என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wayanad Landslide"

    • குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.
    • குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

    தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிக அருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசு, இந்திய ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.

    குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்! மோகன்தாஸ் - 9344624697 கார்த்திக் - 9080126335 பழனி - 8903289969 தியாகராஜன் - 6382953434

    • நாங்கள் 70-க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துள்ளோம். உடல்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
    • அதிகமான மக்கள் காணாமல் போனதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்கள் (இன்று மற்றும் நாளை) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் மேலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மிகவும் மோசமான நிலை தொடர்வதாக கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலை குறித்து கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு கூறியதாவது:-

    வயநாட்டில் இன்னும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. நாங்கள் 70-க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துள்ளோம். உடல்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். விசாரணை நடத்தப்பட்டு உடல் பரிசோதனைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிகமான மக்கள் காணாமல் போனதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

    அடிப்படை பிரச்சனை என்னவென்றால் ஒரு பகுதி (region) முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியின் பெரும்பகுதியை எங்களால் சென்றடைய முடியவில்லை. ஒரு சிறிய குழு ஆற்றைக் கடந்து அந்த பகுதியை அடைந்துள்ளது. ஆனால் உதவி வழங்கி, மீட்புப்பணியில் ஈடுபட இன்னும் அதிகமானோரை அனுப்ப வேண்டியது அவசியம்.

    இன்றும் நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களால் ஹெலிகாப்படரை இயக்க முடியாது. இதனால் வான்வழி மீட்பு, மற்றும் வான்வழியாக பொருட்களை கொண்டு செல்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலம் வழியாக மட்டுமே மீட்புப்பணி மேற்கொள்ள முடியும் என்பதால் மிகவும் சவாலானது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. பாலம் இழுத்துச் செல்லப்பட்டது. இது பேரிடியாகும். என்டிஆர்எஃப் உள்ளது. ராணுவ உதவியையும் பெற்றுள்ளோம். மற்ற அமைப்புகளும் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு தெரிவித்துள்ளார்.

    • 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்,

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் காளிதாஸ், கல்யாண குமார் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, கேரளா வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் 1070 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுவரை உதவிக்கோரி எந்த அழைப்பும் வரவில்லை என்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
    • மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் தமிழர்களின் மனங்களை உலுக்கியிருக்கிறது. பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மாநில மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தும் "தேசிய பேரிடர்" எனும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

    • மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

    கேரள இன்று நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் சவாலுக்கிடையில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணி சிக்கலாக உள்ளது. மேப்பாடி மருத்துவமனையில் 62 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    எதிர்பாராமல் நடைபெற்ற நிலச்சரிவு. மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை காணாத பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் நிலச்சரிவு குறித்து விசாரித்துள்ளனர். கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

    மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 108 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 60 குழுக்கள் களத்தில் உள்ளனர்.

    மீட்பு பணிக்கு வந்த 2 ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலையால் கோழிக்கோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீட்பு பணியில் கேரள போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

    • இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
    • கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

    இதையடுத்து கேரளா மாநிலம் வயநாடு சூரல் மலையில் ஆற்றின் நடுவே இரவிலும் தொடந்து மீட்புபணிகள் நடந்து வருகிறது. சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணியானது நடைப் பெற்று வருகிறது.

    • நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
    • வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

    புதுடெல்லி:

    கேரளாவின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தியின் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'வயநாட்டுக்கு சகோதரி பிரியங்காவுடன் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தேன். ஆனால், கனமழை, மோசமான வானிலை காரணமாக நாங்கள் அங்கு செல்ல இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மும்பையில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள்.
    • கேரள மாநிலம் அம்பூரியில் கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேம்பாடி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் பலர் மாண்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * அசாம் மாநிலம் கவுஹாத்தி: கனமழை காரணமாக 1948-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவால் ஒரு கிராமம் முழுவதும் புதையுண்டது.

    * மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங்: கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 60 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை 91 பகுதிகளாக சிதைந்தது. நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    * உத்தரகாண்ட் மாநிலம் மல்பா: 1998-ம் ஆண்டு ஆகஸ்டு 11 முதல் 17-ம் தேதி வரை இங்கு தொடர்ச்சியான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    * மகாராஷ்டிரா மாநிலம் மும்பை: கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 67 பேர் பலியானார்கள். ரெயில்களும் தடம்புரண்டு விபத்துக்குள்ளாயின.

    * கேரள மாநிலம் அம்பூரி: கனமழை காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் இறந்தனர். அதே நேரம் பாதிப்புகளும் மிக அதிகமாக இருந்தன.

    * உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்: கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி உத்தரகாண்டில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட நிலச்சரிவில் 5,700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் தமிழகத்தில் இருந்து ஆன்மிக பயணம் செய்தவர்களும் அடங்குவார்கள். சுமார் 4,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. நாட்டின் மிக மோசமான நிலச்சரிவாக கேதார்நாத் சம்பவம் பார்க்கப்படுகிறது.

    * மகாராஷ்டிரா மாநிலம் மாலின்: கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மாலினில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 151 பேர் இறந்தனர் மற்றும் 100 பேர் காணாமல் போயினர்.

    * கேரள மாநிலம் மூணாறு: கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக நள்ளிரவு நேரத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 67 பேர் பலியானார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, மலப்புரம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    இதனால் அந்த 8 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாளை தினம் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அன்றைய தினம் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கோட்டயத்தில் உள்ள எம்.ஜி. பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழகம் ஆகியவை இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளன. மேலும் அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.
    • 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகிறது. கனமழை பெய்யும்போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்று நடக்கும்போது உயிர்ப்பலியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்படுகிறது.

    அதிலும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும், அதனையொட்டிய மாதங்களிலும் பல பேரழிவுகள் நடந்திருக்கின்றன. நேற்று (ஜூலை 30-ந்தேதி) வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    இதேபோன்று 1974-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடுக்கி அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியாகினர். 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோட்டயம் கூட்டிக்கல் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகினர்.

    2019-ம் ஆண்டு வயநாடு புதுமலை, மலப்புரம் காவலப்பாறை, கோழிக்கோடு விலங்காடு ஆகிய இடங்களில் ஆகஸ்டு மாதத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 60 பேர் இறந்து விட்டனர். 11 பேர் காணாமல் போயினர்.

    2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இடுக்கி பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 66 பேர் பலி யானார்கள். இதேபோன்று 2001-ம் ஆண்டு திருவனந்தபுரம் ஆம்புரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேரும், 2021-ம் ஆண்டு இடுக்கி கொட்டிக்கல் மற்றும் கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

    • சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
    • உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்த மாணவி ஒருவர் மாயமாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். சாமிதாசின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சாமிதாசின் மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து சாமிதாஸ் தனது மகளை, வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டார்.

    இவரது மாமனார், மாமியார் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சாமிதாசின் மகள் சூரல்மலையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாமிதாசின் மாமனார் குடும்பம் முழுவதும் சிக்கி மாயமானது.


    மீட்பு படைவீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, இந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஆனால் சாமிதாசின் மாமனார், மாமியார் மற்றும் சாமிதாசின் மகள் ஆகியோரின் நிலை இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

    மகள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அறிந்ததும் சாமிதாஸ் உடனடியாக தனது உறவினர்கள் சிலருடன் கேரளா விரைந்தார்.

    சூரல்மலை பகுதிக்கு சென்ற அவர், அங்கு தனது மகள் மற்றும் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

    மகளின் நிலை என்ன என்பது தெரியாததால், சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார். தற்போது அவர் மேப்பாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளார்.

    சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    அங்கு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் நிற்கும் சாமிதாஸ், ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்படும் உடல்கள் மற்றும், சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களை ஓடி சென்று அது தனது மகளாக இருக்குமோ என பார்த்து வருகிறார். ஆஸ்பத்திரியில் அவர் அங்கும் மிங்குமாக சென்று வருவது மற்றவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுவரை அவரது மகள் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாததால் ஆஸ்பத்திரி வாசலில் அவர், கண்ணீர் மல்க தனது மகள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார். தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரனா நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த இயற்கைச் சிற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    அதிமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ×