என் மலர்
நீங்கள் தேடியது "Yagasala"
- மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள், யாகசாலை நடைபெற்றன.
- மேள, தாளங்கள் முழங்க ராஜமுனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே உள்ள ஓடைமதகு ஸ்ரீராஜமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான அஷ்டபந்தன மருந்து திருநெறி தமிழ்மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீராஜ முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.
- வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த குளிச்சார் கிராம குள த்தங்கரையில் உள்ள ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ தேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை குளிச்சார்செல்வம் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
- 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது.
- அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 8 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 24-ந்தேதி காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 25-ந்தேதி தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான பாலாலய விழா இன்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர்கிருஷ்ண குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதா ரர்கள் செய்திருந்தனர்.
- முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
- ஜபம், ஹோமம் நடைபெற்று, பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.
திருநிலை நாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.
இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சித ருகிறார்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து 8கால யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது.
சுவாமி, அம்பாள்,தோணியப்பர்,சட்டைநாதர்,முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்க ப்பெற்று,120 வேதவி ற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் தொடங்கியது.முன்னதாக கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது.
பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. ஜபம், ஹோமம் செய்து பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாரா தனை நடந்தது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர்தம்பிரான் சுவாமிகள், தமிழ் சங்கத்த லைவர் இ.மார்கோனி, காசாளர் செந்தில், மகாலெட்சுமி அம்மாள், உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
- வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருநாகேஸ்வரம்:
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். வருகிற 29-ந் தேதி வெங்கடாசலபதி கோவில், வடக்கு வீதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள், 34 ஹோம குண்டங்கள் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 வேத விற்பன்னர்கள் வருகை தந்து நான்கு வேதங்களும் படித்தனர்.
பின்னர், இரவு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முதல்கால யாகசாலை பூஜையில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், அரசு குரூப்ஸ் தலைவர் திருநாவுக்கரசு, இ.பி. சில்க்ஸ் இ.பி. சேதுராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வீரகுமார், அபிராமி கார்த்திகேயன், பாலச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது, பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கடந்த 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
- 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
அதன்படி கடந்த வரும் 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்படு, 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.
இதற்காக கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள பால் குளத்தில் இருந்து புனித நீர் யானை மீது எடுத்து வந்து யாாகசாலையில் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை பூர்ண பகுதி பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து நாளை (புதன்கிழமை 05.07.2023) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட உள்ளது நடக்கிறது.
குடமுழுக்கு விழாவையொட்டி 400- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட உள்ளனர்.
- கடந்த 11-ந் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
- விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கல்லூர் கிராமத்தில் கிபி 9ஆம் நூற்றாண்டில், சோழர் சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்து கும்பகோணத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமமாகும்.
பண்டைய காலங்களில் சிவலோகபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் தெற்கு புறத்தில் புண்ணிய நிதியான காவிரி நதியும், வடக்கு புறத்தில் கொள்ளிடமும் அமைய பெற்றுள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றிலும் பிரசித்திமான இந்தக் கல்லூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவலோகநாயகி, சமேத ஶ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீ இரட்டை பிள்ளையார், ஆகிய 3 கோவில்களில் பல மாதங்களாக நடைபெற்று
வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து.
ஸ்ரீ சிவலோகநாதருக்கு நவகுண்ட பக்ஷமும், ஸ்ரீ சிவலோக நாயகிக்கு பஞ்சகுண்ட பக்ஷமும், பரிவார மூர்த்திகளுக்கு 13 ஏககுண்ட பக்ஷமும், வேத சிவ ஆகம முறைப்படி யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 11ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த ஓரே சமயத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,
இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தேவர், கல்லூர் ராமர், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- முதற்கால யாகசால பூஜையுடன் தொடங்கி பூர்ணாஹூதி நடைபெற்றது.
- பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பெருங் கடம்பனூரில் காத்தவராயன் சாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபி ஷேக விழா கடந்த 19-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, பாலினக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதற்கால யாகசால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 2-ம் கால யாகசால பூஜைகள் முடிவடைந்தவுடன், மகா பூர்ணாஹூதி நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின், சிவாச்சாரியர்கள் கடத்தை சுமந்து கோவிலை சுற்றி வந்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், புனிதநீர் பக்த்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுந்தர விநாயகர், காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட பக்தர்களுக்கு நாகப்பட்டினம் தமிழ் சேவா சங்கம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- கடந்த 18-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
- கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் பாலாம்பிகா சமேத ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் 2-வது தளமான கோவிலில் பஞ்சபாண்டவர்கள் சுவாமியை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.
மாணிக்க வாசகரால் போற்றி பாடல் பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 18 ஆம் தேதி யாக கால பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன.
நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமானங்களை அடைந்தன.
இதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அபிஷேக ஆராத னைகள் நடை பெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பா பிஷேகத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர்.
முன்னதாக சித்தி விநாயகர் கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர் கிராம மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கோவில் அருகில் குண்டங்கள் அமைக்கப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
- விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மெலட்டூர்:
பாபநாசம் அடுத்த மெலட்டூர் அடிச்சேரி தெருவில் மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோ விலில் கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பரம்பரை அறங்காவலர் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் உதவியால் திருப்பணிகள் நடைபெற்றது.
பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக கோவில் அருகில் குண்டங்கள் அமைக்க ப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து மூலவர் மாணிக்க விநாயகர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின், விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலசுப்ர மணியன் குடும்பத்தினர் மற்றும் அடிச்சேரி தெரு கிராமமக்கள் செய்திருந்தனர்.
- குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
- இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார த்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிந்து விட்டதால் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை ) குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதையொட்டி குடமுழுக்கு விழா கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து நேற்று இரவு முதல்கால யாகாசாலை பூஜை தொடங்கியது.
இன்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், நாளை காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.15 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு மகா அபிசேஷகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
- 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்றது.
- 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த நரிமணத்தில் உள்ள பூர்ணபுஷ்கலா அழகிய ஐயனார், சந்திரமதி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 1-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, தன பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை மஹாலட்சுமி ஹோமம், தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து, 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்று, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 3-ந் தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜையும், 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சந்திரமதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.