என் மலர்
நீங்கள் தேடியது "water Release"
+2
- அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.
- 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.
நெல்லை:
பிசான சாகுபடியை முன்னிட்டு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை ஒன்றிய சேர்மன் தங்க பாண்டியன், உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கனகராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றுபரப்பில் உள்ள நேரடி மற்றும் முறைமுக பாசனப் பரப்புகளுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 148 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
பிசான சாகுபடி, நாற்று பாவுதல் மற்றும் நடவுதல் போன்ற பணிகள், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.
இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட த்தில் வடக்கு கோடை மேலழகி யான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளை யங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக்கால்வாய், வடக்கு பிரதானக்கால்வாய் ஆகியவற்றின் கீழுள்ள 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை , தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை குண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வெள்ள நீர் கால்வாய் பரிசோதனைக்கு மழை காலத்தில் கடலில் உபரியாக கலக்கும் தண்ணீர் பயன் படுத்தப்படும். ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் திறந்து சோதனை நடத்த மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவதானம் சாஸ்தா கோவில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி அமைச்சர்கள் சாத்தூர்ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரது ஆலோசனையின்படி ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணை நீரை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார்.
இதில் கோட்டாட்சியர் அனிதா, பொதுப்பணித் துறை பொறியாளர் தனலட்சுமி, வட்டாட்சியர் சீனிவாசன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சரவணன், ஜான்சி, பொன்குரு கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
- அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது.
உடுமலை :
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பாசனத்துக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேலும் திருப்பூா், கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு செப்டம்பா் 25ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் நவம்பா் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், காந்தலூா், மறையூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வந்தது.
இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 87 அடியை கடந்தது. பொதுவாக அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்டால் உபரி நீா் திறந்து விடப்படும். ஆனாலும் அணையின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாய் மூலம் 440 கனஅடி தண்ணீா் புதன்கிழமை மாலை திறந்து விடப்பட்டது. இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:-
அணையின் நீா்மட்டம் 87 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும். இதற்கிடையில் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா். 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 87.08 அடி நீா் இருப்பு கானப்பட்டது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3886 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 950 அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 525 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.
- பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்படும்.
- தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் மேலக்கடையம் கிராமத்தில் உள்ள ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவுக்கு 823.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.
இதன் மூலம் தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கடையம் அருகே சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா அணையில் இருந்து பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து 140 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 1653.87 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் இன்று முதல் திறக்கப்பட்டது.
இதன் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது
- அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது
ஈரோடு,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடு வெனஉயர்ந்து வந்தது.
இதையடுத்து அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 104.72 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுஇருந்தது.
இதே போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. தற்போது கால்வாயில் 500 கனஅடியும், பவானி ஆற்றில் 500 கனஅடியும் என மொத்தம் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது.
- 29.12.2022 காலை 8.00 மணி முதல் தண்ணீர் திறக்கப்படும்.
- இதனால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழக அரசின் நீர்வளத்துறை சிறப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, 2022-2023 ஆம் ஆண்டின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.08.2022 முதல் 09.12.2022 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஏற்கனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்பொழுது பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக தண்ணீர் திறந்து விட கோரிய கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று, 29.12.2022 காலை 8.00 மணி முதல் 15.01.2023 காலை 8.00 மணி வரை 3378.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் மேலும் 17 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சா்கள் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்துவைத்து மலா் தூவினா்.
- தாராபுரம் வட்டாரப் பகுதியில் உள்ள 4,744 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
தாராபுரம் :
விவசாயம் மற்றும் குடிநீா் தேவைக்காக தாராபுரம் அருகே நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்துவைத்து மலா் தூவினா். நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்திலிருந்து பிரதான கால்வாய் வழியாக 35 கன அடியும், ஆற்று மதகு வழியாக 25 கன அடியும் தண்ணீா் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராபுரம் வட்டாரப் பகுதியில் உள்ள 4,744 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பொதுமக்களின் குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்படும் என அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசன், திருப்பூா் மாநகராட்சி 4 ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்க செயற்பொறியாளா் கோபி, உதவி செயற்பொறியாளா் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- அலங்கியம் முதல் கரூர் வரை 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.
மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும்.
- நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
முதலில் வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தேவைக்கேற்ப அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறித்த காலத்தில் பெய்யாததால் நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 154 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்மட்டம் குறைந்து வருவதால் அணைக்குள் மூழ்கி இருந்த கிறிஸ்துவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிகிறது. மேலும் மேட்டூர் அணையின் வலதுகரை வறண்டு காணப்படுகிறது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்யத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடியும், கபினி அணையில் இருந்து 2ஆயிரத்து 487 கனஅடியும் என மொத்தம் 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு நேற்றிரவு திறக்கப்பட்டது.
பொதுவாக பருவமழை காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நேரங்களில் கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும். தற்போது மழை இல்லாததால் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் ஆங்காங்கே வறட்சியின் காரணமாக பாளம், பாளமாக நிலம் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வர 6 மணிநேரம் ஆகும். எனவே புதன்கிழமை அதிகாலைக்குள் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
- மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடியாக இருந்தது.
- இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நங்கவள்ளி:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் காவிரி படுகையில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 4 நாட்களாக பிலிகுண்டு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து 18 ஆயிரத்து 58 கன அடியாக அதிகரித்தது.
தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நா டக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டுள்ளது. அதாவது கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கன அடியாக குறைந்தது.
இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாச னத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட, நீர் வரத்து அதிகமாக உள்ள தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 65.53 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.63 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் நீர் இருப்பு 29.06 டி.எம்.சி.யாக உளளது.
- 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து, இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகளில் கடந்த 15-ந் தேதி முதல் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் தெரிவித்தபடி, 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து படிப்படியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதுமேலும் அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு வினாடி க்கு 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,250 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 82.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்கால் மூலமாக நேரடியாகவும், கசிவு நீர் மூலமாகவும் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில், வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நடப்பு முதல்போகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என பாசனதாரர்களும், இந்த வாய்க்கால் மூலமாக குடி நீர் ஆதாரம் பெறும் கிராம மக்களும் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருந்தனர்.
இருப்பினும், ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் 4 நாள்கள் தாமதமானாலும் குறிப்பிட்டவாறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது.
இதனால், விவசாய முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டிருந்த விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
கடந்த வருடங்களில் இதே காலகட்டத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி இருந்தது.
ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையின் நீர் இருப்பு, தற்போது 82 அடியாக மட்டுமே உள்ளது.
இதனால், அணையில் இருந்து வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் அணையின் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்படும்.
இருப்பினும், போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டத்தை உயரச் செய்தும், கீழ்பவானி வாய்க்காலில் அதன் முழு அளவு தண்ணீரான வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு இந்த போகம் சாகுபடி எவ்வித பாதிப்புமின்றி நடைபெற வேண்டும் என்பதே கீழ்பவானி பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப் படை மதகுகளில் கடந்த 15-8-2023 முதல் 13-12-2023 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 20-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதுமேலும் தினமும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணைக்கு வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 82.71 அடியாக இருந்த நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரித்ததையடுத்து, அணையின் நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து தற்போது 80.46 அடியாக உள்ளது.
இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 19ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலையில் அதன் கடைமடைப் பகுதியான 125-வது மைலில் உள்ள மங்களப்பட்டியை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கீழ்பவானி பாசன பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-
கடந்த 19-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது. தவிர எப்போதும், கடைமடையை தண்ணீர் எட்டிய பின்னரே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பார்கள். ஆனால், தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியதற்கு காரணம், கடந்த போகத்தில் வாய்க்காலை முறையாக தூர் வாரி, மணல் திட்டுகளை அகற்றியதே ஆகும். காங்கிரீட் போட்டால் தான் தண்ணீர் கடைமடைக்கு போய்ச் சேரும் என கூறிவரும் சிலரின் கூற்று இதன் மூலமாக பொய்யாகியுள்ளது.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும், எங்களது கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட காலத்தில், இந்த போகத்துக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுத்த மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமிக்கும், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று தண்ணீர் கடைமடையை எட்டியதையடுத்து அதைக் கொண்டாடும் விதமாக அப்பகுதி விவசாயிகள் கடைமடைப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.