என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trial"

    • தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார்.
    • பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50).மீன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற சிவகுமார்(38)ஆட்டோ டிரைவர். கடந்தாண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி குமார் மனைவி வீட்டு தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது யாரோ எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.இதனால்தெருவில் நின்றுகொண்டுகு மார்திட்டிஉள்ளார் அப்போது அங்கு வந்த மீன் வியாரி பன்னீர் இதை தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .இது குறித்து பண்ருட்டிபோலீசார் வழக்குப திவுசெய்துத லைம றைவான கொலையாளி குமாரை வலை வீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையில்நி லுவையில் உள்ள பழையவழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்துபண்ருட்டி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்தங்கேவல் போலீசார்ஆ னந்த்,ராஜி,கணேச மூர்த்திஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில்நடத்தி தலைமறைவாக இருந்த கொலையாளி குமார் என்கின்ற சிவகுமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    • பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
    • அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் ஷாஜகான் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுக்கும் ஷாஜகானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.

    காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த ஷாஜகான், காதலியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த குழந்தை இறந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசகாளன்பட்டியை சேர்ந்தவா் கண்ணன் (வயது24). இவருக்கு 1½ வயதில் ருத்ரபாண்டி என்ற ஆண் குழந்தை உள்ளது. ராயபாளையம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழா விற்காக கண்ணன் குடும்பத்துடன் உறவினர் லட்சுமி வீட்டிற்கு வந்தார்.

    அந்த வீட்டில் பெயிண்ட் பணிகள் நடந்து கொண்டி ருந்தன. இதற்காக தின்னர் மற்றும் ெபயிண்டுகளை வைத்திருந்தனர். விளையாடிக் கொண்டி ருந்த ருத்ரபாண்டிக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தின்னரை பார்த்து குடிநீர் பாட்டில் என குழந்தை நினைத்துள் ளான். பின்னர் அந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினான்.

    இதை பார்த்து அதிர்ச்சிய டைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும் சிகிச்சை பலனின்றி ருத்ர பாண்டி பரிதாபமாக இறந்தான்.

    தின்னர் குடித்து குழந்தை பலியானது தொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனை சேர்ந்தவர் செல்வம் (வயது68). இவர் 2023-ம் ஆண்டு குற்ற வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் (தண்டனை கைதி) உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி முனீஸ் திவாகர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பசுமலை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுஜிதா (35). இவர் திருநகரில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுஜிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய கணவர் ஆறுமுகம் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதூர் ஆத்திகுளம் வண்டி பாதை ரோட்டை சேர்ந்தவர் சிவசங்கர் (56). இவர் மேல கோபுரம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையை நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது.

    இதுகுறித்து திலகர்திடல் போலீஸ் நிலையத்திற்கு மேன்சன் மேலாளர் சேகர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சிவசங்கர் பிணமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
    • திருமங்கலம் நகர் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் யஷ்வந்த் குமார் (வயது 19). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருடன் விரகனூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் (19), திருப்பு வனத்தைச் சேர்ந்த முருகன் மகன் செந்தூர் பாவா (19) ஆகியோர் படித்து வருகின்றனர்.

    நேற்று கல்லூரி முடிந்து யஷ்வந்த் குமார் தனது நண்பர்கள் சூரிய பிரகாஷ், செந்தூர் பாபா ஆகியோரு டன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்தை அடுத்துள்ள ஆலம்பட்டிக்கு மற்றொரு நண்பரை பார்க்க சென்றனர். மாலையில் 3 பேரும் அங்கிருந்து புறப் பட்டனர்.

    திருமங்கலம் அருகே உள்ள ராஜபாளையம் பிரிவு விலக்கு பகுதியில் வந்தபோது அங்குள்ள வளைவில் உள்ள பாலத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப் பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர்.

    இதில் படுகாயம் அடைந் தவர்களை அங்கிருந்து அவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யஷ்வந்த் குமார் பரிதாபமாக இறந்தார். சூரிய பிரகாஷ், செந்தூர் பாவா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.
    • காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சினேகா(வயது25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்துக்காக திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அங்கு சினேகாவுக்கு குழந்தை பிறந்தது. கடந்த இரு நாட்களாக சினேகாவும், அவரது குழந்தையும் மருத்துவமனையில் இருந்தனர். அவர்களை குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வந்தனர். பின்பு சினேகாவும், அவரது குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்து சினேகாவின் குடும்பத்தினர் புறப்பட தயாராகினர். அப்போது பிறந்த குழந்தைக்கு சில பராமரிப்பு தேவைப்பட்டதால், செவிலியர்கள் கூறுவதை கேட்பதற்காக குழந்தையுடன் சினேகா மருத்துவமனையில், தான் தங்கியிருந்த அறையில் காத்திருந்தார்.

    அப்போது அங்கு நர்சு உடையணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் திடீரென சினேகாவின் கையை பிடித்து ஊசி போட முயன்றார். அவர் வைத்திருந்து சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சினேகா அதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    ஆனால் அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார். அப்போது அங்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அந்த பெண் அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணி புரியும் அனுஷா(25) ஆவார்.

    காயங்குளத்தை சேர்ந்த அவர், சினேகாவின் உடலில் சிரிஞ்சு மூலம் காற்றை ஏற்றி கொல்லமுயற்சி செய்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.

    அவர் எதற்காக சினேகாவை கொல்ல முயன்றார்? என்று விசாரணை நடத்தினர். அதில் சினேகாவின் கணவர் அருணும், அனுஷாவும் நண்பர்கள் என்பதும், இருவரும் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    குழந்தை பெற்ற பெண்ணை, மற்றொரு பெண் நர்சு வேடமிட்டு வந்து நரம்பில் காற்றை செலுத்தி கொல்ல முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார்.
    • சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வினீத்குமார். இவர் இன்று மதியம் இவருடைய சித்தி கற்பகத்துடன் அதே பகுதி விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார். அப்போது ஷோரூமில் மோட்டார் சைக்கிளை எடுத்து சாலையில் நிறுத்தியபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர்கள் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வினீத்குமாரின் சித்தி கற்பகம் உயிரிழந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து விபத்தில் படுகாயம் அடைந்த வினீத்குமாரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மருத்துவ செலவுக்காக பணம் வாங்குவதற்கு சென்றார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எழு மேடு அகரத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 50). இவரது வீட்டிற்கு உறவினர்கள் சின்னதுரை மற்றும் அங்காளம்மாள் வந்துள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென்று அங்காளம்மளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது கணவர் சின்னதுரை தங்கள் உறவினர்களிடம் மருத்துவ செலவுக்காக பணம் வாங்குவதற்கு சென்றார். ஆனால் அங்காளம்மாள் திடீரென்று உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த அங்காளம்மாள் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.
    • சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வாகனம் மோதி தந்தை, மகள் பலியானார்கள். கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 41). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுவினா (6). அதே பகுதியில் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு தனசேகர் அவரது மகள் மதுவினாவை கடலூர் - விருத்தாச்சலம் சாலை எஸ்.என். நகரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை யார் ஓட்டியது ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை- மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையை விரைந்து முடிக்க கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
    • வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை கோர்ட்டுக்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அதில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, விசாரணையை விரைந்து முடிக்க உத்தர விட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டு மென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்.

    2021ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி ஹேம்நாத் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கில் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை கோர்ட்டுக்கு மாற்ற மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி 56 வீட்டு காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது31). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அவரது தாய் சீதாலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார்.
    • சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார். நேபாளம் பியு தான் மாவட்டம் ஸ்வர்கத்வாரி பகுதியை சேர்ந்தவர் பேஸ் பகாதூர் பொன் மகர். இவரது மகன் ஜீபன் பொன்மகர் (வயது22) இவர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு பெருமலை சாலையில் உள்ளஓட்டலுக்கு சொந்தமான இருப்பிடத்திற்கு சென்று விட்டார். அவரது மாநிலத்தை சேர்ந்த கிஷோர் அதிகாரி நள்ளிரவு பார்த்தபோது ஜீபன் பொன்மகர் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே எலக்ட்ரிக்கல் ஆட்டோ ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபடி இருந்துள்ளது. சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    அவரது தலையின் பின் பகுதியில் காயம் உள்ளது. எனவே அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திட்டக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜீபன் பொன்மகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×