என் மலர்
நீங்கள் தேடியது "Thoothukudi"
- தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
- டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தூத்துக்குடி:
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.
இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.
அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
- உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு.
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
அண்ணாநகர், பிரையன்ட்நகர், செயின்ட் பீட்டர் கோவில் தெரு, லயன்ஸ் டவுன் மற்றும் வி.வி.டி. சிக்னல் முதல் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்செந்தூர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.
இந்த பலத்த மழையால் தாமோதரன் நகரில் உள்ள ராஜா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அவரது மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்று இருந்ததால் ராஜா அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். எனினும் அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.
இந்த மழையால் தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க சிலர் நாட்கள் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மழைநீர் வளாகத்தை சுற்றி குளம்போல் காணப்படுவதுடன், போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் கோப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சாயர்புரம் வட்டார பகுதியில் அதிகாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது
- இன்று இருக்க கூடிய டெக்னாலஜி இன்னும் 2 வாரத்தில் காணாமல் போய்விடுகிறது.
தூத்துக்குடி:
வாகைக்குளம் அருகே உள்ள மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொரு மாணவ- மாணவியருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான மகிழ்ச்சி தரக்கூடிய கனவுகள் விரிந்து நிற்க கூடிய நாளாகும். கோவிட் என்ற மிகப் பெரிய சிக்கலை கடந்து நிற்க கூடிய தலைமுறையை சேர்ந்தவர்கள் நீங்கள்.
கொரோனா என்ற சூழ்நிலையில் கல்லூரிக்கு வரமுடியாமல் ஆசிரியர்களை நேரில் சந்திக்க முடியாமல் கல்வி பயின்று பட்டதாரிகளாக வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை தாண்டி வந்த உங்களுக்கு உலகத்தில் சாதிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. இன்றைய உலகில் நீங்கள் இருக்கிற துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உலகம் என்பது மாறி கொண்டே இருக்க கூடிய ஒரு விஷயம்.
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் இருந்து தொடங்கி பல்வேறு புதிய விஷயங்கள் தினம் தினம் உருவாகி கொண்டே இருக்க கூடிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இன்று இருக்க கூடிய டெக்னாலஜி இன்னும் 2 வாரத்தில் காணாமல் போய்விடுகிறது.
காலம் மாறிக் கொண்டு இருக்க கூடிய சூழ்நிலையில் உங்களுடைய அறிவாற்றல்தான் இன்றைக்கு உங்களுக்கு மிக பெரிய சக்தி. நீங்கள் இருக்க கூடிய துறையில் மட்டுமில்லாது உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதான் உங்களுக்கு வெற்றிகளை கொண்டு வந்து குவிக்கும். எனவே மாணவர்கள் தங்கள் அறிவாற்றலை எல்லா துறைகளிலும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தூத்துக்குடி மாநகரில் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.
- ரோச் பூங்கா அருகில் நிலம் ஒதுக்கீடு செய்து அரசுக்கு கலெக்டர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
ஜெகன் பெரியசாமி
கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-
தூத்துக்குடி மாநகரில் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.
ரோச் பூங்கா
இதனை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கிழக்கு மண்டலம் தெற்கு கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகில் 20 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து அரசுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை (நினைவகங்கள்) மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். பூங்கா
இந்நிலையில் மணிம ண்டபம் அமைய உள்ள இடம் குறித்து பொதுமக்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், சமுதாய மக்கள் பிரதிநிதிகளிடையே நடத்த ப்பட்ட பேச்சுவார்த்தையில் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தலின்படி மாநகராட்சி பராமரிப்பில் உள்ள எம்.ஜி.ஆர்.பூங்காவில் கிழக்குப் பகுதியில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி தருமாறு மாவட்ட கலெக்டர் கடிதம் அளித்தார்.
அதன் அடிப்படையில் அங்கு இடம் வழங்க அனுமதி வழங்கி அரசுக்கு அனுப்பவும் ஏற்கனவே கடந்த ஜனவரி 24-ந்தேதி வழங்கப்பட்ட பழைய தீர்மானத்தை ரத்து செய்யவும் தீர்மானம் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்கான நிலமாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை தெரிவித்தார்.
பகுதிசபா
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப்பிரிவு மற்றும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா செயல்படுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகளின் விதிகள்2022-ன் படி ஒவ்வொரு வார்டு பகுதியில் ஒரு நபரை வார்டு குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ய உறுப்பினர் நியமன படிவம் வர பெற்றுள்ளதை கடந்த 28-ந் தேதி கூட்டத்தில் தீர்மானம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி இன்றைய கூட்டத்தில் தகுதியான நபர்களை வார்டு குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யும் தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து 300 பேர் மாநகர வார்டு குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, குழு தலைவர்வர்கள் ராம கிருஷ்ணன், கீதாமுருகேசன், சுரேஷ் குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமிசுடலைமணி, மந்திரமூர்த்தி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் டாக்டர் அருண் குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- பெரியசாமி சிவன் கோவில் அருகே பூ மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார்.
- நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்து விட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 70). இவர் சிவன் கோவில் அருகே பூ மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வியா பாரத்தினை முடித்துவிட்டு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்கச்சென்றார்.
திடீர் தீ
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவரது கடை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபெருமாள், அரிராம், பூவர்ண தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்து விட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது.
விசாரணை
மேலும் தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறும்போது, இப்பகுதியில் சிலர் மது மற்றும் போதைப்பொருட்களை உட்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் யாரேனும் தீவைத்து சென்று இருக்கலாம் என்று சந்தேம் தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
- ரோஷினி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
- மர்ம நபர்கள் ரோஷினியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சுந்தர வேல்புரம் 1-வது தெருவை சேர்ந்தவர் எடிசன். இவரது மகள் ரோஷினி ( வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரோஷினியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். எனினும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக ரோஷினி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருக பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது
- டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது.
உடன்குடி:
திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் பிசான பருவத்திற்கு தேவையான அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தண்டுதுளைப்பான், புகையான், இலைசுருட்டுபுழு உள்ளிட்ட நெல்பயிரை தாக்கும் பூச்சிகளுக்கும், குலைநோய், இலைப்புள்ளி நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட பிசான பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான டி.பி.எஸ் 5 மற்றும் டி.கே.எம்.13ஆகிய சான்று விதைகள் திருச்செந்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.
டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது. மேலும் அம்பை 16 ரகத்தை விட அதிக மகசூல் தரக்கூடியது. சராசரியாக 6300கிலோ வரை மகசூல் தரக்கூடியது. டி.கே.எம்.13 ரகம் 130நாட்கள் வயதுடையது. இது கர்நாடக பொன்னி ரகத்தை விட 10சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியது.
இவ்விதைகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார்நகல் மற்றும் சர்வே எண்ணுடன் திருச்செந்தூர் வட்டார வோளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த என்று உத்தரவிட்டு இருந்தார்
- அமைச்சர் கீதாஜீவன் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.
தூத்துக்குடி:
முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்
இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் மாநகர பகுதியான 26, 27வது வார்டுக்குட்பட்ட எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், மார்கெட் ரோடு, எஸ்.எஸ்.பிள்ளை தெரு, வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, யாதவர் தெரு, செயின்ட்ஜான் தெரு, வடக்கு வானியன்விளை, தெற்கு வானியன்விளை, உள்பட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.
இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மண்டலத் தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் சரண்யா, மரியகீதா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், வட்டப் பிரதிநிதிகள் ஏகாம்பரம், ஜெயக்குமார், அவைத் தலைவர்கள் திருமணி, மாயாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
- கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஆறுமுகநேரி:
தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளி–களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சாகுபுரத்தில் தொடங்கியது.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களை உள்ளடக்கிய தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
இதில் கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
முதல் போட்டியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
நிகழ்ச்சியில் சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர் அனு ராதா. தலைமையாசிரியை சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன், டி.சி.டபிள்யூ. மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த ஒயிட்பீல்டு மற்றும் விஜய், கணபதி, திருவேங்கடத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் முடிவற்ற சாலைகளான அண்ணா நகர் மெயின் ரோடு, ஜெயராஜ் ரோடு,போல்டன்புரம் ரோடு, தேவர்புரம் ரோடு, வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்கு வரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சாலை யின் இருபுறம் வாகனம் நிறுத்துவதற்கு என்று பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் மீது வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் அந்த சாலையின் இருபுறமும் பதிக்கப்பட்ட பேவர் கற்களில்1.5 மீட்டரானது பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கு மட்டுமே, எனவே மீதமுள்ள இடமானது வாகனம் நிறுத்துவதற்கான பகுதியாகும். ஆகவே குழந்தை களும், பொதுமக்களும் நடந்து செல்வதற்கும், வாக னங்களை நிறுத்துவதற்கும் தடை ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
இந்நிலையில் மாநகரத்திற்குள் மழை நீர்வராமல் இருக்க புற வழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி களையும், மழையினால் அதிக நீர் தேங்கும் பகுதிகளான முத்தம்மாள் காலனி, கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைநீர் வரும் புறநகர் பகுதிகளையும், சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித்தடத்தையும் மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அதிகாரி களிடம் நீர்வழி தடங்களை தூர் வரவும்,குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தவும், உத்தர விட்டார். ஆய்வின் போது மாநகர அதிகாரிகள், அலு வலர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- புதுக்கோட்டை பஜார் பகுதியில்போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா எடுத்து செல்லப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை பஜார் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
குட்கா பறிமுதல்
அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள குட்கா எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் நடுத்தெருவை சேர்ந்த ரமேஷ் (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
அதில் பெங்களூருவில் இருந்து குட்கா வாங்கி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாணை நடத்தி வருகின்றனர்.
- உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
- இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க.தலைவர் ஏற்கனவே புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணியினர் சேர்க்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 25 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2-ம் கட்டமாக இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டி ருக்கிறது. ஏற்கனவே செய்த பணிகள் தான் வீடு தோறும் கொண்டு சேர்க்கிறோம் என வருடம் முழுவதும் இந்த பணியை செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். முழுமையாக நிறைவேற்றுவோம்.
கடந்த 2019, 21-ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும். அதற்கு இளைஞர் அணி முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடந்த காலத்தில் இளைஞர் அணி செயலாளராக இருந்த தலைவர் தான் தற்போது முதல்-அமைச்சராக உள்ளார். பணியை முழுமையாக செய்து மாவட்ட கழகத்திற்கு முழு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் உறுப்பினராக சேர்த்த படிவத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் நேரில் வழங்கினர். தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் நினைவு பரிசு ஆகியவற்றை வழங்கினார்கள்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாநகர மகளிர் அணி செயலாளர் ஜெயக்குனி விஜயகுமார், இளைஞர் அணி முத்துராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர், துணை சேர்மன், ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சர வணகுமார், கூட்டுடன்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன்,ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி தனுஷ் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.