என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding ceremony"

    • டாக்டர் சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பா.சரவணன்-கனிெமாழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித் குமாருக்கும், தனசேகரன்-விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் சாதுர்யா என்கிற அபூர்வஸ்ரீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அவர்களது திருமணம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்து வக்கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை (14-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.இவர்களது திருமணத்தை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமண விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படு கிறது. மேலும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மணமக்கள் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் சாதுர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

    • ஜெயலலிதா கோவிலில் 11-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் விழா டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.
    • தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழகர் கோவில், பழமுதிர்சோலை ஆகிய கோவிலில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெறும், திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை தனது குடும்பத்துடன் சென்று வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த விழாவில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், எத்தனை நலத்திட்ட உதவிகள் செய்தாலும், அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சிதிருமண விழா நிகழ்ச்சியாகும். அம்மா இருக்கும்போது அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணத்தை நடத்தினோம்.அதனை தொடர்ந்து அம்மா பேரவை சார்பில் மதுரையில் 120 ஏழை, எளிய மணமக்களுக்கு திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.

    தற்போது புரட்சித்த லைவர், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டும், 51-வது பொன்விழா ஆண்டை யொட்டி, அம்மா பேரவையின் சார்பில், எனது மகள் பிரியதர்ஷினி திருமணம் உட்பட 51 எளிய மணமக்களுக்கு சமத்துவ, சமுதாய திருமண விழாவினை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி வரும் பிப்ரவரி 23-ந் தேதி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். சமத்துவம் சமுதாய திருமணவிழா என்பது, எல்லோருக்கும் சமத்துவம் படைக்கும் வகையில் அடித்தளமாக இருக்கும்.

    இந்த திருமண விழாவிற்கான முகூர்த்த கால் அமைக்கும் பணி, வருகிற, 11-ந் தேதி காலை 10 மணிக்கு டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, காமராஜ், செல்லூர் கே ராஜு, டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம். கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா.

    கருப்புசாமி பாண்டியன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ரவிச்சந்திரன், செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி குட்டி யப்பா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறனர்.

    இந்த சமத்துவ சமுதாய திருமண விழா அம்மா பேரவையின் சார்பில், அனைத்து நல்ல உள்ளங்களின் பங்களி ப்புடன், நிதிஉதவியுடன் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனர் சாத்தான்குளம் சகாபுதீன் இல்ல திருமண விழாவில் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
    • மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த சிங்கப்பூர் தொழில் அதி பரும், ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனருமான சகாபுதீன்-லைலத்து அரசியா பானு ஆகியோரது மகன் பட்டதாரி ஹபீப் ரகுமானுக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் முகமது ஹலீம்-ஜானம்மாள் ஆகியோரது மகள் பட்டதாரி இர்ஷாத் பர் ஹானாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமண நிக்கா ஏஒன் திருமண மகால் வளாகத்தில் சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் காபத்துல்லா, மலேசியா சாத்தான்குளம் ஜமாத் தலைவர் அயூப்கான், மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திருமண நிக்கா நிகழ்ச்சியை புதுக்கோட்டை தெற்கு 2-ம் வீதி ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்தி வைத்தனர். சாத்தான்குளம் பள்ளிவாசல் தலைமை இமாம் சுலைமான் சிறப்பு துவா ஓதி மணமக்களை வாழ்த்தினார்.

    முன்னதாக ஆலிம்கள் மணமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றி மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவில் கே.நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, டாக்டர் மணிகண்டன் ஆகியோர் மணமக்களுக்கு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினர்.

    மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்கள் தொழிலதி பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை யினர், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்டிட பொறியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஆலிம் பெருமக்கள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா சிறப்பாக நடைபெற வேண்டி மணமக்களை வாழ்த்தி மணமகன் மாமா சித்தார்கோட்டை ரபி அகமது- பலிலா பேகம் குடும்பத்தினர். ராமநாதபுரம் என்.எஸ்.ஏ. குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் ஹசன் அலியார் மற்றும் குடும்பத்தினர், அல்பரிதா குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் அபுல்கலாம் குடும்பத்தினர், கீழக்கரை மெரினா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் சுல்தான் சம்சுல் கபீர் பாரதி நகர் அஜந்தா பேக்கரி எம். சுலைமான், திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனர் என்.களஞ்சியம். என்.பத்மநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் தொழில்அதிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    மணமக்கள் வீட்டார் சார் பில் சித்தார்கோட்டை ரபி அகமது, தீன் டிராவல்ஸ் உரி மையாளர் சாத்தான்குளம் உசைதீன் ஆகியோர்கள் வர வேற்றனர். ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் ஷஹ் பாஸ் முகம்மது, வஜிஹா பானு, நஜீப்முகம்மது, ஜஸ்ரா, முகம்மதுஹலீம், ஜானம்மாள், முகம்மது இர்பான், முகம்மது அலி ஜின்னா, ஜெய்த்துன்பீவி, முகம்மது கலிபுல் அமீன், அனீஸ் பாத்திமா உள்பட ஏஒன் மஹால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் செய் திருந்தனர். அனை வருக்கும் ஏஒன் மஹால் நிறுவனர் சகாபுதீன், குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

    • இர்பான் மருத்துவமனை இயக்குநர் எஸ்.சாதிக் அலி இல்ல திருமண விழா நடந்தது.
    • பொறியாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தை சேர்ந்த ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்னாள் நிலைய அதிகாரியும், முன்னாள் அரசு மருத்துவமனை (காச நோய் பிரிவு) துணை இயக்குனரும், புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளிகளின் தாளாளரும் பாரதி நகர் இர்பான் மருத்துவமனையின் இயக்குனருமான மருத்துவர் எஸ்.சாதிக் அலி-கன்சுல் மகரிபா ஆகியோரது மகன் டாக்டர் பர்ஹான் அலி மணமகனுக்கும், நெல்லையை சேர்ந்த முகமது ஜலீல்-சுமையா பானு ஆகியோர் மகள் மருத்துவர் ஆமினா பேகத்திற்கும் நேற்று ராமநாதபுரம் அருகே உள்ள ஏ1 மகாலில் திருமணம் நடைபெற்றது.

    புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை செயலாளர் முகமது நிஜாமுதீன், தலைமையில் தலைவர் ஹமிதுல் ஆஸ்கீன், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், துணை செயலா ளர் செய்யது அபுதாஹிர், பொருளாளர் முகமது இப்ராஹிம், முஸ்லிம் முன்னேற்ற சங்க தலைவர் சலீம், செயலாளர் ஜாகிர் முன்னிலையில் புதுவலசை தலைமை பேஸ் இமாம் அகமது திருமணத்தை நடத்தி வைத்து நிக்காஹ் ஓதி சிறப்பு துவா ஓதினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்ருல்அமீன், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய நிர்வாகி கள், முக்கிய பிரமுகர்கள், டாக்டர்கள், பொறி யாளர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் பொறி யாளர் இர்பான் அலி, ஜாபிர் அலி, முகமது ஜபான் அலி உள்பட உறவினர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.

    • தற்போது உடன்குடிக்கு தேவையான வெற்றிலை, வெளியூரில் இருந்து வருகிறது.
    • சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதால் ஒரு கிலோ வெற்றிலை ரூ. 242-க்கு விற்பனையாகிறது.

    உடன்குடி:

    உடன்குடி கருப்பட்டிக்கு எவ்வளவு பெயர் இருக்கிறதோ அதை போல உடன்குடி வெற்றிலைக்கும் பெயர் இருந்தது.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உடன்குடியில் இருந்து தினசரி 500 கிலோ வெற்றிலை வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு உடன்குடி வெற்றிலை என்ற ஊர் பெயரோடு சென்றது.

    அது நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து தற்போது உடன்குடிக்கு தேவையான வெற்றிலை, வெளியூரில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    உடன்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடல் நீர் புகுந்து, விவசாய நிலம் எல்லாம் உவர்ப்பு நிலமாக மாறியது. இதனால் வெற்றிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தற்போது உடன்குடியில் ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றிலை உற்பத்தியாகிறது. ஒரு கிலோ வெற்றிலை ரூ. 180 ஆக நீண்ட நாட்களாக இருந்தது.

    தற்போது கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடந்து வருவதால் கிடுகிடு என ஏறி தற்போது ஒரு கிலோ வெற்றிலை ரூ. 242-க்கும், ½ கிலோ ரூ. 121-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதைப்போல கொட்ட பாக்கு ஒன்று ரூ. 5-க்கும் விற்கப்படுகிறது. கொட்டபாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கலந்து சாப்பிட்டால் உணவு ஜீரணமாகும் என்று சொல்லப்படுகிறது.

    உடன்குடி வெற்றிலை சங்கத்தில் இந்த மூன்றும் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

    • அகமுடையார் சங்க துணைத்தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.
    • நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார் நடத்தி வைத்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தமிழக தலைமை அகமுடையார் சங்க மாநில துணைத் தலைவர் நாராயண மூர்த்தி-மகேஷ்வரி ஆகியோர் மகன் தாமு என்ற தாமோதர முத்துவுக்கும், மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த ராதாகிருஷ்ணன்-மல்லிகா தேவி தம்பதியின் மகள் அஸ்விந்ரா தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டி ருந்தது. இவர்களது திருமணம் நேற்று கமுதியில் உள்ள நடராஜன் வேலம்மாள் மகாலில் நடந்தது.

    திருமணத்தை தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார்-செந்தாமரை ஆகியோர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர். விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம், மதுரை சரவணா ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர்.சரவணன், கரந்தை அ.தி.மு.க. செயலாளர் அறிவுடை நம்பி, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவர், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேச தேவர்.

    கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வகாப் சஹாராணி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், திருக்கோவிலூர் முரளி, பா.ஜ.க. பொருளாளர் பிரிவு மாநில செயலாளர் எவரெஸ்ட் கார்த்திக், தர்மர் எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சுந்தர்ராஜன், முதுகுளத்தூர் முருகவேல், மலேசியா பாண்டியன், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட பேரவை செயலாளர் மருதுபாண்டியன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி நாகராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் கிருஷ்ணன்.

    கமுதி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ், துணை சேர்மன் அய்யனார், அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை தலைவர் ஜெயமணி, வீரகுல அமர இயக்க தலைவர் முருகன், சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சேங்கைமாறன், தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பாரகு, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் சிவராம சந்திரன், அகமுடை யார் அரண் ஒருங்கிணைப் பாளர் பாலமுருகன், அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுரேந்தி ரன், மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ராமசாமி சேவை, கமுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி, முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்

    • திருமண மாப்பிள்ளையான சிவா சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
    • பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக திருமண பரிசாக வழங்கினோம்.

    திருச்சுழி:

    திருமணம் என்றாலே மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள், திருமணத்திற்கு வருபவர்கள் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். உறவினர்களை பொறுத்தவரை கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை மணமக்களுக்கு சீர் வரிசைகளாக வழங்குவார்கள்.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையிலும், திருமண மாப்பிள்ளைக்கு பிடித்ததுமான சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக அவரது நண்பர்கள் வழங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் சிவா. இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.

    தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமு டனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.திருமண மாப்பிள்ளையான சிவாவும் சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

    இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்தததால், சண்டை கிடாய்கள், சண்டை சேவல், நாட்டு இன நாய் உள்ளிட்டவைகளை அவரது நண்பர்கள் பரிசு பொருட்களாக வழங்கினர். அவர்கள் 2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அவர்கள் பரிசாக வழங்கிய சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் மணமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறும் போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக அவர் விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.

    • சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம் வெகு விமர்சையக நடைபெற்றது.

    இதை தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கும் ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது.
    • மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது. மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் வாழ்த்து தெரிவித்தனர்.

    காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் வேலங்குடி சுசிலா-துரை ராஜ் தம்பதியின் இளைய மகனும், பா.ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில துணைத்தலைவரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான பாண்டித்துரை சகோதரருமான கார்த்திகேயன், பள்ளத்தூர் சபாரத்தினம்-சாந்தி தம்பதியின் மகள் தாரணி ஆகியோரது திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முருகன், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பி இருந்தனர்.

    திருமண விழாவில் மணமக்கள் கார்த்திகேயன்-தாரணியை மதுரை ஆதீனம், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், தென் பெருங்கோட்ட பொறுப்பா ளர் நரசிங்கப்பெருமாள், மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், பா.ஜனதா மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.வி.நாராயணன், சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், தொழிலதிபர்கள் பி.எல்.படிக்காசு, பொன் பாஸ்கர் மாங்குடி எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள், வர்த்தக பிரமு கர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்களை சுசிலா துரை ராஜ், பாண்டித்துரை-திவ்ய குமாரி தம்பதியினர் வரவேற்றனர்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர் இல்ல திருமண விழா நடைபெற உள்ளது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைக்கிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மேற்கு 1-ம் பகுதி 83-வது வார்டு செயலாளரும், 83-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு உறுப்பினருமான எஸ்.எம்.டி. ரவி-வேணி தம்பதி யின் மகன் மனோஜ் பாண்டியனுக்கும், தல்லாகுளம் ம.தி.மு.க. பகுதி செயலாளர் வேல். புகழ்முருகன்- பாண்டி யம்மாள் தம்பதியின் மகள் கார்த்தி காவுக்கும் பெரி யோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது திருமணம் நாளை (10-ந் தேதி) மதுரை காமராஜர் சாலை நிர்மலா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். திருமண விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பல் வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதி பர்கள், உற்றார், உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண ஏற்பாடுகளை எஸ். எம். டி. ரவி- வேணி, திவ்யதர்ஷினி -பாண்டி குமார், முருகன், தெற்கு 2-ம் பகுதி பேரவை செயலாளர் முத்துப் பாண்டி-முத்துமீனா மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது
    • நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார்.

    கடலூர்:

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மகன் திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-

    நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் மகன் திருமண விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெய்வேலி தொகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா என்ற பெயரை கேட்டாலே பயந்து பீதியடைகின்றனர். இதனால் பாரத் என்ற பெயரை பா.ஜ.க. தூக்கிப்பிடிக்கிறது. ஜீ 20 மாநாட்டை நடத்துவதில் ஆர்வம் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக சிதைந்து கிடக்கிறது. இதில் பல அணிகள் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • மருது எஸ்ஸார் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஐடா ஸ்கட்டர் திருமண மண்ட பத்தில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முக்கிய பிரமுகர் தெய்வத்திரு

    பி. நல்ல மருது - மாரீஸ்வரி தம்பதியின் மகன் சூரிய வர்மாவுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்து-சித்ரா தம்பதியின் மகள் அபர்ணாவுக்கும் நாளை 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி, வில்லா புரம் பகுதி செயலாளர் கவுன்சிலர் போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி தி.மு.க. செயலாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84- வது வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிர மணியம், வட்ட துணைச் செயலாளர் வக்கீல் விஜயன் ஆகியோர் செய்து வருகின்ற னர்.

    ×