என் மலர்
நீங்கள் தேடியது "water shortage"
- வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம்.
- பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் டாக்டர் ஒருவர் வீடுகளில் நீர் சேமிப்பு பற்றிய 4 யோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திவ்யா சர்மா என்ற அந்த மருத்துவர் பூமியில் உள்ள நீர் சேமிப்பு அணுகுமுறை எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று கூறியுள்ளார். டாக்டர் சர்மா தனது பதிவில், ஒரு தோல் மருத்துவராக நான் எப்போதும் பக்கெட் குளியல் செய்வதை ஊக்குவிப்பேன். ஷவரில் குளித்தால் நிமிடத்திற்கு 13 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் பக்கெட் குளியலில் மொத்தமாக 20 லிட்டர் மட்டுமே ஆகும். 5 நிமிடம் ஷவரில் குளிப்பதையும், பக்கெட் குளியலையும் ஒப்பிடும் போது தோராயமாக 180 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது. இதே போல ஆர்.ஓ.வில் இருந்து வரும் நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அதனை வீட்டை துடைப்பதற்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் மூலமாக சுமார் 30 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.
மேலும் வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம். இதுபோன்ற சிறிய முயற்சிகள் மூலம் எங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 600 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இதைப்பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
- தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.
கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.
இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.
கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.
- வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரம்மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகித்து வரும் நிலையில், கோடை காலத்தில் வறட்சி நிலவும் என்பதால் போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப மாநகரின் கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது.
- ரெயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது. கோடை விடுமுறை காரணமாகவும, வெயில் காரணமாகவும் சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.
இதனால் அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ரெயிலிலும் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.
அதே நேரம் தண்ணீர் கிடைக்காமல் ரெயில்கள் திண்டாடுகின்றன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நிரப்புவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும் தனியார் தண்ணீர் லாரிகளும் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததாலும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 75 சதவீதமும் தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது வார நாட்களில் சுமார் 25 சதவீதம்தான் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இதனால் ரெயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுகிறது. அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால் நாற்றம் அடிக்கிறது. இதனால் தொலைதூரம் பயணிக்கும் பயணிகள் நிம்மதியை தொலைக்கிறார்கள்.
இந்த பிரச்சினை பற்றி ரெயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது, உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ஒரு சில நீண்ட தூர ரெயில்களுக்கு வேறு ரெயில் நிலையங்களில் நீர் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரெயில் பெட்டிகளை கழுவுதல், சுத்தப் படுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
ஒரு ரெயில் தொலை தூரத்திற்கு சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த தட்டுப்பாடு காரணமாக ரெயில் பெட்டிகளின் வெளிப்புறம் கழுவுவதற்கு தண்ணீர் கொடுக்கவில்லை.
சென்னை பேசின்பிரஜ், பராமரிப்பு நிலையத்தில் 45-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பராமரிக்கப்படு கிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
சென்ட்ரலுக்கு சுமார் 10 லட்சம் லிட்டரும், எழும்பூர் ரெயில் நிலையத்தற்கு 10 லட்சம் லிட்டரும் தேவைப்படும். ஆனால் தண்ணீர் தேவையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார்கள்.
- மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு பாரளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கரம்பை, 8 நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் 8 கரம்பை பகுதி மெயின் சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இது பற்றி தகவல அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தில் அணிவகுத்து நின்றன.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
- உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 12-ந் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 16, 500 கன அடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கடந்த 2 நாட்களாக படிப்படியாக ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1810 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2749 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 33.76 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
- 2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை.
சேலம்:
சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மல்டி ஸ்பெசா லிட்டி ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
இதனால் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக தினமும் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாகவும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் என மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காட்சி அளிக்கும்.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் முதல் கழிவறைகள் மற்றும் கை, பாத்திரங்கள் கழுவும் இடங்களிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் நோயாளிகள் ஒவ்வொரு அறையாக தண்ணீருக்கு அலைந்தும் அங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நேற்றிரவு முதல் கழிவறை செல்பவர்கள் கூட தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர். இதனால் கழிவறை அருகில் செல்ல முடியாமல் துர் நாற்றம் வீசுகிறது.
2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் அங்கு தங்கியிரு க்கும் நோயாளிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகிறார்கள்
உள் நேயாளிகள் வெளியிலும் செல்ல முடியாமல், இயற்கை உபாதையும் கழிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலரது உறவினர்கள் வெளியில் சென்று பாத்திரங்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இதே போல சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறையிலும் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் வராததால் போலீசாரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சீரான தண்ணீர் வழங்கி நோயாளிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், தடையற்ற மின்சாரமும் வழங்க வேண்டும் என்பது அங்கு சிகிச்சை பெறுபவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பொன்னேரி:
சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.600 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இங்கிருந்து மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. இதில் மொத்தம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வந்தது. இதில் 3 அலகுகள் பழுதான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக 2 அலகுகள் மட்டுமே செயல்பட்டு குடிநீரை உற்பத்தி செய்து வந்தது. இதனால் வடசென்னை பகுதிக்கு ஆலையில் இருந்து குறைவான அளவே கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வந்த மற்ற 2 அலகுகளிலும் எந்திரம் பழுதால் தண்ணீர் சுத்திகரிப்பு முழுவதும் நின்று போனது. கடந்த 4 மாதங்களாக அங்கு எந்த பணியும் நடைபெற வில்லை என்று தெரிகிறது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பழுதான எந்திரத்தில் மின் மோட்டார் பழுது, கார்பன் பில்டர் மைக்ரோ பில்டர், குழாய் உடைப்பு உளிட்ட பழுதுகளை சரி செய்ய போதிய பொருட்கள் இல்லாமலும் அதனை மாற்ற உடியாக நடவடிக்கை எடுக்காததே தண்ணீர் உற்பத்தி முழுமையாக நின்றதற்கு காரணம் என்று அங்குள்ள ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
காட்டுப்பள்ளி கடல்நீராக்கும் ஆலை பழுதால் கடந்த 4 மாதங்களாக வடசென்னை பகுதிக்கு முற்றிலும் அங்கிருந்த குடிநீர் அனுப்பப்படாமல் உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது புழல் ஏரியிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது வடசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் உள்ள எந்திர பழுதுகளை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- பெங்களூருவில் நாளுக்கு, நாள் நகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
- வீடுகள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
பெங்களூரு:
தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம் உள்பட பல்வேறு புனைப்பெயர்களால் பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் குவிந்து கிடக்கும் தொழில்களால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் நாளுக்கு, நாள் நகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதன்காரணமாக நகரில் வீடுகள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அந்த வீடுகளுக்கு பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் காவிரி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1,470 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு நகரில் 10½ லட்சம் குடிநீர் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் 2039-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளிமாநில கூலி தொழிலாளர்கள் வீடுகள் அமைத்து வருகின்றனர். நகரில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29 லட்சத்து 5 ஆயிரத்து 233 வீடுகள் இருந்தன. தற்போது வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நகர மக்களுக்கு தினமும் 2,100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
தண்ணீர் கிடைக்காதவர்கள் தங்களது வீடுகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் வருகிற 2030-ம் ஆண்டே பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கும். 2039-ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போது பெங்களூருவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள 110 கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகிக்க வேண்டி உள்ளது.
இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்க புதிய நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 65 சதவீதம் முடிந்து உள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணி முடிவடையும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீராணம் ஏரி மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்படுகின்றன. ஆனால், தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
நகருக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்ட நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக 500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
இதில் நெமிலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு திட்டத்தில் இருந்து 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.
இந்த நிலையில் சிறிய அளவிலான கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்ட மிட்டு இருக்கிறது. காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக் கேணி, எம்.ஆர்.சி. நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையையொட்டி உள்ள 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
6 மாதத்துக்குள் இந்த 5 நிலையங்களை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சிறிய அளவிலான 5 கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் தலா ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லாததால் தற்போது சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்ட பகுதிகளை தேர்வு செய்து இருக்கிறோம். 5 சுத்திகரிப்பு நிலையம் மூலம் 5 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும்.
இந்த சிறிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க பெரிய அளவிலான இடங்கள் தேவை இல்லை. சிறிய இடத்திலேயே அமைத்துவிடலாம். இதற்கு அனுமதி பெறுவதும் எளிதானது.
இந்த குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பைப்புகள் மூலம் தண்ணீரை அருகில் உள்ள குடிநீர் விநியோகிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்படுகிறது என்றார்.
இந்த திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில சுற்றுச்சூழல் கழகம், கடலோர ஒழுங்கு முறை அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.
செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். நகரம் முதல் கிராமம் வரை செல்போன் பரவி கிடக்கிறது. இதில் ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துபவர்கள் தினமும் மெசேஜ், புகைப்படங்கள் அனுப்பிக் கொள்வது, ‘வாட்ஸ்அப்’ குரூப்பில் உரையாடுவது என மணிக்கணக்கில் நேரங்களை செலவிடுகின்றனர்.
இந்த நிலையில் தண்ணீர் அஞ்சலி என விளம்பர போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலையும் நிலை நீடிக்கிறது.
இதனால் வெறுப்படைந்த, யாரோ ‘வாட்ஸ்அப்’பில் தண்ணீர் அஞ்சலி என போஸ்டர் தயார் செய்து உலா விட்டுள்ளனர். அதில், 2 கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவது, அதன் கீழ் தோற்றம் (ஆதி), நடுவில் குடிநீர் குழாய், மறைவு 2050 (ஆரம்பம்) என சித்தரித்துள்ளனர்.
இதை தவிர கவிதை ஒன்றையும் எழுதியுள்ளனர். நீ(ர்) அழுதாலும், கண் (நீர்) வருவதில்லை. காரணம் மனிதன் தான் என்பது அவனுக்கும் புரியவில்லை. நீ(ர்) இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை. நீ(ர்) மறைந்தால் மனிதகுலமே இல்லை. நீ(ர்) இன்றி தவிக்கப்போகும் உயிருக்கும், உலகிற்கும் எங்களது பணிவான கண்ணீர் அஞ்சலி என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த போஸ்டரின் கடைசியில், மகன்கள் மரம், மலை, அணை, கணவன் காற்று, மகள்கள் குளம், ஏரி நதி என எழுதியுள்ளனர். இது செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது.