என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Rail"

    • மைசூரில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
    • ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.50 மணிக்கு வருகிறது

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 7-ந் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    இந்த ரெயில் கர்நாடக மாநிலம் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர் காட்பாடி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடக மாநில மைசூர் ரெயிலை நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரெயில் தொடங்கி வைக்கிறார்.

    நாளை காலை 10 மணி அளவில் மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூர், வைட்பீல்டு, பங்காரப்பேட்டை, குப்பம், மல்லானூர், சோமநாயக்கன்பட்டி, ஜோலார்பேட்டை, கேத்தாண்டப்பட்டி, வாணியம்பாடி, விண்ணமங்கலம், ஆம்பூர், குடியாத்தம், லத்தேரி, காட்பாடி, வாலாஜா ரோடு சோளிங்கர், அரக்கோணம், உள்ளிட்ட 44 ரெயில் நிலையங்களில் நாளை ஒரு நாள் மட்டும் ஒரு நிமிடம் நின்று செல்கிறது.

    இந்த ரெயில் மாலை 5.15 மணி யளவில் சென்னை சென்றடைகிறது.

    மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு நாளை மதியம் 12.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில் வந்தடையும் காட்பாடிக்கு 2.25 மணிக்கு வருகிறது. பின்னர் சென்னை நோக்கி புறப்படுகிறது.

    • வந்தே பாரத், தேக்கத்தின் நாட்களிலிருந்து இப்போது இந்தியா மீண்டதற்கான அடையாளம்.
    • பாரத் கவுரவ் ரெயில் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தலங்களை இணைக்கிறது.

    பெங்களூரு:

    சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர்.ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரத கவுரவ காசி தரிசன ரெயில் பயணத்தையும் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: 


    வந்தே பாரத் ஒரு ரெயில் மட்டுமல்ல, அது புதிய இந்தியாவின் புதிய அடையாளம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது தேக்கத்தின் நாட்களிலிருந்து இப்போது இந்தியா மீண்டதற்கான அடையாளமாகும். இந்திய ரெயில்வேயின் மொத்த மாற்றத்திற்கான இலக்குடன் நாங்கள் செயல்படுகிறோம்.

    400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் விஸ்டா டோம் பெட்டிகள் இந்திய ரெயில்வேயின் புதிய அடையாளமாக மாறி வருகின்றன. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், சரக்கு போக்குவரத்தின் வேகத்தை அதிகரித்து நேரத்தை மிச்சப்படுத்தும். அதிவிரைவு அகலப்பாதை மாற்றம் ரெயில்வேயின் வரைபடத்தில் புதிய பகுதிகளை இணைத்து வருகிறது.

    நமது பாரம்பரியம் கலாச்சாரம் ஆன்மீகம் சார்ந்தது. பாரத் கவுரவ் ரெயில் மூலம் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தலங்கள் இணைக்கப்படுகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை அவை வலுப்படுத்துகின்றன. இந்த ரெயிலின் 9 பயணங்கள் நிறைவடைந்துள்ளன. 


    ஷீரடி கோயில், ஸ்ரீ ராமாயண யாத்திரை, திவ்ய காசி யாத்திரை என எல்லாமே பயணிகளுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இதேபோல் கர்நாடக மக்களுக்கு அயோத்தி, காசி மற்றும் பிரயாக்ராஜ் தரிசனத்தை வழங்கும் பாரத் கவுரவ காசி தரிசன ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை வந்தடைந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்த, வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வரவேற்றார். மேளம் தாளம் முழங்க மலர்கள் தூவி மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • பார்வையிட்ட பள்ளி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
    • பா.ஜ.க. சார்பில் மலர் தூவி இனிப்பு வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    சென்னை- பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் மோடி கே.எஸ.ஆர்.பெங்களூரு ரெயில் நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

    முதல் நாளான நேற்று அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் நின்று சென்றது. தென்மேற்கு ெரயில்வே எல்லையை முடித்துக் கொண்டு, தென்னக ரெயில்வே எல்லையான ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.05 மணிக்கு வந்தே பாரத் ெரயில் வந்தடைந்தது.

    அப்போது சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் சச்சின் புனித் உள்ளிட்ட ெரயில்வே உயர் அதிகாரிகள் வந்தே பாரத் ரெயிலை வரவேற்றனர்.

    அப்போது வந்தே பாரத் ரெயிலை பள்ளி பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். அவர்களுக்கு சென்னை கோட்ட பொது மேலாளர் சச்சின் புனித் இனிப்பு வழங்கினார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் உள்ளிட்ட ரெயில்வே துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மலர் தூவி இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    பார்வையாளரின் பார்வைக்காக வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் 10 நிமிடம் நின்று சென்றதால் பார்வையாளர்களும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வந்தே பாரத் ரெயில் முன்பு நின்று தனது செல்போன் மூலம் செல்பி எடுத்தனர்.

    ரெயில் பெட்டிகளில் ஏறி கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கோவை-சென்னை வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கோவை:

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவையில் இருந்து தினமும் சென்னைக்கு இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் செல்கின்றன.

    இந்த ரெயில்கள் அனைத்தையும் சேர்த்து தினமும் 15 ரெயில்கள் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று வருகிறது.

    இந்திய ரெயில்வே வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவையை கோவை வழித்தடத்திலும் தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்த சூழலில் கோவை-சென்னை வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும். சென்னையில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என உத்தேச தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கோவை மாவட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜமீல் அகமது கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    பகல் நேரத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில் சேவையை போல் இரவிலும் படுக்கை வசதியுடன் கூடிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில் சேவையையும் தொடங்க வேண்டும். கோவையில் இருந்து மதுரை, பெங்களூருவுக்கும் இரவு நேரங்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் முறையில் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கொங்கு குளோபல் போரம் இயக்குனர் நந்தகுமார் கூறும்போது, வந்தே பாரத் ரெயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேறுவது மகிழ்ச்சியாக உள்ளது. கோவை-சென்னை வழித்தடத்தில் பஸ்களை விட ரெயில்களில் பயணம் செய்யவே மக்கள் விரும்புகின்றனர். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    போத்தனூர் ரெயில் பயனாளர் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில் இருந்து பல்வேறு வழித்தடங்களிலும் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.
    • 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல்-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.

    16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது. ஆனால் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த வழி தடத்தில் சதாப்தி, இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாலும் 16 பெட்டிகள் இயக்கினால் காலியாக ஓடும் என்பதாலும் 8 பெட்டிகளாக குறைத்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    வந்தே பாரத் ரெயில் பெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இன்று சோதனை ஓட்டம் மேற் கொள்ளப்பட்டது.

    சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று சென்றது. 130 கி.மீ. வேகத்திற்கு இந்த ரெயிலை இயக்க முடியும் என்றாலும் அதைவிட குறைந்த வேகத்திலேயே இயக்கி சோதனை செய்யப் பட்டது.

    மற்ற ரெயில்களை விட குறைவான நிறுத்தம், வேகம் அதிகரிப்பு காரணமாக வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 6½ மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் சரியாக காலை 11.20 மணிக்கு கோவை சென்றடைந்தது. 5 மணி 40 நிமி டத்தில் ரெயில் கோவையை அடைந்தது. இதன்மூலம் ரெயில் சோதனை ஓட்டம் திட்டமிட்டப்படி நடந்துள்ளது.

    பிற்பகல் கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு முன்னதாக சென்ட்ரல் வந்து சேருகிறது. வாரத்தில் ஒரு நாள் தவிர 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சோதனை ஓட்டத்தின் போது ஏதாவது தொழில் நுட்ப கோளாறு, பிரச்சினை ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • பயணிகள் ஏமாற்றம்
    • காலை 7.05 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது

    வேலூர்:

    தமிழ்நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தினமும் சராசரியாக சுமார் 38,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

    இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதில் சென்னை-மைசூர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20-க்கு மைசூரை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    இதனால் காட்பாடி, வேலூர், அரக்கோணம், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அனைத்துப் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த ரெயிலில் 4 மாதத்தில் காட்பாடியில் இருந்து மட்டும் 19,176 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

    காட்பாடியில் சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.

    கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ெரயில் நிலையத்தை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ெரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சென்னை மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் சென்னை கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது.
    • 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது.

    சேலம்:

    நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    அதன்படி, சென்னையில் இருந்து கோவை வரை இயக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. அதி காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு 8 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை சென்ற டைந்தது. பின்னர் 9.15 மணிக்கு சேலம் ரெயில் நிலை யத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்த டைந்தது. அப்போது சேலம் கோட்ட ரெயில்வே மேலா ளர் பங்கஜ்குமார் சிங் ரெயிலில் உள்ள சிறப்பம்சங்களை பார்வையிட்டு இன்றைய பயணத்தில் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.

    பின்னர் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்ற டைகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மொத்தம் 16 பெட்டி களை கொண்டதாகும். இதில் உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரியில் சுழலும் வகையில் இருக்கை கள், சி.சி.டி.வி கேமரா வசதி, ரெயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி வசதி, வைபை, ஜி.பி.எஸ், எல்.சி.டி திரைகள், தனித்தனி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ரெயிலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். 

    • மத்திய ரெயில்வே மந்திரிக்கு கதிர் ஆனந்த் எம்.பி. கடிதம்
    • மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும் என தகவல்

    வேலூர்:

    சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.

    கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

    இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் தி.மு.க., எம் பி கதிர் ஆனந்த் மத்திய ரெயில்வே மந்திரி ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது;

    சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படு த்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    எனது வேலூர் மக்களவைத் தொகுதி மக்களின் சார்பாக, சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இது இப்பகுதியில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும்.

    எனவே சென்னை-கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் விரைவு ெரயிலுக்கு காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூரில் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏப்ரல் மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • வருகிற 10-ந்தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

    சென்னை:

    நாட்டின் அதிவேக ரெயில் சேவைக்காக வந்தே பாரத் ரெயில் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரெயில்களின் சேவை வழித்தட எண்ணிக்கையை ரெயில்வே அமைச்சகம் வேகமாக அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் போபால் -டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது நாட்டின் 11-வது வந்தே பாரத் ரெயில் ஆகும்.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை-கோவை இடையே 12-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

    வருகிற 10-ந்தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

    மேலும் செகந்திராபாத் தில் இருந்து திருப்பதிக்கு இந்த மாதத்திற்குள் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் வரப்பிரசாதமாக அமையும்.

    இதேபோல் பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு 15-வது வந்தே பாரத் ரெயில் இந்த மாதம் இயக்கப்பட உள்ளது.

    • பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படும்.

    திருப்பூர் :

    வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்குவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் வரும் நேரம் மாறுகிறது. கோவை - சென்னை வந்தே பாரத் ெரயில் (எண்:20644) இயக்கம் நாளை (9ந் தேதி) தொட ங்குகிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படுமென அறிவிக்கப்ப ட்டுள்ளதால், அதே நேரத்தில் கோவையில் இருந்து புறப்படும் 3 ரெயில்களின் நேரம் புதிய அட்டவணைப்படி மாற்றப்பட்டடுள்ளது.

    அதன்படி கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) காலை 5:45 மணிக்கு பதில் 5 நிமிடம் முன்பாக 5:40 மணிக்கு புறப்படுகிறது. 6:23 மணிக்கு பதில் 6:18 மணிக்கு திருப்பூர் வந்து விடும். கோவை - திருப்பதி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:22616) வழக்கமான நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாக 6:10 மணிக்கு புறப்படும். திருப்பூரை 6:50 மணிக்கு கடக்கும்.

    கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 5 நிமிடம் தாமதமாக 6:20 மணிக்கு புறப்படும். திருப்பூரை 7 மணிக்கு கடக்கும்.காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் வந்தே பாரத் ெரயில் (எண்:20644) 6:35 மணிக்கு திருப்பூர் வந்து, இரண்டு நிமிடம் நின்று 6:37 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • ரெயில் மீது கற்களை வீசிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி இடையில் ஒரு இடத்தில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை செகந்திராபாத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    திருப்பதி அடுத்த கூடூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    ரெயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் திருப்பதி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரெயில் மீது கற்களை வீசிய 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் வந்தே பாரத் ரெயில் மீது அடிக்கடி கற்கள் வீசி தாக்கும் சம்பவம் நடக்கிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்றுவிட்டார்.
    • போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார்.

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல் அவர் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்காக காத்திருந்தார்.

    வந்தே பாரத் ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

    ஸ்ரவந்தி கூட்டத்திற்கு நடுவே ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடினார்.

    இதனால் அதிர்ச்சடைந்த ஸ்ரவந்தி அலறி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்று விட்டார்.

    ஸ்ரவந்தி வைத்திருந்த பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது.

    இதுகுறித்த செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது பையில் வைத்திருந்த வைர நெக்லஸ் உட்பட ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெயில்களில் ஏறும்போது பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×