என் மலர்
நீங்கள் தேடியது "Welfare"
- மதுரை ரிங்ரோடு கலைஞர் திடலில் இன்று மாலை 75 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
- இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுரை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தலின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நலத்தி ட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையில் இன்று நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
பாண்டிகோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த விழாவிற்கு கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்குகிறார். இதில் 75 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.180 கோடி கடன் உதவிளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
இந்த விழாவில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மேயர் இந்திராணி பொன் வசந்த், சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேலு, அக்ரி கணேசன் மற்றும் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகுபாண்டி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி. பி. ராஜா, மூவேந்திரன், வைகை மருது,எஸ்ஸார் கோபி, அதலை செந்தில் குமார், ஈஸ்வரன் போஸ் முத்தையா கிருஷ்ணா பாண்டி குட்டி என்ற ராஜரத்தினம், பாலா என்ற பாலசுப்பிரமணியன், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, வாசு, ரோகிணி பொம்மை தேவன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைகால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.
மதுரை
காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலா ளர் பால்ச்சாமி தேவர் படத்திறப்பு, பிரைஸ் அறக் கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி னார். தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், ராஜேந்திரன், ஜெயப்பெருமாள், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்ெதாகை, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், நெல் விதை கள், பெண்களுக்கு சேலை, தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் ஆகியவற்ைற அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கி னார்.
இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., திருச்சுழி யூனியன் சேர்மன் பொன்னுத்தம்பி, காரியா பட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.
- நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா பனங்குப்பத்தில் நடைபெற்றது.
- விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா பனங்குப்பத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் .சுடர்கொடி வரவேற்புரை ஆற்றினார். திட்ட அறிக்கையை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குணசேகர் வாசித்தார். இம்முகாமின் நிறைவு விழாவில் விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் கலந்து கொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டி கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,
இந்த முகாமானது கடந்த ஒரு வாரமாக சகாதேவன்பேட்டை, இராமையன்பாளையம், பனங்குப்பம், நல்லரசன்பேட்டை, தொடர்ந்தனூர் ஆகிய ஊர்களில் நடைபெற்றிருக்கிறது. முகாமின் மூலம் இந்த 5 ஊர்களிலும் மழை நீர் சேகரிப்பின் அவசியம், சாலைகளைச் சீரமைத்தல், கோயில்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சிறு சேமிப்பின் அவசியம், எய்ட்ஸ் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு. இயற்கை உணவு முறையின் அவசியம், பிற நோய்களின் தன்மைகளை எடுத்துரைத்தல் போன்ற பணிகளை செய்யத் வலியுறுத்தி உள்ளீர்கள் என்பது வரவேற்கத்தக்கது. மேலும் மாணவர்களாகிய நீங்கள் இதுபோன்ற சமூகப் பணியில் ஈடுபடுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதில் கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சிதாநந்தம், சகாதேவன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பிரபலட்சுமி குமார், கவுன்சிலர் கிருபாநிதி பனங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி மணி,கவுன்சிலர் பச்சையம்மாள் இன்பசேகரன் தொடர்ந்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா செந்தில் குமார், தளவானூரி கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கேசவன், முன்னாள் தலைவர்கள் ராஜேஸ்வரி சுதாகர், செந்தில்குமார், துணைத்தலைவர்கள் சுதா -சங்கர் , சரவணன், அன்புசேகர் விழுப்புரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் . சிவகங்கா . பேராசிரியர் கார்த்திகேயன் . இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தனம் விஜயரங்கம், குணசேகர், சுடர்கொடி, சத்யா, ஹரிகரன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் கிராமப் பொதுமக்களும் கல்லூரி பேராசிரியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் விஜயரங்கம் நன்றி உரையாற்றினார்.
- 34 பயனாளிகளுக்கு ரூ7.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில்எபொதுமக்களிடம் இருந்து 377 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
அதன்படி தேவகோட்டை வட்டத்தை சேர்ந்த ராசு என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத் திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான் இடுபொருட் களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் ரூ.7 ஆயிரத்து 200 மானி யத்துடன் கூடிய மா பழக்கன்று மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.மானாமதுரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் சார்பில் 9 உறுப்பினர்களுக்கு ரூ.6 லட்சத்திற்கான கறவை மாட்டு வளர்ப்பிற்கு கடன் திட்டத்திற்கான ஆணை களையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், திருக்கோஷ்டியூர் மற்றும் இடைக்காட்டூர் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளர்களாக தேர்வு பெற்ற முதல் பரிசு ரூ.4ஆயிரத்தை யும், 2-ம் பரிசு ரூ.3ஆயிரத் தையும் கலெக்டர் வழங்கி னார்.
சிவகங்கை மற்றும் சக்கந்தி நியாயவிலை கடை களில் எடையாளர்களாக தேர்வுபெற்ற முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு தொகை ரூ.2ஆயிரத்திற்கான காசோலைகள் என மொத்தம் 34 பயனாளி களுக்கு ரூ.7லட்சத்து 20 ஆயிரத்து 700 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்
- மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு உள்ளன.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநா யக்கன்பாளையம் அருகே கூடலூரில் மாவட்ட வரு வாய் அலுவலகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வடக்கு வருவாய் கோட்டாட்டாட்சி யர் கோவிந்தன், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, பேரூராட்சித்தலைவர் விஸ்வபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சமூகப்பா துகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும், வருவாய் துறை மூலம் 79 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 971 ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 57 பேருக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் இணையவழி பட்டாவும், மகளிர் சுய உதவிக்குழுவில் 2 பேருளுக்கு 28 லட்சம் மதிப்பிலான மானியத் தொகை, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பேருக்கு 7 ஆயிரத்து 805 ரூபாய் மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் தாசில்தார் தங்கராஜ், கமிஷனர் பால்ராஜ், சிறப்பு தாசில்தார்கள் யமுனா, சரண்யா, நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சபி அஹமது, நந்தினி, சபின் அஹமதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற் கான முகாம் வாழப்பாடி அருகே உள்ள அத்த னுார்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நடை பெற்றது. முகாமிற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.
முகாமை முன்னிட்டு துணை கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயரதி காரிகள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்திடவும், அந்தந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்கவும் உத்தர விட்டார். இதனையடுத்து மக்களை சந்தித்து, குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயார் செய்த குழுவினர்,
அந்தந்த பகுதிக்கு தேவை யான அடிப்படை வசதிகள் மற்றும் திட்டங் களை செய்து கொடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டு மென அரசுத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.
இதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் மக்கள் நலத்
திட்டங்கள் குறித்த குடில் களை பார்வையிட்டார்.
முன்னதாக, அத்த னுார்பட்டி கூட்டுறவு கடன் சங்கம், பொது வின்யோக் ககடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வற்றை ஆய்வு மேற்கொண்ட தோடு, அத்தனுார்பட்டி புதுார் கிராம மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஆதிதிரா விடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை, மகளிர் திட்டம், தோட்டக் கலைத்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறைகளின் மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதன், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டு றவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ரவிக்குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணி கள்) ஜெமினி, வாழப்பாடி தாசில்தார் கோபால கிருஷ்ணன், அட்மாக்குழு தலைவர் சக்கரவர்த்தி, அத்தனூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாரதி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பேருந்து நிறுத்தம் கேட்டு மனு
தொடர்ந்து கலெக்டர் கார்மேகத்தை பா.ம.க. பிரமுகர் சத்தியராஜ், மருத்துவர் பிரேம்குமார் உள்பட பொதுமக்கள், மாணவ–மாணவியர் சந்தித்து புளிந்தோப்பு பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதி காரிகளுடன் கலந்தாய்வு செய்து, சாத்தியமும், தேவையும் இருப்பின் பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வழங்கினார்.
- போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் சட்ட மன்ற பேரவையின் உறுதி மொழி குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். இதில் ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் குழு தலைவர் வேல்முருகன் பேசியதா வது:-ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி உரிய காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நிதியின் மூலம் பணிகளை முடித்து விடலாம். காலதாமதம் ஏற்பட்டால் பொருள்களின் விலை மாற்றம் ஏற்படும். அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து அந்தப் பணியை முழுமையாக முடிப்பது என்பது கஷ்டமாகும். அதனால் கூடுதல் செலவினம் ஏற்படும். இது அரசுக்கு ஒருவகையில் இழப்பு ஏற்படும். இதை தவிர்த்து உரிய உறுதிமொழிகளை உரிய காலத்தில் செய்து அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் பார்த்து கொள்வதே இக்குழுவின் பணியாக உள்ளது.
அரசின் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டப்படி உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 35 பயனாளிகளுக்கு ரூ.3.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
- தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, தேசிய நோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி, அஸ்காட் திட்டத்தின்கீழ் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.
மாவட்டத்தில் கால்நடை கிளை நிலையங்கள் - 9, கால்நடை மருந்தகங்கள் - 149, நடமாடும் கால்நடை மருந்தகங்கள் - 6, கால்நடை மருத்துவமனைகள் - 7, கால்நடை பன்முக மருத்துவமனை- 1, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு-1 ஆகியவை உள்ளன.
விவசாயிகளால் 6 லட்சத்து 11 ஆயிரத்து 161 பசுக்கள், 46 ஆயிரத்து 420 எருமைகள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 733- செம்மறி ஆடுகள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 541 வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் கால்நடைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நேற்று என்.ஏ.என்.டி.ஐ. (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு அமைப்பின் சுகம் ஆகியவை இந்த இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படை த்தன்மை யுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என அவர் கூறினார்.
இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
- பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.
- பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
பல்லடம்:
பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன், முருகன் நகரில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்.
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 4.85 கோடி மதிப்பிலான 9 சாலை பணிகளை துவக்கி வைத்தார். பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் ரூ.31.21 லட்சம் மதிப்பில் 5 சாலை பணிகளை துவக்கினார். ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நில மட்ட நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-
பல்லடம் வட்டார பகுதிகளில் குடிநீர் தேவைக்காக பில்லூர் அணையிலிருந்து சூலூர் பேரூராட்சி வழியாக பல்லடம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரும்திட்டத்தினை முதலமைச்சர் முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து போது கொண்டு வந்தார்கள். தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டுள்ளது. தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பில்லூர் 3-ம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணி நடைபெற்று வருவதால், மீண்டும் இத்திட்டத்தினை பல்லடம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும். இதன் மூலம் பல்லடம் பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லட்சுமணன்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம்,பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிர மணியம்,ஊராட்சி மன்ற தலைவர்கள் புனிதா சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
- விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.
தாராபுரம்:
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.இந்த மையங்களில் இதுவரை, மாநில அரசு நலத்திட்டங்களுக்கும், சான்றிதழ்கள் பெறவும் மட்டுமே விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. மத்திய அரசின் பொது சேவை மையங்களில் (காமன் சர்வீஸ் சென்டர்) மத்திய அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
தற்போது நாடு முழுவதும் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மத்திய அரசு நலத்திட்டங்களையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மத்திய அரசின் பொது சேவை மையத்தின் லாகின் அனுமதி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இ-சேவை மையங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளூரில் இருக்கும் தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே மத்திய அரசின் திட்டங்களை பெற முடியும்.இது மட்டுமின்றி, தொடக்க கூட்டுறவு வங்கிகள், சமையல் கியாஸ் வினியோக உரிமை, பெட்ரோல், டீசல் வினியோக உரிமை உட்பட, 25 விதமான வணிக செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
வரும் நாட்களில் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சேவை தொடங்கும் என்று பொது சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது.
மதுரை
மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் புதிய பாதை-360, வெல்பேர் கிளப் இணைந்து "கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் உதவிகள் மூலம் உணர்வுகளை பெறுவோம் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது, இந்நிகழ்ச்சிக்கு தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத் தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசி னார். முன்னதாக புதிய பாதை வாசகன் வர வேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக தேசிய மனிதவள உதவும் கரங்கள் நிறுவனர் டாக்டர் முகமது பக்ஸ், தென் மாவட்ட திரைப்பட கலை ஞர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் எம்.மணி கண்டன், ஆலோசகர் செல்வவேல் பாண்டி, நடிகர் சங்க நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, பிரகாஷ் , மாநகர் காவல் உதவி ஆணையர் (கோவில் சரகம்) பா.காமாட்சி, கோல்டன் சினிமா நிர்வாக இயக்குனர் டி.ஆர்.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் புதிய பாதை சிமியோன் நன்றி கூறினார்.