search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பைக்கு நடுவே உயிரியல் பூங்கா: விசித்திரமானது என கண்டனம்
    X

    மும்பைக்கு நடுவே உயிரியல் பூங்கா: விசித்திரமானது என கண்டனம்

    • சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • ஒரு மிருகக்காட்சிசாலைக்கு 6.5 ஏக்கர் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    மும்பையில் தோட்டம் மற்றும் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 6.5 ஏக்கர் நிலத்தை மிருகக்காட்சி சாலையாக மாற்ற பிரகான்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.

    BMC இன் தலைமைப் பொறியாளர் (வளர்ச்சித் திட்டம்) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மும்பை மேம்பாட்டுத் திட்டம் (DP) 2034 மற்றும் மேம்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் ஊக்குவிப்பு ஒழுங்குமுறை 2024-இன் கீழ் செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

    இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நகரின் நடுவில் ஒரு மிருகக்காட்சிசாலையை கற்பனை செய்வது கடினம் மற்றும் விசித்திரமானது என்றும், ஒரு மிருகக்காட்சிசாலைக்கு 6.5 ஏக்கர் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும், இது தொடர்பாக பொதுமக்கள் அடுத்த 30 நாட்களில் தங்கள் ஆலோசனைகளையும் ஆட்சேபனைகளையும் சமர்ப்பிக்கலாம் என்று பிரகான்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×