என் மலர்
நீங்கள் தேடியது "Watermelon"
- 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது.
- கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தளி:
கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகிய பொருள்கள் பொது மக்களுக்கு தரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என சோதனைகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓசூர், சூளகிரி, தளி கெலமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பொருட்கள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் மற்றும் உணவு பகுப்பு ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் இருந்த 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அதன் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
- வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது.
போரூர்:
சென்னையில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆங்காங்கே கடைகளில் விற்கப்படும் இளநீர், சர்பத், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.
இதில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படும் எலுமிச்சை பழம் உடலுக்கு நல்லது என்பதால் பொதுவாகவே கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் கூடுர் மற்றும் நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 50 முதல் 60 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையிலும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் 3 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழம் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது. கோடை வெயிலையொட்டி ஏராளமான குளிர்பான கடைகள் சாலை யோரங்களில் முளைத்து உள்ளன.
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார்.
- தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போரூர்:
கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் உடல் சூட்டை தணிக்கும் பழ ஜுஸ், மோர், தர்பூசணி, கிர்ணிபழம், இளநீர் உள்ளிட்டவற்றை அதிகம் வாங்கி பருகுகிறார்கள். இதனால் தற்போது சாலையோரங்களில் ஏராமான குளிர்பான கடைகள் முளைத்து உள்ளன.
அதிகமானோர் வெயிலுக்கு இதமாக தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இதனால் கடைகளில் தர்பூசணி வியாபாரம் களை கட்டி வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரும். தினமும் 120டன்னுக்கு மேல் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார். தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது தினமும் 120 டன்னுக்கு மேல் தர்பூசணிகள் விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள போதிலும் தர்பூசணி பழங்களின் விற்பனை இன்னும் எதிர்பார்த அளவு இல்லை. மொத்த விற்பனை கடைகளில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.7முதல் ரூ.10வரை மட்டுமே விற்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தர்பூசணி பழங்களின் விலை 3 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
- இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் நடக்கிறது.
அபிராமம்
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ராமேசுவரம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தாங்க முடியாத வெயில் கொடுமை காரணமாக பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் திறந்த வெளிகளை தேடி தூங்க செல்கின்றனர்.
கடும் வெயிலால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு உள்பட பொது தேர்வும், பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலால் அவதியடைந்து வருகிறார்கள். சிறுவர்கள். வயதானவர்கள் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், முதியோர்கள் அனைவரும் பகல் நேரங்களில் சாலையில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
வெயில் கொடுமை காரணமாக உடலில் நீர்சத்து குறைவதால் அதனை ஈடு செய்யும் வகையில் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பானங்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக அபிராமம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியில் உள்ள சாலையோர தர்பூசணி, இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தர்பூசணி மற்றும் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.
- கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
- ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர்.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில் தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக மேட்டுப்பா த்தியில் நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து விதைகளை நடவு செய்கின்றனர்.
செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகி ன்றனர். எனவே ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் எடுத்து வந்தனர். இதனால் கோடை காலத்தில் பிற மாவட்ட வரத்தை எதிர்பார்க்கும் நிலை குறைந்தது.ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல் தர்பூசணி விளைநில ங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.இந்த பாதிப்பால் சில பகுதிகளில் தர்பூசணி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில்சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை துவங்கியுள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது தர்பூசணியை கிலோ 12 - 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.அதிக வெயில்உள்ளிட்ட காரணங்களால் ஏக்கருக்கு 2 டன் வரை விளைச்சல் குறைந்துள்ளது.சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில்விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தைதவிர்க்க முடியும் என்றனர்.
- இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது.
- விழாவில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஓ.எல். பெரியசாமி, மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், இளைஞரணி செயலாளர் ஆர். எஸ்.ரஜினி விக்னேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு இலவச நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர்.
இதில் மன்ற நிர்வாகிகள் ராஜேந்திரன், இனியன், முருகன்,வினோத், எழிலரசன், கோபால், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- எலி கடித்த பழங்கள் சிக்கியது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தரமற்ற பழங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை நுங்கப்பாக்கத்தில் லயோலா கல்லூரி சுற்றுச்சுவரையொட்டிய பகுதியில் ஏராளமான தர்பூசணி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கோடை காலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தர்பூசணியை வாங்கி சாப்பிட்டு தாகம் தணிப்பார்கள்.
இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் மற்றும் கிர்ணி பழங்கள் தரமற்றவையாக இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இன்று காலையில் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பழங்களின் தரத்தை பரிசோதித்தனர். இதில் எலி கடித்த பழங்கள் சிக்கியது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தரமற்ற பழங்களை பறிமுதல் செய்தனர்.
- வெயிலுக்கு இதமான பழமாக கருதப்படும் தர்பூசணியிலும் தற்போது கலப்படம் வந்துவிட்டது.
- சிலர் தர்பூசணியில் பழத்தின் உள்புற வண்ணம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் செயற்கையாக ரசாயன வண்ணம் சேர்க்கிறார்கள்.
சென்னை:
கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்புகளை தடுக்கவும், தாகத்தை தணிக்கவும் தர்பூசணி மிகவும் சிறந்தது.
சென்னையில் கடைகள் மற்றும் சாலையோரங்களில் தர்பூசணி குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 1 கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணி வாங்கி சாப்பிடுகிறார்கள். தர்பூசணியை ஜூஸ் போட்டும் குடிக்கிறார்கள்.
வெயிலுக்கு இதமான பழமாக கருதப்படும் தர்பூசணியிலும் தற்போது கலப்படம் வந்துவிட்டது. சிலர் தர்பூசணியில் பழத்தின் உள்புற வண்ணம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் செயற்கையாக ரசாயன வண்ணம் சேர்க்கிறார்கள். இந்த பழங்களை வாங்கி சாப்பிடும் போது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
சிவப்பு நிற ரசாயன வண்ணத்தை தண்ணீரில் கலந்து அதை ஊசி மூலம் தர்பூசணிக்குள் செலுத்தி விடுகிறார்கள். தர்பூசணியின் பல பக்கங்களில் இருந்தும் ஊசி மூலம் ரசாயன வண்ணத்தை செலுத்துவதால் தர்பூசணி பழத்தின் உள்புறம் நன்றாக சிவப்பாக மாறுகிறது. இதனால் நன்றாக பழுத்து இருப்பதாக நினைத்து பொதுமக்களும் அதை சாப்பிடுகிறார்கள்.
செயற்கை வண்ணம் கலந்த தர்பூசணியை சாப்பிடும்போது முதலில் நாக்கு சிவப்பாக மாறும், வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வாந்தி, மூச்சிரைப்பு, டயாரியா, வலிப்பு, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தர்பூசணியில் ஊசி மூலம் இந்த ரசாயன வண்ணத்தை கலந்து விடுகிறார்கள். இதனால் பழத்தின் வெளிப்புறத்தை பார்க்கும் போது எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் பழத்தின் உள்பகுதிக்குள் ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கும். எனவே தர்பூசணி வாங்கும்போது மிகவும் உஷாராகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பழத்தின் வெளிப்புறத்தை நன்றாக உற்று கவனித்தால் ஊசி ஏற்றப்பட்டதற்கான அடையாளம் தெரியும். சில நேரங்களில் எலி பிராண்டியது போன்ற அடையாளமும் காணப்படும். எனவே அது போன்ற அறிகுறிகள் தெரியும் தர்பூசணி பழங்களை யாரும் வாங்கக் கூடாது.
ஒரு வேளை ஊசியின் தடம் பதித்திருப்பது தெரியாத நிலையில் பழத்தை வாங்கி விடலாம். ஆனால் தர்பூசணியை வெட்டிய பிறகு சிவப்பாக காணப்படும் பழத்தை வெள்ளை நிற கை துடைக்கும் காகிதத்தால் துடைத்து பார்த்தால் அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த காகிதத்தில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து காணப்படும். அதை வைத்து அந்த பழத்தில் செயற்கை வண்ணம் சேர்த்திருப்பதை கண்டறிய முடியும். ரசாயன வண்ணம் சேர்க்காத பழம் என்றால் காகிதத்தில் வண்ணம் ஒட்டாது. அதில் இருந்தே அது நல்ல பழம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொதுமக்கள் வாங்கும் தர்பூசணியில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த பழத்தை மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படும். அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக அந்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர். பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம், வெள்ளிமேடு பேட்டை, ஒலக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மரக்காணம் அடுத்த ஆலத்துார், நடுக்குப்பம், முருக்கேரி பகுதிகளிலும், வானுார் அடுத்த ரங்கநாத புரம், விநாயகபுரம், பரங்கனி, எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்பூசணி சாகுபடி செய்யப் பட்டது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு டன் 7,500 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. திண்டிவனம், மரக்காணம் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி அறுவடை செய்யப்படுகிறது
இது குறித்து தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், '2 மாத பயிர் தான் தர்பூசணி. எங்களிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு தர்பூசணி பழங்களை கடந்த ஆண்டு வாங்கிச் சென்றனர். இதனால் தர்பூசணி செடிக்கு மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்சுவது மற்றும் ஆட்கள் கூலிக்கே கடந்த ஆண்டு சரியாகி விட்டது .இதில் எந்த லாபமும் கிடைக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் தற்போது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது என தெரிவித்தனர்.
- பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள்.
- தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
போரூர்:
தமிழகத்தில் தற்போது பனி சீசன் முடிந்து கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விட்டது. இதனால் சாலை ஓரங்களில் நீர் மோர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள் விற்பனை அதிக அளவில் முளைத்து உள்ளன.
பகல்நே ரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள். தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
மேலும் சாலையோரங்களில் ஆங்காங்கே தற்போது வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனையும் அதிகரித்து உள்ளன. குவித்து வைத்து விற்கப்படும் தர்பூசணியை முழுபழங்களாகவும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது.
இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களாகவே செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவியத் தொடங்கி உள்ளன.
தற்போது தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்படுகிறது.
வெளி மார்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தர்பூசணி பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
- வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.
காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.

1. வாழைப்பழம்:
வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

2. தர்பூசணி:
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.

3. பப்பாளி:
பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.

4. ஆரஞ்சு:
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.

5. ஆப்பிள்:
ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.

6. அன்னாசி:
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.

7. மாம்பழம்:
வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.

8. பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.

9. கிவி:
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.

10. திராட்சை:
திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.
- தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது.
- கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும், ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பரந்தாமன் எம்.எல்.ஏ., மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.