற்கு சிரியாவில் அமைதி திரும்பி விட்டது

    மேற்கு ஆசியாவில் உள்ள நாடு சிரியா.

    சிரியாவிலும், ஈராக்கிலும் நிலவி வந்த ஒரு ஸ்திரமற்ற அரசியலினால் 2011-லிருந்து ஐ.எஸ். அமைப்பு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. சிரியாவில் இந்த அமைப்பினருக்கெதிராக அமெரிக்கா களமிறங்கியதை தொடர்ந்து 2018-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் இந்த அமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது.

    2019-ல் அந்த அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இதன் ஆதிக்கம் சிரியாவில் முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

    ஆனாலும் சிறிய அளவில் அதன் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் சிரியா நாட்டு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சிரியாவின் கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து சிரியா- ஈராக் எல்லைக்கருகே உள்ள டெய்ர் எல்-ஜவுர் (Deir el-Zour) பிராந்தியத்திலுள்ள கிழக்கு சிரியாவின் மயதீன் (Mayadeen) நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது இப்பேருந்தை வழிமறித்து திடீரென சூழ்ந்து கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பல் அதன் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும், சிரியாவில் இயங்கி வரும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவிக்கிறது.

    சிரியாவின் ராணுவமோ, அரசாங்கமோ இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • இவர்கள் ஹர்விந்தர் ரிண்டா மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்கள்
    • இலக்கு வைத்து கொலைகளை செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்

    இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதலோ, நாசவேலைகளோ நடைபெறாமல் இருக்க ராணுவமும், அனைத்து மாநில காவல்துறையினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    தேச எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது.

    "மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து பஞ்சாப் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. பயங்கரவாதிகளாக கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்விந்தர் ரிண்டா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்களாக இந்த 5 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் இலக்கு வைத்து கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம்" என இந்த நடவடிக்கை குறித்து பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.

    சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று பஞ்சாபின் டர்ன் டரன் பகுதியில் தீவிரவாத குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • ரோந்துப் பணியில் உள்ளூர் காவல்துறையினரும், மத்திய காவல் ஆயுதப் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
    • மத்திய காவல் ஆயுதப் படையின் ஆய்வாளர் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் இன்று நடந்த என்கவுன்டர் தாக்குதலில் சிஆர்பிஎஃப் (மத்திய காவல் ஆயுதப் படை) அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் உள்ளூர் காவல்துறையினரும், மத்திய காவல் ஆயுதப் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில், பசந்த்கரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்மீது, பிற்பகல் 3.30 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக, காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

    ஆனால் இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் சுட்டதில், மத்திய காவல் ஆயுதப் படையின் ஆய்வாளர் மீது குண்டு பாய்ந்தது. இருப்பினும், ஆய்வாளரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஞாயிறு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியுள்ளனர்.
    • இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்

    ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் வார சந்தையில் கையெறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் அமைத்துள்ள சுற்றுலா மையத்தின் அருகே உள்ள ஞாயிறு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியுள்ளனர்.

    இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று இந்த தாக்குதலானது நடந்துள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் முன்பைவிட தற்போது பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக நேற்றைய தினம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

    • பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு.
    • வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல்.

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இன்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 8 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவர்.

    மேலும், படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் இருந்து வருகிறது.
    • பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்கள், இந்தியா- பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் அங்குள்ள வெளிமாநிலத்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த ஒருமாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றி வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றும் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.

    31-ந்தேதி ரஜனிபாலா என்ற பண்டிட் ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்தொடர்ச்சியாக நேற்று குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கிக்குள் புகுந்து மேலாளர் விஜயகுமார் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மத்திய காஷ்மீர் பகுதி பட்காம் மாவட்டம் மக்ரய்புரா என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    திடீரென இந்த செங்கல்சூளைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தில்குஷ்குமார் ( வயது17) என்ற தொழிலாளி குண்டுபாய்ந்து அதே இடத்தில் இறந்தார் இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.

    மற்றொரு தொழிலாளியான பஞ்சாப்பை சேர்ந்த ராஜன் என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் அங்குள்ள வெளிமாநிலத்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உயிருக்கு ஆபத்து இருப்பதால் தங்களை சொந்த மாவட்டங்க ளுக்கு மாற்ற கோரி அரசு ஊழியர்கள் நேற்று பேரணி சென்றனர். காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அடுத்தடுத்து நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • சிரியா குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இந்த குண்டுவெடிப்பில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்தப் பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.

    இந்நிலையில், அங்கு ராணுவ வீரர்களைக் குறிவைத்து, அவர்களது பஸ் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தி வருவதாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
    • சோபோரில் பாதுகாப்புப் படை நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.

    விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    ×