என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic Police"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
    • அதிகபட்சம் 26,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

    டெல்லியில் ஆதித்யா என்ற 20 வயது இளைஞர் ஸ்பைடர்மேன் உடையணிந்து ஓடும் காரின் மேல் அமர்ந்து ஆபத்தான முறையில் அதனை ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து சீட் பெல்ட் அணியாமல் ஆபத்தான முறையில் கார் ஓட்டியதாக ஆதித்யா மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கின் கீழ் அதிகபட்சம் 26,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இல்லையென்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஆதித்யா இதே போல் ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் ஒட்டி ரீல்ஸ் எடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளின் கண்களில் சரியாக படுவதில்லை
    • சென்னையில் எச்சரிக்கை வரைபடங்கள் வரையப்பட உள்ள 156 இடங்களை போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் வாகன பெருக்கம் காரணமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் புதிய நடைமுறையை செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இந்த புதிய நடைமுறைப்படி சென்னையில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளை போலீசார் அடையாளம் கண்டு வரைபடம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இதன் மூலம் பல விபத்துகள் ஏற்பட்டுள்ள சாலைகளில் மஞ்சள் நிறத்தில் வட்டம் போட்டு விபத்துகள் தொடர்பான விளக்க படத்தை வரைகிறார்கள். மேலும் விபத்துகள் தொடர்பாக சட்டப்பிரிவையும் அதில் எழுதி வைத்துள்ளனர்.

    குறைந்த வெளிச்சத்திலும் இந்த எச்சரிக்கை வரைபடங்கள் வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் மஞ்சள் நிறத்தில் மிகவும் பிரகாசமாக இதை வரைந்துள்ளனர். இதன் மூலம் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் மிகவும் கவனமாக வாகனம் ஓட்டும் வகையில் அந்த எச்சரிக்கை வரைபடம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது.

    போக்குவரத்து போலீசார் சாலை விபத்துகளை தடுப்பதற்காக விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஏற்கெனவே எச்சரிக்கை பலகைகளை பல இடங்களில் வைத்துள்ளனர்.

    ஆனால் அந்த எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளின் கண்களில் சரியாக படுவதில்லை. வாகன ஓட்டிகளும் அதை கவனிப்பதில்லை. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பல இடங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருப்பது, குறைவான வெளிச்சம் அல்லது விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களை பற்றி வாகன ஓட்டிகள் அறியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த ஆபத்தான சாலைகளில் வரைபடங்கள் மூலம் எச்சரிக்கை செய்வதன் மூலம், வாகன ஓட்டிகள் விபத்து அபாயங்களை அறிந்து, அதற்கேற்ப கவனமுடன் வாகனம் ஓட்டும் நிலையில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    அதன் அடிப்படையிலேயே இந்த புதிய நடைமுறையை போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர். சென்னையில் இந்த எச்சரிக்கை வரைபடங்கள் வரையப்பட உள்ள 156 இடங்களை போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர். திருவான்மியூர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், எல்டாம்ஸ் சாலை, கிண்டி, தி.நகர், அடையாறு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட விபத்துகள் அதிகம் நடக்கும் சாலைகளில் இந்த எச்சரிக்கை வரைபடங்களை போலீசார் வரைந்து வருகிறார்கள்.

    • மேசையில் வைக்கப்பட்ட லஞ்ச பணத்தை 3 காவலர்கள் பங்கு பிரிக்கின்றனர்.
    • 3 காவலர்களின் முகமும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

    டெல்லியில் 3 போக்குவரத்து காவலர்கள் லஞ்சப் பணத்தை பிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில், ஒரு போக்குவரத்து காவலர் தனக்கு பின்னால் ஒரு மேசையில் லஞ்ச பணத்தை வைக்குமாறு சைகை காட்டுகிறார். பின்பு மேசையில் வைக்கப்பட்ட பணத்தை 3 காவலர்கள் பங்கு பிரிக்கின்றனர். 3 காவலர்களின் முகமும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

    வீடியோ வைரலானதை அடுத்து, 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • Zero accident day என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது.
    • இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    சென்னை:

    சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரமானது ஆகஸ்ட் 5 தொடங்கி ஆகஸ்ட் 25-ந்தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெற்றது.

     

    Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம் குறித்து வேப்பேரி டிராபிக் இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,

    சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 5.8.2024 முதல் இன்று வரைக்கும் 26.8.2024 வரை சென்னை பெருநகரத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பல நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நடத்தி இருக்கிறோம்.

    ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.

    ஆகஸ்ட் 26-ந்தேதி ZAD (Zero accident day) 20 நாட்கள் விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.

    சென்னை பெருநகர மக்கள் அனைவருக்கும் ZAD (ஆக. 26) (Zero accident day) என்று அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறோம்.

    இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்வபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்று ஓவர் ஸ்பீடு செல்லக்கூடாது என்று பல நிகழ்ச்சிகள் நடத்தி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.

    • வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
    • மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.

    சென்ற வருடம் பெய்த கனமழையால் கார்கள் கடுமையாக சேதமானதால் இந்த முறை கார்களை பாதுகாக்க வாகன ஓட்டிகள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

    மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனையடுத்து வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    • கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.
    • போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், ஆனால் கார் ஓட்டும் போது வேலை செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
    • சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகனங்களை மடக்கி, சோதனையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.

    இவ்வாறு சோதனை நடத்தும் போலீசார், கும்பலாக சாலையில் நின்று வாகனங்களை மடக்குவதால், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதனால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ்காரர் வாகனத்தை மடக்க வேண்டும் என்றும், சப் - இன்ஸ்பெக்டர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாகன தணிக்கை, போக்குவரத்தை சீர் செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது.
    • காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.

    சென்னையில் அதிகாலையில் காணப்பட்ட பனிமூட்டம் குறைந்து தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினார்.

    வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினர். இதேபோல் காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.

     இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரிய வந்தது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கடந்த 15-ந்தேதி வரையில் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று 98 பேர் உயிரிழந்திருப்பதும். 841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

    இவர்களில் 80 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் என்பதும், மீதம் உள்ள 19 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்காக இன்று முதல் சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்தில்லா சென்னையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இன்று மறுநாள் முதல் அதிரடி சோதனை நடத்தப்படும். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது. 

    எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.  ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும்.

    அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது.
    • அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையம் இருந்து வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு அரியாங்குப்பத்திலிருந்து கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை வரை எல்லையாக இருந்து வருகிறது.

    இந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 இடங்களை விபத்து அதிக விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கடலூர்-புதுவை ரோடு அரியாங்குப்பம், நோணாங்குப்பம், இடையார்பாளையம், பூரணாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், காட்டுக்குப்பம் - புதுநகர் கன்னியாகோயில்- முள்ளோடை ஆகிய இடங்களில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருக்கிறது.

    புதுவை அரசு தேசிய நெடுஞ்சாலை பொதுப்பணித் துறைக்கு கடலூர்- புதுவை சாலையை இரு வழி சாலையாக மாற்ற வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் இதுவரை ஏற்பாடு செய்யாமல், நிதி காரணம் என அதிகாரிகள் பொதுமக்களிடம், சமூக ஆர்வலர்களிடமும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விபத்தை ஏற்படும் பகுதியை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு கட்டை மற்றும் இருவழி சாலைக்கு நடு கட்டைகள் அமைத்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களாக இடையார்பாளை யத்திலிருந்து - தவளக்கு ப்பம் வரை விபத்து அதிகரித்து வந்ததால் தன்னார்வு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 300 மீட்டருக்கு இருவழிச் சாலைக்கான நடுகட்டைகள் அமைத்துள்ளனர்.

    மேலும் விபத்தை குறைக்க பல்வேறு ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்டத்தை மீறாமல் ஹெல்மெட் அணிதல், செல்போன் பேசுவதை தவிர்த்தல், அதிக பாரத்துடன் செல்வதை தவிர்த்தல் போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் 3 பேர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    திருவொற்றியூர்:

    சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கம், மணலி மற்றும் எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகம் செல்லும் கன்டெய்னர் லாரிகள் முன்னேறி செல்வதற்காக ஒரு லாரிக்கு ரூ.100-ம், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் தலா ரூ.200-ம் போக்குவரத்து போலீசார் லஞ்சமாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதமாக வசூலித்தனர்.

    ஆனால் அதற்குரிய ரசீதை போலீசார் வழங்கவில்லை. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது.

    இதையடுத்து இந்த விவகாரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவர் சம்பவத்தன்று பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, சிறப்பு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் ஏட்டு வெங்கடாச்சலம் ஆகிய 3 பேரையும் பணிஇடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 
    ×