என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tolls"

    • கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
    • இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தனியார் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கப்பலூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி கப்பலூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100ரூபாயும், 24மணி நேர பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.3280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.160-ம் 24மணி நேர பயன்பாட்டிற்கு ரூ.240-ம், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.5 ஆயிரத்து 295 ஆகவும், 2 அச்சு கனரக வாகனம், பஸ்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.335, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.500, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.11095 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    3 அச்சு கனரக வாகனங்க ளுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.365-ம், 24 மணி நேர பயன்பாட்டு கட்டணம் ரூ.545-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.12,105 ஆகவும், 4 முதல் 6 அச்சு வரையிலான கனரக வாகனங்கள் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.520-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.785-ம், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.17 ஆயிரத்து 400 ஆகவும் உயர்த்த ப்பட்டுள்ளது.

    7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.635-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.955-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.21 ஆயிரத்து 180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்களும், வாடகை வாகன ஓட்டிகளும், கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெட்ேரால், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் ேபாக்குவரத்து செலவு கடுமையாக அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்
    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது

    நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு, அதன் பயனர்கள் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக் பேலன்ஸ்களை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.

    நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி , மற்றும் யெஸ் வங்கி போன்ற 39 நிறுவனங்கள் உள்ளன.

    • நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    சென்னை:

    'தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது' என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    அதில் சுமார் 30 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியிலும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்தும் சுங்கக்கட்டணம் உயர்த்தும் நடைமுறை உள்ளது. அதன்படி வருகிற 1-ந்தேதியில் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயரும் எனக் கூறப்படுகிறது.

    இதன்படி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூர் மாவட்டம் மணகெதி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம் கரியந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைத் துறை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    இந்த கட்டண உயர்வால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 -ந்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    கடலூர்:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. மேலும் கட்டண விவரங்களையும் வெளியிட்டது.

    இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சாலை பணி முழுமை பெறாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையில் இந்த போராட்டத்தை யொட்டி கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர்.

    இதுபற்றி கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் கூறுகையில், கொத்தட்டை சுங்கச்சாவடியில் 50 முறை சென்றால் ஒரு மாத கட்டணம் ரூ.14 ஆயிரத்து 90 அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணைப்படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பஸ்கள் இயங்கி வருகிறது. இப்படி என்றால் 5 நாளில் ஒரு மாத கணக்கு தீர்ந்து விடும். ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடாது.

    இந்த பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம். இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தின் தீவிரம் குறித்து அறிவிப்போம் என்றார்.

    அதன்படி இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள்.

    அவர்கள் அரசு சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் சென்றனர். இதனால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைத்து பஸ்களையும் கொத்தட்டை சுங்கச்சாவடிக்கு கொண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    அதேபோல் கொத்தட்டை சுங்கச்சாவடி சுற்று வட்டார கிராம மக்களும், அனைத்து கட்சியினர், சமூகநல அமைப்பினர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×