என் மலர்
நீங்கள் தேடியது "womens"
- எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி.
- ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வால்ரஸ் நிறுவனம் பின்னலாடை தொழிலுக்கு தேவையான பாலியஸ்டர் துணிகளை திருப்பூர் மட்டுமின்றி, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வால்ரஸ் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியிலும், திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.
இதற்காக அனைத்து தரப்பினருக்குமான ரெடிமேடு ஆடைகளை தயாரித்து, வால்ரஸ் நிறுவனத்திடமே வழங்கும் தொழில் வாய்ப்பையும் வால்ரஸ் நிறுவனம் நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்வீடு மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்புகள் இணைந்து ஏழை, எளியோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தாய்வீடு அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்ட பின்பு, வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
வால்ரஸ் நிறுவனம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தாய்வீடு அமைப்பு வால்ரஸ் நிறுவனத்தின் எஸ் இந்தியா கேன் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த தொழில் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்.
மாணவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய முன்வரலாம். குறிப்பாக குடும்பத்தை முன்னேற்றும் இடத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தாய்வீடு, வால்ரஸ் எஸ் இந்தியா கேன் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பாலியல் துன்புறுத்தல்: பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
- மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
மதுரை
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில், பெண்கள் இந்தியா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
புதிய நிர்வாகிகளாக தலைவர் கதீஜா, பொதுச்செயலாளர் சையது அலி பாத்திமா, பொருளாளர் கனகவள்ளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும், சமையல் எரிவாயுக்கான கூடுதல் வரியை ரத்து செய்து, விலை குறைப்பு செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.
- ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட அனுப்பப்பட்டி காந்திநகர். பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு வைகை குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலை தொட்டி மூலம் தேக்கி வைக்கப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 22 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய்கள் உடைந்து இருந்ததால் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் சப்ளை முற்றிலும் தடைபட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த காந்தி நகர் மக்கள் காலி குடங்களுடன் திருமங்கலம்- செக்கானூரணி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்ட த்தினால் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.
தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை மீறி போராட்டங்கள் நடந்து வருகிறது.
நேற்று பொள்ளாச்சி மற்றும் கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஸ்கீம் ரோட்டில் பெண்கள் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நூர் முகம்மது தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியினர் கணபதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 5 பெண்கள் உள்பட 14 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூவர் திடலில் நாம் தமிழர் கட்சியினர் தெற்கு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 9 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் செயலாளர் முகம்மது ஷானவாஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 40 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 23 பெண்கள் உள்பட 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது வரை பொள்ளாச்சி பாலியல் விவகார போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #PollachiCase
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

எனவே, இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) ஆலோசிக்கவும் சுமுகமான ஒரு முடிவை ஏற்படுத்தவும் பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் பூசாரிகளுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை பந்தளம் அரண்மனை பிரதிநிதிகளும், ஐயப்பன் கோயில் பூசாரிகளும் இன்று நிராகரித்துள்ளனர்.
#SabarimalaTempleverdict #PandalamPalaceRepresentatives #PinarayiVijayan
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் 4 வழிச்சாலை அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதனால் குடிமகன்கள் காணப்பாடி, வையம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மதுவாங்கி குடித்து வந்தனர். மேலும் பெட்டிக்கடை மற்றும் பழக்கடைகளில் வைத்து மது விற்பனை செய்து வந்ததால் புத்தூர் சாலையில் குடிமகன்கள் ரகளை மற்றும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அப்பகுதியை கடக்க பள்ளி மாணவ-மாணவிகள் அச்சமடைந்தனர். மேலும் ஒருசில மாணவிகளையும் கடத்திச்சென்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
தற்போது 4 வழிச்சாலை அருகே உள்ள கடைகளிலேயே அதிகவிலை கொடுத்து மதுவாங்கி குடிக்கின்றனர். பின்பு பஸ் நிறுத்தத்தில் தங்களுக்குள் சண்டையிட்டு அரைநிர்வாண கோலத்தில் படுத்துவிடுகின்றனர். இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பல கூலித்தொழிலாளர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி காலை நேரத்திலேயே வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்கின்றனர்.
இதனால் அவர்களது குடும்பம் கடுமையாக பாதிப்படைகின்றது. இதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து வந்து அனுமதியின்றி மதுவிற்கும் கும்பல் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் எல்லோராலும் பாராட்டு பெற்றுள்ளது.
இந்த திட்டத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பு, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,
பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் சவுபாக்கியா சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் உட்பட 16 வகையான பொருட்கள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் சுகாதாரத்துறையின் மூலம், தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 28 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 2108 பெண்களுக்கும், 7 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 91 பெண்களுக்கும், 5 அரசு மருத்துவமனையில் 7214 பெண்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6739 பெண்களுக்கும்,
கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 22 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 1598 பெண்களுக்கும், 2 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 பெண்களுக்கும், 4 அரசு மருத்துவமனையில் 5104 பெண்களுக்கும், என மொத்தம் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற்ற அத்திமரப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த நாகதுரை மனைவி முத்துக்கனி கூறுகையில், "அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தின் மூலம் எங்கள் சுமை எங்களுக்கு குறைந்துள்ளது. இதில் உள்ள அனைத்து பொருட்களும் தரமானதாக உள்ளது" என்றார்.
மேலதட்டப்பாறை யாதவர்தெருவை சேர்ந்த கந்தவடிவேல் மனைவி மாரியம்மாள் கூறுகையில், "இப்பொருட்களை நாங்கள் வெளியே வாங்க வேண்டுமென்றால் அதிகமாக செலவாகும். மகப்பேறு சிகிச்சையும் இலவசமாக அளித்து குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையையும் கவனிப்பதற்கு இலவசமாக பொருட்கள் வழங்கிய அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.
கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுடைய பாதுகாப்புக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து கொடுத்தால் இரவுப் பணிக்கு பெண்களை அனுமதிக்க முடியும். வேலைக்கு தேர்ந்தெடுத்தல், பயிற்சி, இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான வேற்றுமை இருக்கக் கூடாது. பெண் ஊழியர்களுக்கு எதிரான வேறுபாட்டை தடை செய்வதற்காக சில சட்டத்திருத்தங்களை கொண்டு வருவது அவசியமாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
ஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-1ஐ தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 11-னை செயல்படுத்த 201718ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இத்திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.
பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடின தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 201718ஆம் ஆண்டில் விதி எண் 110ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 135 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (சென்னை தவிர) 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக, கசடுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்து 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் 217 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களில் குழாய்கள் பதித்தல் மற்றும் மழையினால் சேதமடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பொருட்டு, நடப்பாண்டில் 1,350 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பேரூராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை மேம்பாட்டுப் பணிகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஆமூர் ஊராட்சிக்குட்பட்டது மருதூர் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு பெய்த மழை காரணமாக இந்த கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராமமே இருளில் மூழ்கியது.
மின்தடை குறித்து மின் வாரியத்திடம் பொது மக்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மின்தடை காரணமாக அந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. குடிநீருக்காக பெண்கள் 2 கி.மீ. தூரம் அலையும் நிலை ஏற்பட்டது. இது குறித்து புகார் கூறியும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்தும், மின்தடையை சரி செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மேலூர்-ஆமூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் இந்த நஷ்ட ஈட்டின் தொகை மாறுபடுகிறது.
எனவே, குறைந்த பட்சம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி மத்திய சட்ட சேவை வாரியம் மத்திய அரசுடன் கலந்து பேசி புதிய நஷ்டஈடு திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதன் மூலம் பாலியல் வன்கொடுமையில் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பலரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நபர்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.
இதன்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், இயற்கைக்கு மாறான பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்படும் நபருக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், பாலியல் குற்றத்தில் கர்ப்பம் அடைந்தால் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும், கற்பழிப்பில் கர்ப்பமானால் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சம் வரையிலும்,
திராவகம் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரையிலும், 50 சதவீதம் காயம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்ட வரையரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்கள் வரையரை செய்யவில்லை.
இது சம்பந்தமாக நீதிபதிகள் மதன்லோகூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கூறும் போது, மைனராக உள்ள சிறுவர்கள் இது போன்ற குற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் அம்சங்களை சேர்க்கும்படி உத்தரவிட்டனர். #Centralgovt