என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wildlife"

    •  வனத்துறை அலுவலர்களுக்கான வனத் தீ தடுப்பு, வன உயிரினங்களை காப்பது, தீ வருமுன் காப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் வன பகுதியில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி பகுதியில்  வனத்துறை அலுவலர்களுக்கான வனத் தீ தடுப்பு, வன உயிரினங்களை காப்பது, தீ வருமுன் காப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் திலிப் தலைமை தாங்கினார். தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் வனச்சரக அலுவலர் இன்பசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த முகாமில் வன பகுதியில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.

    இதில், கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் வனசரக அலுவலர் சிவகுமார், பெரும்பள்ளம் வனசரக அலுவலர் குமேரசன், பேரிச்சம் வனசரக அலுவலர் சுரேஷ்குமார், பழனி வனசரக அலுவலர் பழனிக்குமார் , மன்னவனூர் வனசரக அலுவலர் ஞான சேகரன் மற்றும் வனவர் ராமசாமி, விவேகானந்தன், பூவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வனகாப்பாளர், வன காவலர்கள் , வேட்டை தடுப்பு காவலர்கள், சூழல் சுற்றுலா காவலர்கள் என ஏராளமான வனத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
    • பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார ங்களில், அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றி களால் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். வன எல்லை மட்டுமல்லாது, வெகு தொலைவிலுள்ள கிராம ங்களிலும் காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது.

    நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. எண்ணிக்கை அதிகரிப்பால், விவசாயி களும் காட்டுப்ப ன்றிகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விளைநிலங்க ளுக்கும், கிராம இணைப்பு ரோடுகளில் செல்லவும் விவசாயிகள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுகாவிலும் பல 100 சதுர கி.மீ., பரப்பளவில் காட்டுப்பன்றிகள் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- காட்டுப்பன்றிகளால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. வரப்பு பயிர்களை அழித்தல், விளைபொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்பு களை சேதப்படுத்துதல் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.வனத்து றையினர் இப்பிரச்சினைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிக்கி ன்றனர். பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.சமவெளிப்பகுதியில் மட்டும் தங்கி பெருகும் காட்டுப்ப ன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.இதற்கான கருத்துருவை வனத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளுக்கு முன் உடுமலை பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய சூழலில் அனைத்து விவசாயிகளும் ஒருங்கி ணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
    • வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது.

    இந்த வனச்சரகங்களில் ஆண்டு தோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    அந்த வகையில் கடந்த 23-ந்தேதி உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்றது.உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வன சகரங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

    அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டது.மேலும் யானைலத்தி, காட்டெருமைசாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரி மந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளான இன்று கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த கணக்கெடுப்பு பணியில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் மேற்பார்வையில் வனச்சரகர்கள் சிவக்குமார் (உடுமலை), சுரேஷ் (அமராவதி), மகேஸ் (கொழுமம்), முருகேசன் (வந்தரவு) தலைமையிலான வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புகாவலர்கள் ஈடுபட்டனர்.

    • போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம்.
    • மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் மழை பெய்யாமல், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவில் பனி கொட்டிவிடும். இதனால், அனைத்து செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து போய்விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் நிலவும்.

    இந்த சமயங்களில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து போய்விடும்.

    அதேபோல், நீரோடைகளில் முற்றிலும் தண்ணீர் குறைந்து வறண்டு போய் காட்சியளிக்கும். இதனால், போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துவிடும்.

    தற்போது நீலகிரியில் மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி போன்ற பகுதிகளில் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதேபோல், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் ஓடுகிறது. இதனால், விலங்குகள் மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளன.

    இதனால், ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள், காட்டு மாடுகள், மான்கள், நீலகிரி லங்கூர் குரங்குகள், மயில் உள்ளிட்ட சில பறவைகள் சாலையோரத்திலேயே சுற்றித் திரிகின்றன.

    சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகளை வாகனங்களில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த வன விலங்குகளை கண்டு உற்சாகமடைகின்றன.

    மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    • 2 முறை இந்த கண க்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
    • 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

    டி.என்.பாளையம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்பாளையம் வன ப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்கு இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு மழைக்கு முந்தைய கண க்கெடுப்பு, மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு என 2 முறை இந்த கணக்கெடுப்பு பணி நடை பெறுகிறது.

    இன்று முதல் நாளில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட பெரிய தாவர உண்ணிகளின் எச்சங்கள், கால் தடங்களும், 2-ம் நாளில் நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் என மாற்றி மாற்றி 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்க ர்பாளையம், விளா ங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 22 ஆண்டுகளாக சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
    • சாவித்ரம்மா உள்ளே நுழைந்ததும் சிறுத்தை குட்டிகள் அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வருகின்றன.

    கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா மிருககாட்சி சாலையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த மிருகக்காட்சி சாலையில் தாயை இழந்த மற்றும் பிரிந்த காட்டு விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

    சிங்கம், சிறுத்தை, புலி குட்டிகள் பராமரிப்பில் உள்ளன. இந்த பணியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சாவித்ரம்மா என்ற பெண் ஈடுபட்டுள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக இவர் சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ஒரே கடியால் மக்களை கொல்லும் காட்டு விலங்குகள் சாவித்ரம்மாவின் அன்பு பிடியில் குழந்தை போல நடந்து கொள்கின்றன.

    சாவித்ரம்மா உள்ளே நுழைந்ததும் சிறுத்தை குட்டிகள் அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வருகின்றன. அவற்றை அப்படியே வாரி எடுத்து பால் குடிச்சிட்டியா பசிக்கிறதா என கேட்டு அன்பை பொழிகிறார். கடந்த 22 ஆண்டுகளில் இவர் 100க்கும் மேற்பட்ட சிங்கம் சிறுத்தை புலிக் குட்டிகளை வளர்த்துள்ளார்.

    குட்டிகள் பெரிதாக வளர்ந்ததும் பூங்காக்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் விடப்படுகின்றன.

    நானும் எனது கணவரும் மிருகக்காட்சி சாலையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தோம். 2000-ம் ஆண்டில் எனது கணவர் இறந்துவிட்டார்.

    2 குழந்தைகளுடன் நான் தவித்து வந்தேன். அப்போதுதான் மிருகக்காட்சி சாலையில் குட்டி விலங்குகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட காட்டு விலங்கு குட்டிகள் சில நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் .

    அவற்றை அரவணைத்து பால் கொடுப்பேன். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குட்டிகளுக்கு பால் கொடுக்க வேண்டும். குட்டிகளை சிறியதாக இருக்கும் போது பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்.

    நான் வெளியூர் செல்லும் நாட்களில் இந்த குட்டிகள் சரியாக பால் குடிப்பதில்லை. அப்போது போன் மூலம் ஸ்பீக்கரில் என்னை பேச சொல்வார்கள். என்னுடைய சத்தத்தை கேட்ட பிறகு தான் பால் குடிக்கும்.

    குட்டிகள் வளர்ந்த பிறகு கூண்டில் அடைக்கப்பட்டு சரணாலயம் மற்றும் காடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அப்போது குழந்தைகளை பிரிவது போன்ற ஏக்கம் எனக்குள் ஏற்படும்.

    அந்த விலங்குகளிடமும் அதே உணர்வை காண முடியும். அதிக அளவில் சிறுத்தை குட்டிகள் தான் வளர்த்துள்ளேன்.

    என்னை நம்பி விடுகிறார்கள் நான் அவற்றை வளர்த்து தைரியமாக வெளியே அனுப்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.
    • ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுகுய்யனூர் பிரிவு உள்ளது. இந்த பகுதி வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் புதுகுய்யனூர் பிரிவு அருகே மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு ஒன்று உள்ளது. புதர்களால் நிறைந்து கிடக்கும் இந்த கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லை.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அந்த பகுதியாக வந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. சுமார் 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

    இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது சிறுத்தை கிணற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்து புதுப்பீர்கடவு, ராஜன்நகர், பண்ணாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.

    பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வருவதால், வனத்துறையினர் அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தினர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை கடும் சீற்றத்துடன் உள்ளது. எனவே மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு முன்னர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிணற்றில் கரடி ஒன்று விழுந்தது. அதனை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி அதனை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

    • சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
    • நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.

    பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
    • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாராவளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.

    இதனால் 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 104 மரங்கள் வெட்டப்பட்டது. இந்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததன் மூலம் வனத்துறையானது ரூ.2,058 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் மாநிலத்தின் தற்காலிக இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மாநில வனத்துறை 5 ஆண்டுகளுக்குள் 12 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது.

    இதன் மூலம் மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    • பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.

    அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    • மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.
    • காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட எண்ணற்ற வன விலங்குகள் உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இதன் காரணமாக வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்குள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டுக்குள் அங்கு மிங்குமாக அலைந்து திரிந்து வருகின்றன.

    எனவே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப்ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அங்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் குளம், குட்டை மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அங்கு தினந்தோறும் தண்ணீரை நிரப்பும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வன நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். மேலும் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறுவதும் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×