என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thief"

    • கண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.

    குமாராபாளையம்:

    குமார பாளையம் காளியண்ணன் நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 32). இவர் சிமெண்ட் கடை வைத்து தொழில் செய்து வருபவர். கடந்த 3-ந்தேதி மாலை 6 மணியளவில் ராஜம் தியேட்டர் அருகே ஓட்டல் கடையில் டிபன் வாங்கி கொண்டு திரும்ப வந்து பார்க்கும் போது, ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதே போல் குமார பாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் பகுதி யில் வசிப்பவர் கார்த்தி (26). எலெக்ட்ரிசியன்.

    கடந்த மாதம் 10-ந்தேதி சேலம் சாலை ரெயின்போ கேபிள் அலுவலகத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு வெளியில் வந்து பார்க்கும் போது, வாகனத்தை காணவில்லை.

    இது குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் காவிரி நகர் புதிய பாலம் அருகே ரோந்து சென்ற போது, அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாத்தனர்.

    விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கலைஞர் மு.கருணாநிதி புறவழி சாலையில், காரைக்கால் நகர போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் காரைக்காலில் அண்மையில் திருட்டு போன வாகனம் என்று தெரியவந்தது.

    தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது38) என்றும், இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனை அடுத்து போலீசார் அவரிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டார்.
    • அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த ேபாது முன்னுக்கு பின் முரனாக கூறினார். இதனால் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    மேலும், பண்ருட்டி-செஞ்சி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும், தஞ்சாவூர் பகுதியிலும் இவர் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் இருந்து செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார்.
    • இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    கடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கொங்கரப்பட்டி அம்மனேரி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார்

    (வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டை திருடிய மர்மநபர், இரு சக்கர வாகனத்தில் அதை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அப்போது கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார். இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மர்ம நபர் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், ஆடு திருடியவர் பொம்மியம்பட்டி மேல்கோம்பை பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம், மூலனூர், கொளத்துபாபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது, பெண்களை குறித்து நகை பறிப்பது போன்ற சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்க ப்பட்டது.

    இந்த தனிப்படை போலீ சார் முதலில் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த 3 டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் தேனி மாவட்டம் ஜங்கிள் பட்டியை சேர்ந்த முருகேசன் என்கிற மூசா (வயது 52) என்வரை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாணையில் அவர் உள்பட 3 பேர் முகமூடி அணிந்து, டவுசர் போட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பரவையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 46). இவர் சம்பவத்தன்று மதுரை-திண்டுக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் சசிகலா அணிந்தி ருந்த தங்க செயினை பறித்தான்.

    அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் அது 2 துண்டானது. இதில் ஒரு பகுதியை மர்ம நபர் கொண்டு சென்று விட்டான். இதுபற்றி சசிகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இதுபற்றி தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சசிகலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயின்பறிப்பில் ஈடுபட்டவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த் என்பது தெரியவந்தது. வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் வேறு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிங்கம்புணரி அம்மன் கோவிலில் பணத்துடன் உண்டியலை திருடிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி- வேங்கை பட்டி ரோட்டில் தனியா ருக்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா சன்னதியும் உள்ளது.

    இங்கு ஒரு அடி உயரத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலை வழக்கம் போல் மூடிவிட்டு கோவில் ஊழி யர்கள் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து சாய்பாபா சன்னதி யில் பணத்துடன் இருந்த உண்டியலை திருடிச்ெசன்று விட்டான்.

    இன்று காலை வழக்கம் வழக்கம் போல் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் கோவிலை திறந்தார். அப்போது சாய்பாபா சன்னதியில் இருந்த உண்டி யல் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இது பற்றி அவர் கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்டியல் திருடப்பட்டது பற்றி சிங்கம்புணரி போலீசில் கோவில் நிர்வாகி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது திருடப்பட்ட உண்டியல் அருகில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தின் மாடியில் கிடப்பது தெரியவந்தது. அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையன் உண்டியலை அங்கு போட்டு சென்று உள்ளான். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை.

    அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

     உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார்.
    • இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.

    சேலம்:

    சேலம் அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி (வயது 52). இவர், உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார். இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.

    இது–கு–றித்து மாதேஸ்–வரி கொடுத்த புகா–ரின் பேரில் காரிப்–பட்டி போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தியதில், மாதேஸ்–வரி வீட்–டில் திரு–டி–யது உளுந்–தூர்–பேட்டை பகு–தியை சேர்ந்த கும–ர–வேல் (23) என்–ப–து தெரிய வந்–தது. உடனே போலீ–சார் அவரை கைது செய்–த–னர். அவ–ரி–டம் இருந்து 6 பவுன் நகையை மீட்–ட–னர். இந்த திருட்டு தொடர்–பாக மேலும் ஒரு–வரை போலீ–சார் தேடி வரு–கின்–ற–னர்.

    • திருட வந்து தப்பி சென்ற திருடனை பொதுமக்களே விசாரித்து அடையாளம் கண்டனர்
    • திருடன் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டார்

    முசிறி, 

    முசிறி அடுத்த மணலி ஐத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அன்னலட்சுமி(வயது 42). இவர் வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனை அறிந்த அன்னலட்சுமி, கூச்சலிட்டு உள்ளார். இதனால் அந்த நபர் தப்பி ஓடி உள்ளார். அப்போது அன்னலட்சுமியின் மகன் அந்த நபரை துரத்தி சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி குடியிருப்புவாசி அழகேசன் கட்டிலை குறுக்கே போட்டு திருடனை தடுத்து நிறுத்த முயற்சித்து உள்ளார். ஆனால் இதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த திருடன், தனது டூவிலரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றுள்ளார். அவ்வாறு தப்பி பைக்கில் வேகமாக சென்றபோது அருகில் உள்ள சாலை வளைவில் நிலை தடுமாறி திருடன் கீழே விழுந்துள்ளான். பின்னால் ஆட்கள் துரத்தி வருவதால், பைக்கை அதே இடத்தில் போட்டுவிட்டு திருடன் தப்பி சென்றுள்ளான். பைக்கை கைப்பற்றிய அப்பகுதி அது யாருடையது என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த பைக் பெரிய கொடுத்துறை சேர்ந்த தியாகராஜன் மகன் முத்து செல்வம் என்கிற செல்வம் (வயது 52) என்பவருடையது என்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அன்னலட்சுமி புகார் அளித்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர கோகிலா வழக்கு பதிந்து முத்து செல்வத்தை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    • 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வரிசாங்குப்பம்ரங்கநாதன்எமகன்செல்வன். இவர் கடந்த 30-ந் தேதி பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகே உள்ள காய்கறி கடையில் காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது தனது மோட்டார் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது சம்பந்தமாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ஆனந்த், ராஜி, அன்பரசன், கணேசமூர்த்தி, ஹரிஹரன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. யை ஆய்வு செய்து கொட்டிகோனா ன்குப்பத்தை சேர்ந்த பரமசிவன் மகன் ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து அவரிடம் இருந்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறிஞ்சிப்பாடி மாரிய ம்மன் கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

    • சரவணன் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார்.
    • பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 65 ஆயிரம் திருட்டு போனது.  விழுப்புரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன் (50). டாக்டர். இவர் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். மேலும் அங்கு மருந்தகமும் நடத்தி வருகிறார். நேற்று இரவு சரவணன் கிளிக்கை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை அதனை திறக்க வந்த போது மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தனர்.

    இதனால் சரவணன் அதிர்ச்சி அடைந்தார் உள்ளி சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 65 ஆயிரத்தை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விசாரணை செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். 

    ×