என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vacancy"

    • திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்ட சமுக நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில் நுட்பப் பணியாளா், களப் பணியாளா் மற்றும் பாதுகாவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45 வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்எஸ்டபிள்யூ அல்லது சட்டப்படிப்பு படித்திருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடா்பான பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதே போல, மூத்த ஆலோசகா் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    தகவல் தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு 40 வயதுக்கு மிகாமலும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு பட்டப்படிப்பு முடித்து கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    களப்பணியாளா் பணிக்கு எம்எஸ்டபிள்யூ படித்தவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், சுழற்சி முறையில் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும், 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடா்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு விழிப்புணா்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத் திட்டங்கள் சென்றடைய செய்ய ஆா்வம் உடையவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    பாதுகாவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்தவராகவும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தவறியவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35, 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு நவம்பா் 10-ந் தேதிக்குள் தபால் மூலமாகவோ மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.
    • கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன்கடைகளில் 240 காலி பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்காக இதுவரை ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 1,099 கடைகள், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் என, மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் இப்பணியிடங்களுக்கு பலரும் மிகுந்த ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். கூட்டுறவு த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை பணியிடங்களுக்காக, இதுவரை, ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 14ம் தேதி கடைசிநாள் என்பதால், மேலும் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியது.
    • பாராபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நலத்துக்கு டியில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலக சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட பொருளாளர் இராம்மோகன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் தவபாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்றார்.

    மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் 7.11.2008 அன்று ஒருங்கிணை க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்துவந்த அனைவருக்கும் முன்தேதி யிட்டு பதவி நிலையில் நடைமுறை ப்படுத்தாமல் பதவி உயர்வு க்கான தேர்ந்த பட்டியலை திருத்தி வெளியிடும்போது, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும், என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பின்பற்றாமல் மேலோட்ட மாக திருத்திய தேர்ந்த பட்டியலை வெளியிட்டு பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியதை கண்டித்தும். எம்.டி.எம். சுகாதார ஆய்வாளர்களது ஊதியத்தை ரூ 20000 என உயர்த்தி வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டே அரசு ஆணைப்படி 267 -ன் படி 216 பேர் சுகாதார உதவியாளராக ஆக பணிபுரிந்து 1995-ல் சுகாதார ஆய்வாளர் நிலை 1 ஆக பதவி உயர்வு பெற்ற நபர்களுக்கு கடந்த.2016 முதல் பணியில் இளைய நபருக்கு பதவி உயர்வு வழங்கிய அதே தேதியில் பதவி உயர்வு மற்றும் இதர பலன்களை வழங்கியதைப் போன்று வழங்காமல், பாரபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு மேற்கொண்டதை கண்டித்தும் பணியில் உள்ள அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் ஹெச்.இ. பி.ஏ.பணியிடங்களுக்கான கவுன்சிலிங் நடத்த ஜியோ வலியுறுத்தியும் இக்கலந்தாய்வு முடிவடைந்த உடன் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வலியுறுத்தியும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தப்பட்டது.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
    • 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்த முகாமில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு, 04362- 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஷகிலா பானு தலைமை தாங்கினார்.

    அப்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை கள் வலியுறுத்தி செம்பனார்கோ வில் ஒன்றியத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அங்க ன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதிய சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் வள்ளியம்மாள், செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பழகுநருக்கான உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    • பழகுநர் உரிமம் காலாவதியாகி விடக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூரில் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீரபாண்டி பிரிவில் செயல்பட்டு வரும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநருக்கான உரிமம் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆனந்தும், மோட்டார் வாகன ஆய்வாளராக நிர்மலாதேவியும் உள்ளார்கள்.இரண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் இருக்கும் நிலையில் ஒரு ஆய்வாளர் மட்டுமே இருப்பதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பணியில் இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் விடுப்பில் சென்றால் பொதுமக்கள் பழகுநர் உரிமம் பெற முடியாத நிலை உள்ளது. மேலும் பழகுநர் உரிமம் பெறுபவர்களுக்கு ஒரு மாதம் கழித்து தேதி ஒதுக்கினால் பழகுநர் உரிமம் காலாவதியாகி விடக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே மோட்டார் வாகன ஆய்வாளர் காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • 5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் லதா முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் ஷகிலாபானு அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்ட த்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கு வெயிலின் தாக்கத்தால் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும் 10வருடம் பணிபு ரிந்த பணியாளர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபார தியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாவட்ட துணை தலைவர் ராணி எலிசபெத், துணை செயலாளர் மணிமேகலை, மயிலாடுதுறை ஒன்றியம் தலைவர் சுகுணா, செய்லர் கவிதாரூத், பொருளாளர் மரகதம். செம்பனார்கோயில் ஒன்றியம் வள்ளி.

    மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியம் கிருஷ்ணவேணி, ரேவதி, மல்லிகா, குத்தாலம் ஒன்றியம் லட்சுமி, சுமதி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.

    வட்டார தலைவர் ரஜினி முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ஜெயராமன் கண்டன உரையாற்றினார்.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கணினி ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    • 47 துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பணிகள் காலியாக உள்ளது.
    • மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடப்படுகிறது.

    விருதுநகர்

    தமிழகத்தில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலை-1 பணி காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 47 காலிபணியிடங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என உள்துறை அறிவுத்துள்ளது.

    • இரவு நேர சிறப்பு காவலர் பணி மேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில் இரவு நேர சிறப்பு காவலர் பணிமேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதனை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்ப டவுள்ளது. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ.8,300- வழங்கப்படுகிறது.

    இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பி க்கலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமா கவோ விண்ணப்பி க்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலை பேசி மூல மோ (04366 -290080) தொடர்பு கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூற ப்பட்டு ள்ளது.

    • விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    நாகப்பட்டினம் , நாகூர் மருத்துவமனைகள், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால், விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோரை தொடர்பு கொண்டு, மேற்கூறிய மருத்துவமனைகளுக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
    • அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்தனர்.

    பேரணிக்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமையில் பேரணி நடை பெற்றது.

    இதில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் சரண்விடுப்பு, அவுட்சோர்சிங், ஒப்பந்த முறை இரத்து செய்தல் அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட தலைமையில் நடைபெறும் கோரிக்கையில் குறிப்பாக அரசாணை152-139-115ஐஇரத்துசெய்ய வேண்டும், அகவிலைபடி நிலுவை, சரண்விடுப்பு வருங்கால வைப்புநிதி வட்டிகுறைப்பு உள்ளிட்ட கொரனா தொற்றுகாலங்களில் பறிக்கபட்ட நிலுவை தொகை வழங்க வேண்டும்.

    சாலைபணியாளர்களின் 41மாத பணி நீக்ககாலத்தை வரன்முறைபடுத்த வேண்டும்.

    மாவட்ட செயலாளர் இளவரசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார் முன்னதாக மேளாண் மாநிலசெயலர் பிரேம்சந்த் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார் இதில் மாவட்ட தலைவர் தென்னரசு, மாவட்ட செயலர்கள் ஜெயராமன்.

    வெங்கடேஸ்வரன், ராமானுஜம், கணேசன், வனிதா, ராமதேவன், ரவீந்தரன், மாவட்டநிர்வாகிகள் துணை தலைவர்கள் ராமசந்திரன் ஜவஹர் லதா மாவட்ட செயலர்கள்சௌந்த ரபாண்டியன், முருகானந்தம் வெங்கடேசன், குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி நிரைவுபெற்றது நிறைவுரையை மாநில செயலர் கோதண்டபாணி உரையாற்றினார். முடிவில்.பொருளாளர் கலா நன்றி கூறினார்.

    ×