search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workload"

    • அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு.
    • உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது.

    பள்ளி, கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்தால் நம் நண்பர்களுடன் கழித்த இனிய தருணங்களே முதலில் நம் மனதில் சிறகடிக்கும். இந்த இலையுதிர் காலத்துக்கு பிறகான வாழ்வில், பெரும் பகுதியை நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் பணி இடங்களில் தான் உள்ளோம். அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் இருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.

    ஆம்...! அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்சினைகளை எளிதாகப்புரிந்துகொள்வார். பிரச்சினையில் இருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். உயர் அதிகாரியுடன் பிரச்சினை, அலுவலக அரசியல், வேலைப்பளுவால் மனச்சோர்வு, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.' அவர்களின் பங்களிப்பு அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரொம்பவே அவசியம் என்பதை இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்.

    உற்சாகம்

    `ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் ஒரு ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ் நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.

    உதவி

    எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம் மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச்சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு காதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.

     மதிய உணவு

    அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நாம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி நாள் வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!

     குழு

    நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறை குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    • உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
    • தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    உலக நாடுகளை ஒப்பிடுகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் வேலை பார்ப்போர் விகிதம் 39.1 சதவீதமாகவே இருக்கிறது. பொருளாதார நிலையை சமாளிக்க தகுதியான வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு செய்யும் பலரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில் ஏதோ ஒரு வேலை கிடைத்து அங்கு பணிச்சூழல் சரியாக அமையவில்லை என்றால் அங்கே மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும், பணியாளர்களின் செயல்திறனுக்கும் இடையே காணப்படும் இடைவெளிதான் இந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் வேலை, ஊதியம் தாண்டி மன அமைதியுடன் வேலை செய்வதற்கான ஒரு நல்ல சூழ்நிலை எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

    வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் தவிர்க்க முடியாது. ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் போது நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை. குடும்பச்சூழல், வேலைப்பளு, கட்டமைப்பு வசதிகள், அலுவலக சூழ்நிலை, சகபணியாளர்கள் நடந்துகொள்ளும் விதம், மேல் அதிகாரியின் நடவடிக்கை, நேரமின்மை, வேலையில் தெரியாமல் செய்யும் தவறுகள் என அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட பலவித காரணங்கள் உள்ளன.

    இவை எல்லாம் எப்போதாவது ஏற்பட்டால் பெரிதாக கண்டுகொள்ளத்தேவை இல்லை. ஆனால் அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராக திரும்பும் போது உடனடியாக தீர்வுகாண வேண்டியது அவசியம்.

    கண்டிப்பாக எல்லோருக்கும் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் இருக்கிறது. சிலபேர் மட்டும் தான் இதற்கு முக்கியத்துவம் அளித்து மனதிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களுக்கும் உடம்பும், மனதும் மிகவும் பலவீனம் அடைகிறது.

    உங்களுக்கு வேலை கடினமாக உள்ளது, அதை கையாள்வதற்கு மிகவும் சிரமப்படும்போது வேலைபார்க்கும் இடத்திலேயே உதவிசெய்வதற்கு உங்கள் நண்பரையோ அல்லது மேலதிகாரியின் உதவியையோ நாடலாம். ஏனென்றால் அவர்கள் அதை எல்லாம் கடந்துதானே வந்திருப்பார்கள். உங்களுடைய தேவைகளை அவர்களிடம் கேட்டுப்பெறலாம்.

    இங்கு வேலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த வேலை கடினமாக இருக்கிறது என்று எண்ணினால் இதைவிடுத்து வேறு இடத்திற்கு போனாலும் அங்கும் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். எனவே அதனை கையாள தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    முதலில் உங்களது மனநிலை எதுவாக இருந்தாலும் அதனை உங்களால் கையாள முடியுமா? இல்லையா என்று பார்க்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவ ஆலோசகரை அணுகலாம். இப்போது நிறைய தெரப்பிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போது நிறைய அட்வான்ஸ் டெக்னாலஜிகளும் வந்துவிட்டன.

    இதையும் மீறி உங்களுக்கு மன அழுத்தம் இருந்துகொண்டு இருந்தால், அதாவது மருத்துவ ஆலோசகரை அணுகியும் உங்களுக்கு சரியாகவில்லை என்றால் அப்போது அந்த வேலையை மாற்றுவதை பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அந்த வேலைக்கு உங்களை மாற்றிக்கொள்ளலாம்.

    உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்த வகை மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் வேலைப்பளு என்பது அவர்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். மேலும் அவர்களால் வேலையைவிட்டு அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது. அவர்கள் மன அழுத்தம் வேலைகளால் ஏற்படுகிறதா அல்லது வீட்டு சூழ்நிலைகளால் ஏற்படுகிறதா என்பதை பிரித்து பார்க்க வேண்டும்.

    மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மனநல பிரச்சினைகளையும், உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு, உடல்பருமன், எடைகுறைவு என பல உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    மனநல பிரச்சினை உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    வேலைப்பளுவினால் மன அழுத்தம் ஏற்பட்டால் அது உங்களது வேலையை பாதிக்கிறது, உங்களது கவனத்தை வேலைகளில் செலுத்த இயலல்லை. அதற்கு மாறாக உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசகரை சந்திப்பது தான் மிகவும் நல்லது.

    மருத்துவரை பார்ப்பதற்கோ அல்லது கவுன்ஸ்லிங் போவதற்கோ முதலில் அச்சப்படக்கூடாது. நம்மை பற்றி எப்படி பேசுவது, எல்லோருக்கும் தெரிந்துவிடுமோ, நம்மை பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் எல்லா தடைகளையும் உடைத்துவிட்டு துணிந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெற்றாலே உங்களுடைய வாழ்வியல் முறைகள் மாறிவிடும்.

    தற்கொலை எண்ணங்கள் ஏன் ஏற்படுகிறது

    தற்கொலை எண்ணங்கள் ஒரு மனிதன் கோபமாக இருக்கும்போது அல்லது சண்டையிடும் போது இந்த மாதிரி எண்ணங்கள் வருவது என்பது இயற்கை. ஆனாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத போது தான் விபரீதமான எண்ணங்களும், தற்கொலை முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதனால் நிறைய தற்கொலைகளும் நடந்துள்ளன.

    ஒருவருக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் வருவது, தற்கொலை பற்றி அதிகமாக பேசுவது, தனிமையில் இருப்பது ஆகிய அறிகுறிகள் இருப்பவர்களை கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். தற்போது ஹெல்ப்லைன் மூலமாக கூட மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. எனவே மருத்துவமனைக்கு செல்லாமல் இந்த மாதிரி ஹெல்ப்லைன் மூலமாக மருத்துவ ஆலோசகருக்கு போன் செய்தும் கவுன்ஸ்லிங் அளிக்கலாம்.

    மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள்

    பலவருடங்களுக்கு முன்னால் இருந்தே மன அழுத்தத்திற்கு நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதிக மனக்குழப்பம் இருப்பவர்களுக்கு கூட இப்போது நல்ல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது யோகா மற்றும் தியானம். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் உதவுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த சிகிச்சை முறைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் மட்டுமே நல்ல பலனை பெறமுடியும்.

    தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது, மருத்துவ ஆலோசகரின் வழிமுறைகளை பின்பற்றுவது. தொடர் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது என்று செய்தால் மட்டுமே சீக்கிரமாக இத்தகைய நிலையில் இருந்து வெளியே வர முடியும்.





    • தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
    • மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

    மன அழுத்த ஹார்மோன்கள் பெண்களின் உடலை ஆண்களை விட வித்தியாசமாக பாதிக்கிறது. இந்த பகுதியில் அதிக ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், பெண்களில் உள்ள லிம்பிக் அமைப்பு ஆண்களை விட பெண்களில் ஆழமாக உள்ளது. இது ஆண்களை விட உணர்ச்சிகளை ஆழமாக உணர வைக்கிறது. அது அவர்களை நீண்ட நேரம் புண்படுத்தும் மற்றும் வலிமிகுந்த சூழ்நிலைகளை நினைவில் வைத்திருக்கவும், அவற்றை பற்றி சிந்திக்கவும் மற்றும் வலுவான எதிர்வினைகளை உருவாக்கவும் முடியும்.

    பெரும்பாலும், பெண்கள் குடும்ப பொறுப்புகளை கையாள்வதோடு, அதே நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்களை அதிகமாக உணர வைக்கும். மன அழுத்தம் காரணமாக கர்ப்பம் தரிக்க முடியாமல் போவது போன்ற சூழ்நிலைகள் அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலைகள் மன அழுத்தத்தை உருவாக்கி, நீண்ட காலத்திற்கு கார்டிசோலின் அளவை அதிகமாக வைத்திருக்கலாம், இதனால் நீண்ட காலத்திற்கு உடலை சேதப்படுத்தலாம்.

    பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?

    நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு உதவக்கூடிய சில விஷயங்கள்:

    * அவர்களுக்கு காது கொடுத்து, அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்

    * கேட்கும் வரை அறிவுரை வழங்காதீர்கள்

    * அவர்களின் உணர்ச்சிகளை நிராகரிக்காதீர்கள்

    * முடிந்தால் அவர்களுக்கு 'எனக்கு நேரம்' கொடுக்க சில பொறுப்புகளைப் பகிரவும் அல்லது எடுத்துக்கொள்ளவும்.

    * அவர்களின் மன அழுத்தத்தை தூண்டுவதைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள்

    * தொழில்முறை உதவியை நாடும் யோசனையை அறிமுகப்படுத்துங்கள்

    மன அழுத்தத்திற்கான தியானம் எல்லாவற்றிலும் சிறிது நேரம் ஒதுக்கி மன அழுத்தத்தை தவிர்க்கவும். ஒரு பெண்ணாக இருந்தால் மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களை அதில் இருந்து தப்பிக்க வைக்க விரும்பும் விஷயங்கள்:

    * உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் விஷயங்களின் பட்டியலை எழுத முயற்சிக்கவும், அவற்றை குறைக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கவும்.

    * நாளிதழை பராமரித்து, உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்

    * தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

    * சர்க்கரை உணவுகளில் இருந்து விலகி இருங்கள்

    * புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் குறைத்தல்

    * ஒரு பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்

    * தவறாமல் தியானம் செய்யுங்கள்

    * தூக்க சுகாதாரத்தை கடைபிடிக்கவும், போதுமான தூக்கம் (6 முதல் 8 மணிநேரம்) பெறுவதை உறுதிப்படுத்தவும்

    * தினசரி போதுமான சுத்தமான காற்று மற்றும் சூரிய ஒளியை பெறுங்கள்

    சில சமயங்களில், பெண்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகளால் சுமையாக இருக்கலாம். அவர்களை அதிகமாகவும் அழுத்தமாகவும் ஆக்குகிறது. நீங்கள் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான மூல காரணத்தை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பது நல்லது. உங்களால் அதை செய்ய முடியாவிட்டால், தொழில்முறை உதவியை நாடுங்கள்.

    நீங்கள் ஒரு நண்பராகவோ அல்லது உங்கள் வாழ்க்கையில் பெண்களை கவனித்துக் கொள்ளும் ஆணாகவோ இருந்தால், அவர்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் செவிசாய்த்து, தொழில்முறை உதவியை நாட அவர்களுக்கு உதவலாம். சில நேரங்களில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களின் பட்டியலை உருவாக்குவது, அவசரத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிப்பது மற்றும் அவற்றை கையாள்வதற்கான மூளைச்சலவை செய்யும் வழிகள் ஒரு சிறந்த செயலாக இருக்கும்,

    மேலும் விஷயங்கள் குழப்பமாகத் தோன்றும்போது பெண்கள் கட்டுப்பாட்டை உணர உதவும். பெண்கள் பல பணிச்சுமை மற்றும் பல பொறுப்புகளை கையாள்வதில் சிறந்தவர்கள், ஆனால் ஏன், நீங்கள் விரும்புவதை செய்ய தினமும் உங்களுக்காக நேரம் ஒதுக்குவது இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் இதற்கான நேரமும் இருக்க வேண்டும்.

    மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்கள் முழு ஆற்றலையும் செலுத்தலாம். நீங்கள் ஒரு வளர்ச்சி மனப்பான்மையை கடைப்பிடிக்கலாம் மற்றும் வாழ்க்கை வழங்கும் அனைத்து அனுபவங்களுக்கும் உங்களை தயாராக வைத்துக் கொள்ளலாம்.

    • மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.
    • நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    மன அழுத்தம் என்பது உங்களை பதட்டமாகவும், விரக்தியாகவும், பயமாகவும் அல்லது மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும் எந்தவொரு நிகழ்வு அல்லது சூழ்நிலைக்கும் ஒரு உணர்ச்சி அல்லது உடல் ரீதியான எதிர்வினையாக இருக்கலாம். எப்போதாவது ஏற்படும் மன அழுத்தங்கள் உங்கள் செயல்திறனை சாதகமாக பாதிக்கும். அதே வேளையில், நீண்ட கால மன அழுத்தம் உங்கள் உடலில் அழிவை ஏற்படுத்தும்.

    ஆண்களும், பெண்களும் மன அழுத்தத்தை அனுபவித்தாலும், அது இரு பாலினத்திலும் வித்தியாசமாக வெளிப்படுகிறது. மன அழுத்தம் ஆண்களை விட மிகவும் தீவிரமான வழிகளில் பெண்களை பாதிக்கும். எளிமையான வார்த்தைகளில், மன அழுத்தம் ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு வழிகளில் அழிக்கக்கூடும்.

    பெண்களுக்கு மன அழுத்தம் எப்படி தீங்கு விளைவிக்கும்

    பெண்களுக்கு மன அழுத்தத்தின் மிக முக்கியமான விளைவு அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வில் உள்ளது. அவர்கள் மன அழுத்தமில்லாத நாட்களில் இருப்பதை விட இது அவர்களை எரிச்சல், மனநிலை, சோகம் அல்லது அதிக உணர்ச்சிவசப்பட வைக்கும். நீண்ட கால மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறைந்த அழுத்தச் செயல்பாடுகளைக் கூட அவர்கள் அதிகமாகக் காணலாம்.

    சிலர் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு திரும்பலாம், இதையொட்டி, பரவலான சுகாதார நிலைமைகளை உருவாக்கலாம். தலைவலிக்கான பொதுவான தூண்டுதல் எந்த வகையான மன அழுத்தமும் ஆகும். இது தலையில் இறுக்கத்திற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இது தோள்பட்டை வலிக்கு வழிவகுக்கும் மற்றும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டில் தலையிடலாம்.

    ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தமனிகளை சுருக்கி, போதுமான அளவு ரத்தத்தை இதயத்தை அடைவதை கடினமாக்குகிறது.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் பீஸ்ஸாக்கள், சாக்லேட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளை உண்ணலாம், இது அவர்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற பிற பழக்கங்கள் பல்வேறு இதய பிரச்சினைகள் மற்றும் மாரடைப்புகளுக்கு வழிவகுக்கும்.

    கார்டிசோல் உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால் பசியைத் தூண்டுகிறது. இது அவர்களுக்கு சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏங்க வைக்கும், இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மன அழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட உணவு, உணவை தவிர்ப்பது மற்றும் நொறுக்குத் தீனிகளை அடைவது போன்ற ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களையும் ஏற்படுத்தலாம்.

    மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் அதிக கலோரி உணவுகளை உட்கொள்ளாவிட்டாலும், கார்டிசோல் அவர்களின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, இதனால் அவர்கள் வழக்கத்தை விட குறைவான கலோரிகளை எரிக்கிறார்கள்.

    மாதவிடாய் முறைகேடுகளுக்கு மன அழுத்தம் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்று பல மகளிர் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கார்டிசோல் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் தலையிடலாம் மற்றும் வழக்கத்தை விட இலகுவான, கனமான அல்லது அதிக வலியுடன் கூடிய காலங்களுக்கு வழிவகுக்கும். கார்டிசோல் அளவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இது மாதவிடாய்களை சிறிது நேரம் இடைநிறுத்தலாம்.

    மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு, நீண்ட காலத்திற்கு அதிக கார்டிசோல் அளவு மாற்றத்தை கடினமாக்குகிறது, இதனால் சூடான ஃப்ளாஷ்கள், தூக்கம் மற்றும் பிற அசௌகரியங்கள் ஏற்படலாம். கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

    நீண்ட கால மன அழுத்தம் கார்டிசோலை பாலியல் ஹார்மோன்களை அடக்கி, ஒருவருடைய பாலியல் ஆசைகளை பாதிக்கும். அவர்கள் உடலுறவில் ஈடுபட்டாலும், அவர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள் மற்றும் மகிழ்ச்சியை உணர மாட்டார்கள். வழக்கமான நாட்களில் உச்சக்கட்டத்தை அடைவது பெண்களுக்கு கடினமாக இருந்தாலும், மன அழுத்தத்தால் அதை மேலும் கடினமாக்கலாம்.

    மன அழுத்தம் அமில ரிஃப்ளக்ஸ், குமட்டல், வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் மிக அதிகமாக இருந்தால், அது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கும் வழிவகுக்கும். சிலருக்கு, மன அழுத்தம் அவர்களின் பசியை கொன்று, எடையை குறைக்கும். மன அழுத்தத்தின் போது ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது குடல் நுண்ணுயிரியை தொந்தரவு செய்யலாம்,

    மேலும் மனநிலை மற்றும் ஆற்றல் நிலைகளை பாதிக்கும். மன அழுத்தம் பெண்களுக்கு இருக்கும் தோல் நிலைகளை மோசமாக்கும். இது முகப்பரு வெடிப்பு, கடுமையான அரிப்பு, சொறி மற்றும் படை நோய்க்கு வழிவகுக்கும். பெண்கள் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்தால் கடுமையான முடி உதிர்வையும் சந்திக்கின்றனர்.

    அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிக்கும் பெண்கள் தூங்குவது கடினம். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும், இதையொட்டி, உடல் பருமன், சிறுநீரகப் பிரச்சனைகள், சர்க்கரை நோய், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவற்றை உண்டாக்கும். தூக்கமின்மை உள்ள பெண், மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அன்றாட பணிகளை செய்வதில் சிரமப்படுவார்.

    மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அதிக அளவு ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது மற்றும் ஒருவரை தொற்று மற்றும் நோய்களுக்கு ஆளாக்குகிறது. எனவே, மன அழுத்தத்தை அனுபவிக்கும் ஒரு பெண் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.

    • பணிச்சுமையால் மன அழுத்தத்தில் உள்ள போலீசாருக்கு மாதம் ஒருமுறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
    • இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    போலீசார் பல காவல் நிலையங்களில் விடுமுறையின்றி இரவு, பகலாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இந்த பணி சுமை அவர்களுக்கு மன அழுத்ததை தருகிறது. இதனால் போலீசாருக்கு மன அழுத்த நோய், சர்க்கரை நோய், காலில் நரம்பு சுருள் நோய் (வெரி கோஸ்)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவிழா காலங்கள், அரசு மற்றும் அரசியல் விழாக்களில் போலீசார் நீண்ட நேரம் பணியமர்த்தப்படுவதால் அவர்கள் இந்த வகை நோய்களால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடும்பங்களை சரிவர கவனிக்க முடியா மலும், உடல் நிலையில் கவனம் செலுத்த முடியா மலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை விடுமுறையானது சில இடங்களில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் போலீசார் வருத்தம் தெரிவித்தனர்.

    அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தும் முதல்-அமைச்சர் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி மாதந் தோறும் காவல் நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் மாதம் ஒரு முறையாவது பணியில் இருக்கும் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று காவலர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    அதிக வேலைப்பளு அளித்ததால் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என ஜப்பான் புத்த பிட்சு ஒருவர் கோவில் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
    டோக்கியோ:

    ஜப்பானில் மவுன்ட் கோயாவில் ‘கோயகன்’ என்ற புத்தர் கோவில் உள்ளது. இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இங்கு பணிபுரியும் 40 வயது மதிக்கதக்க பிட்சு ஒருவர் தான் பணிபுரியும் இக்கோவில் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், "நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். இந்தநிலையில் 2015-ம் ஆண்டுவரை ஓய்வில்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து இருக்கிறேன்.

    2015-ம் ஆண்டில் கோவில் நிர்வாகம் 1200-வது ஆண்டு விழாவை நடத்தியது. அப்போது 64 நாட்கள் ஓய்வின்றி தொடர்ந்து வேலை வாங்கினார்கள். எனவே எனக்கு கோவில் நிர்வாகம் ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    இத்தகவலை புத்த பிட்சுவின் வக்கீல் நொரிடேக் ஷிராகுரா தெரிவித்தார். வழக்கு தொடர்ந்த புத்த பிட்சுவின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். #Tamilnews
    ×