search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத்தடி நீர் மேலாண்மை கருத்தரங்கு
    X

    நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடந்தது.

    நிலத்தடி நீர் மேலாண்மை கருத்தரங்கு

    • கல்லூரியின் புவியியல் துறை சார்பில் நீர் தாங்கிகள், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மைக்கான சமூக பங்கேற்பு என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரியின் புவியியல், இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளைச் சேர்ந்த 100 மாணவ- மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சி யார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் கல்லூரியின் புவியியல் துறை சார்பில் நீர் தாங்கிகள், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மைக்கான சமூகப் பங்கேற்பு என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் முனைவர் சிந்தியா செல்வி தலைமை ஏற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    கருத்தரங்கில்மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞா னிகள் ரவிச்சந்திரன், மினிசந்திரன், சிவராம கிருஷ்ணன், பரமசிவம் ஆகியோர் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்தும் தமிழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவட்டம் வாரியாக நிலத்தடி நீர் தன்மை குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். இதில் கல்லூரியின் புவியியல், இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் துறைகளைச் சேர்ந்த 100 மாணவ- மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக புவியியல் துறைத் தலைவர் முனைவர் பானுகுமார் வரவேற்றார். கருத்தரங்கு நிகழ்வுகளை உதவி பேராசிரியர் செந்தில் வேலன் தொகுத்து வழங்கினார்.

    கல்லூரி கண்காணி ப்பாளர் பாலசு ப்பிரமணியன், விலங்கியல் துறை பேராசிரியர் சரபோஜி, மேலும் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முனைவர் ஸ்ரீகலா நன்றி கூறினார்.

    Next Story
    ×