என் மலர்
நீங்கள் தேடியது "trains"
- கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும்.
- ரெயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வெளியூர் பயணங்களுக்கு அதிக அளவில் ெரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும். இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ெரயில் சேவை இல்லாததால் இரண்டு ெரயில்கள் மாறி மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு ெரயில் சேவை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கூட சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூர் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உடுமலை-பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி - திண்டுக்கல் ெரயில்பாதை அகல ெரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 2017ல் நிறைவடைந்தது.ஆனால் மீட்டர்கேஜ் காலத்தில் பொள்ளாச்சி வாயிலாக இயக்கப்பட்ட கோவை- ராமேஸ்வரம், கோவை- தூத்துக்குடி, கோவை-கொல்லம், கோவை - திண்டுக்கல் போன்ற ெரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.
இந்த ெரயில்களை இயக்க வேண்டும் என, ரெயில்வே பயணிகள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உட்பட பலரும், அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை.கொரோனா பரவலுக்கு முன் காலை மற்றும் இரவு நேரங்களில், கோவை மாவட்ட பயணிகள் வசதிக்காக கோவை-பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி - கோவை ெரயில்கள் இயக்கப்பட்டன. அவை இப்போது இயக்கப்படுவதில்லை.
இதனுடன் கோவை, பொள்ளாச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் - தாம்பரம், தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட திருநெல்வேலி, டானாபூர், வாரம் ஒரு முறை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்களை, தினசரி ெரயில்களாக இயக்க வேண்டும்.
பாலக்காடு - திருநெல்வேலி செல்லும் பாலருவி விரைவு ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வேலை நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - கோவை மெமூ ெரயிலையும், பொள்ளாச்சி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
இவற்றுடன் திருவனந்தபுரம் - மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ெரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி வழியாக கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ெரயிலை இயக்கவும், ெரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. அந்த பணிகள் கூட இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.
அதேபோல், அமிர்தா ரெயிலின் மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை, கொரோனாவுக்கு முன்பிருந்ததை போலவே அமரும் வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு உடுமலை, பொள்ளாச்சி பகுதி மக்களின் ரெயில்வே சேவை குறித்த கோரிக்கைகள் ஏராளமாக உள்ள நிலையில் அதை பாலக்காடு கோட்ட நிர்வாகமும், தெற்கு ெரயில்வேயும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.தெற்கு ெரயில்வே நிர்வாகம், இந்த கோரிக்கைகளில் கவனம் செலுத்தி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ெரயில்பாதையாகவும், மின்மயமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ள உடுமலை, பொள்ளாச்சி ெரயில் வழித்தடத்தில், மக்கள் எதிர்பார்க்கும் ெரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ெரயில்வே ஆர்வலர்கள் பிரதமருக்கு மனுவாக அனுப்பியுள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை - பொள்ளாச்சி ரெயில் காலை, 5:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, பொள்ளாச்சி வரும். அதேபோல் இரவு 8:30 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு கோவை செல்லும். இதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதி பயணிகளுக்கு செம்மொழி, ஆலப்புழா மற்றும் நீலகிரி ஆகிய விரைவு ெரயில்களை பிடிக்கவும், பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை பிடிக்கவும், இணைப்பு ெரயிலாக இருந்தது.அதேபோல் பொள்ளாச்சி - கோவை ெரயில், சென்னை, நீலகிரி, சேரன், பெங்களூரு, யஷ்வந்த்பூர் ஆகிய ெரயில்களுக்கு இணைப்பு ெரயிலாக இருந்தது.கொரோனா பரவலின்போது இந்த இரண்டு ெரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ெரயில்களை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலி வரை வாராந்திர விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ெரயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது. ஆனால், கிணத்துக்கடவில் இந்த ெரயில் நிற்காததால், இப்பகுதி மக்கள் பொள்ளாச்சி அல்லது போத்தனூர் சென்று, இந்த ெரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது.தெற்கு ரயில்வே நிர்வாகம், திருநெல்வேலி ெரயிலை கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
- கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூர்:
சேலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 3-ந் தேதிகளில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. மேலும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கோவை செல்லும் உதய எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
கே.எஸ்.ஆர். பெங்களுரு-எர்ணாகுளம் எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களுரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மதுரை வழியாக செல்லும் ரெயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
சென்னை எழும்பூர்-ராமேசுவரம் விரைவு ரெயில் (16751), ராமேசுவரம்-எழும்பூர் விரைவு ரெயில் (16752), எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16823), கொல்லம்-எழும்பூர் அனந்தபுரி விரைவு ரெயில் (16824) ஆகியவை வருகிற 6-ந் தேதி முதல் மேற்கண்ட புதிய எண்களுடன் இயக்கப்படும்.
இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- 28, மார்ச் 2-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை:
பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரெயில் இயக்கவும் மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை (திங்கட்கிழமை) முதல் மார்ச் 7-ந்தேதி வரை பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில் (16731), இன்று முதல் மார்ச் 6-ந்தேதி வரை திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரெயில் (16732), வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் 6 வரை செங்கோட்டை - மதுரை சிறப்பு ரெயில் (06664), செங்கோட்டை - நெல்லை சிறப்பு ரெயில் (06648), நெல்லை - செங்கோட்டை சிறப்பு ரெயில் (06687), வருகிற 17-ந்தேதி முதல் மார்ச் 7 வரை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரெயில் (06663),
வருகிற 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரெயில் (16861), வருகிற 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரெயில் (16862), பிப்ரவரி 27, மார்ச் 1-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரெயில் (22657), 28, மார்ச் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரெயில் (22658) ஆகியவை இந்த வழித்தடங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோவை விரைவு ரெயில் (22667), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோவை - நாகர்கோவில் விரைவு ரெயில் (22628), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628),
மார்ச் 2-ந்தேதி புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரெயில் (12667), மார்ச் 3-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரெயில் (12668), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரெயில்கள் (06405/06409), மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு - நெல்லை விரைவு ரெயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (16846) ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- மதுரையில் இரட்டைப் பாதை பணிகள் காரணமாக வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடல்நகரில் இருந்து புறப்படும்.
- அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரையில் இருந்து சென்னைக்கு சொகுசு பஸ்சில் செல்ல ரூ.850 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. குளிர்சாதன பஸ்சுக்கு ரூ.1,100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனங்கள் சார்பிலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பயணிக்க, ஒருவருக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து சென்னைக்கு சீரான சாலைகள் இல்லை. பஸ்கள் குண்டும் குழி யுமான சாலைகளில் பயணிக்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு உடல் வலி, களைப்பு ஏற்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல அதிகபட்சம் 11 மணி நேரம் ஆகிறது.
மதுரை-சென்னை இடை யேயான பஸ் பயணத்துடன் ஒப்பிடுகையில், ரெயில் பயணம் சுலபமானது. முன்கூட்டியே ரிசர்வ் செய்து விட்டால் படுத்துக் கொண்டே பயணம் செய்யலாம். பயண நேரம் குறைவு. கட்டணமும் அதிகமில்லை.
மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இது 10 நிறுத்தங்களை உள்ளடக்கியது. சில ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். அதுவும் தவிர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. அதிக பட்சம் 7 மணி நேரத்தில் சென்னையை அடைய முடியும். இதன் காரணமாக மதுரையில் வசிக்கும் பொதுமக்கள் சென்னைக்கு ரெயிலில் செல்ல முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது. இது மதியம் 2.30 மணிக்கு சென்னை சேறும். அதேபோல சென்னையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரைக்கு அதிகாலை 5.30 மணிக்கு வரும்.
எக்ஸ்பிரஸ் ரெயிலை பொருத்தவரை குறைந்தபட்சம் 1000 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். மதுரை-சென்னைஇடையே தினந்தோறும் இரு மார்க்கங்க ளிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடக்கிறது. வருகிற 17-ந் தேதி முதல் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரெயில் (12636) மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரெயில் (12635) ஆகியவை கூடல்நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல பிப்ரவரி 16 முதல் மார்ச் 3-ந் தேதி வரை மதுரை-சென்னை பாண்டியன் விரைவு ரெயில், பிப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரெயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து தினந்தோறும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இது மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை செல்லும். மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை பாதை பணிகள் காரணமாக, தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை ரெயில் நிலை யத்தில் நடைபெறும் இரட்டைப்பாதை பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை? அதே நேரத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதுவரை பயணிகள் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க வேண்டுமென்றால் கூடல் நகருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது பயணிகளுக்கு சற்று இடைஞ்சலை ஏற்படுத்தி யுள்ளது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது38). இவர் ஜெயங்கொண்டம் தனியார் டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் மது போதையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் கடும் ரகளையில் ஈடுபட்டதுடன் பஸ் வரும் நேரத்தில் சாலை நடுவே படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதாக போதையில் கத்தி கூச்சலிட்டார். இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி அந்த போதை ஆசாமியை சமாதானப்படுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
- கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
கடம்பூர் ரெயில் நிலையம்
தொடர்ந்து வியா பாரிகள், பொதுமக்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, கொரோனா காலத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
ஆனால் தற்போது கோவில்பட்டியில் நிறுத்தப்படும் ரெயில்கள் அதன் பின்னர் கடம்பூரில் நிற்காமல் நெல்லையில் நின்று செல்கிறது. இதனால் தங்கள் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு வதாக தெரிவித்தனர்.
2-வது நாளாக போராட்டம்
இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவர்கள் கூறும்ேபாது, வழக்கம் போல கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எங்களது ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்போம் என்றனர்.
- சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
- கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவை,
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி களில், சரக்கு ெரயில்கள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.282.58 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில்வே சேலம், ஈரோடு, திருப்பூர்,கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், துணிகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை இருகூரில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள், சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கரூர் அருகே உள்ள பாளையம் மற்றும் வீரராக்கியத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் சரக்கு ெரயில்கள் மூலமாக சேலம், ஈரோடு, திருப்பூர்,இருகூர், கூடல் நகர்( மதுரை) நெல்லை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப் பி வைக்கப்படுகின்றன. மேச்சேரி சாலை நிலையத்தில் இருந்து சரக்கு ெரயில் மூலமாக இரும்பு மற்றும் உலோகங்கள், காரைக்கால், சென்னை துறைமுகங்களுக்கு அனுப்பிவைக்கப்ப டுகின்றன.
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 28 லட்சத்து 81 ஆயிரத்து 722 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலமாக சேலம் ெரயில்வே கோட்டத் துக்கு ரூ.282.58 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சரக்கு ெரயில்களில் பொருள்கள் அனுப்பப்பட்டு ரூ.241.47 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 17.02 சதவீதம் சரக்கு ெரயில்களின் மூலமாக வருவாய் அதிகரித்துள்ளது.
கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருப்பூரில் இருந்து துணிகள், பருத்தி ஆடைகள் மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஈரோட்டில் இருந்து பாட்னா, மால்டா, குவாஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முட்டைகள் அனுப்படுகின்றன.சேலத்தில் இருந்தும் பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்ப டுகின்றன.
அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 31 ஆயிரத்து 391.60 குவிண்டால் பார்சல்கள் ெரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டு, ரூ. 1 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரம் வருவராய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மதுரை வழியாக செல்லும் 3 ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வருகிற 24-ந்தேதி நாகர்கோ விலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.
மதுரை
திருவனந்தபுரம் கோட்டத்தில் மேலப்பாளை யம்-நாங்குநேரி இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தாம்பரத்தில் இருந்து நாளை (18-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் (20691) மற்றும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) ஆகியவை நெல்லை- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும்.
அதேபோல திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628) இரு மார்க்கங்களிலும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்த புரம் இண்டர்சிட்டி ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். அதேபோல வருகிற 22-ந்தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரெயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருகிற 23-ந்தேதிபுறப்படும். தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரெயில் (22658) ஆகியவை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.
இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 23-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12667) மற்றும் வருகிற 24-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.
- இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.
- சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளத்தை சுற்றிலும் காகித ஆலைகள், நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிக அளவு உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்களும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காகவும், இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மடத்துக்குளம் ரெயில்வே நிலையத்தில் பாலக்காடு-திருச்செந்தூர், கோவை-பழநி உள்ளிட்ட பயணிகள் ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இவ்வழித்தடத்தில் கூடுதலாக ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் உடுமலை, பழநிக்கு சென்று ரெயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக வலியுறுத்தியும் மடத்துக்குளம் ரெயில் நிலையம் குறித்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கைகள் குறித்து பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் சார்பில் ரெயில்வே மதுரை மண்டல மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மடத்துக்குளத்தில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல் பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ், அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை மடத்துக்குளம் நிலையத்தில் ஒரு நிமிடம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த ெரயில் சேவைகளை செயல்படுத்தினால் பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.
- சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
- கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.
நாமக்கல்:
கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்க ளுக்கும், சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.
மறு மார்க்கத்தில் 29-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு இந்த ரெயில் (எண். 07390) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.
இந்த ரெயில் ஹூப்ளியில் இருந்து வரும்போது ராணி பெண்ணூர், ஹரிஹார், தாவன்கரே, பிரூர், அர்சி கெரே, எஸ்எம்விடி பெங்க ளூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஹூப்ளி - காரைக்குடி செல்லும் ரெயில் கர்நாடகா மாநிலம் ஹாவேரியிலும், காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் கராஜ்கியிலும் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி செல்லும்போது, சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 6.45க்கு வந்து 6.55க்கு புறப்படும், நாமக்கல்லில் இரவு 7.44க்கு வந்து 7.45க்கு புறப்படும், கரூரில் இரவு 8.23க்கு வந்து 8.25க்கு புறப்படும்.
காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் 29-ந் தேதி மாலை 3.28 மணிக்கு கரூர் வந்து, 3.30க்கு புறப்படும். நாமக்கல்லில் மாலை 4.03 மணிக்கு வந்த 4.05 மணிக்கு புறப்படும், சேலத்திற்கு 4.50 மணிக்கு வந்து சேர்ந்து 5 மணிக்கு புறப்படும்.
சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்:
கர்நாடக மாநிலம் அர்சிகெரே நகரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம் கண்ணூர் வரை கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12.15 மணிக்கு கர்நாடக மாநிலம் அர்சிகெரேயில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் (எண்.06205), மறுநாள் மாலை 5.15 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் கன்னூ ரில் இருந்து 29-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்.06206), மறுநாள் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு அர்சிகெரே சென்றடையும்.அர்சிகெரே வில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் தும்கூர், சிக் பனா வர், எஸ்எம்விடி பெங்க ளூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கா ரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வட கரா மற்றும் தலச்சேரி வழியாக கண்ணூரை சென்றடையும்.
அர்சிகெரேயில் வரும் இந்த ரெயில் சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7.47 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்படும், ஈரோட்டிற்கு இரவு 8.40 மணிக்கு வந்து, 8.50 மணிக்கு புறப்படும், திருப்பூருக்கு இரவு 9.33 மணிக்கு வந்து 9.35 மணிக்கு புறப்படும். கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.37 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் நாளை கண்ணூரில் இருந்து அர்சி கெரோ செல்லும்போது கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 2.40 மணிக்கு வந்து 2.42 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு மாலை 3.35 மணிக்கு வந்து 3.45 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 4.35மணிக்கு வந்து 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
- பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது.
- இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர்.
உடுமலை:
விடுமுறை நாட்கள் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும்ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
பாலக்காடு - திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 7:10 மணிக்கு வந்து 7:15 மணிக்கு கிளம்புகிறது.பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது. ெரயிலில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து ஏறுகின்றனர். ெரயில் பெட்டியில் இடமில்லாமல் நின்று கொண்டே பயணிக்கும் நிலை காணப்படுகிறது.
இது குறித்து ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-
பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர். 110 பேர் வரை உட்கார்ந்து செல்ல வசதியுள்ளது. மற்றவர்கள் நின்று தான் செல்ல வேண்டும்.
உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ஏறும் போது மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதனால் பயணிகள் நின்று கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி ெரயில்வே நிர்வாகம் நான்கு பெட்டிகள் வரை கூடுதலாக இணைக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை ெரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் டுவிட்டர் வாயிலாக ெரயில்வே மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வலியுறுத்தினர்.