search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zoology"

    • மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
    • தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

     

    விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.

    மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    • கல்லூரியின் புவியியல் துறை சார்பில் நீர் தாங்கிகள், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மைக்கான சமூக பங்கேற்பு என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரியின் புவியியல், இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளைச் சேர்ந்த 100 மாணவ- மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சி யார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் கல்லூரியின் புவியியல் துறை சார்பில் நீர் தாங்கிகள், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மைக்கான சமூகப் பங்கேற்பு என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் முனைவர் சிந்தியா செல்வி தலைமை ஏற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    கருத்தரங்கில்மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞா னிகள் ரவிச்சந்திரன், மினிசந்திரன், சிவராம கிருஷ்ணன், பரமசிவம் ஆகியோர் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்தும் தமிழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவட்டம் வாரியாக நிலத்தடி நீர் தன்மை குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். இதில் கல்லூரியின் புவியியல், இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளைச் சேர்ந்த 100 மாணவ- மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக புவியியல் துறைத் தலைவர் முனைவர் பானுகுமார் வரவேற்றார். கருத்தரங்கு நிகழ்வுகளை உதவி பேராசிரியர் செந்தில் வேலன் தொகுத்து வழங்கினார்.

    கல்லூரி கண்காணி ப்பாளர் பாலசு ப்பிரமணியன், விலங்கியல் துறை பேராசிரியர் சரபோஜி, மேலும் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முனைவர் ஸ்ரீகலா நன்றி கூறினார்.

    ×