search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோஷியல் மீடியா"

    • டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
    • டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

    தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.

    கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.

    இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.

    செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

    வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

    வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.

    ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.

    மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

    • எக்ஸ் தளத்தில் மோடியை பின்தொடர்பவர்களின் புதிய எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை.
    • எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் அனைத்து துறைகளிலும் புகுந்து விட்டது.

    வெறும் பொழுது போக்கு தளமாக மட்டு மல்லாமல் சமூக வலைதளங்களை அரசியல் கட்சியினர் தங்களது பிரசார கருவியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

    பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் பிரசாரம் மற்றும் கட்சி நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    கட்சி தலைவர்களின் வலைதள பக்கங்களை தொண்டர்கள் மட்டு மல்லாது இளைஞர்கள் உள்பட பலதரப்பட்டவர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    அந்த வகையில் சமீப காலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது புள்ளி விபரங்களின் படி தெரியவந்துள்ளது.

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் பிரசாரம், அதற்கு முன்பாக அவர் நாடு முழுவதும் நடத்திய நடைபயணம் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டன.

    அவற்றை பல லட்சக்கணக்கானோர் லைக் செய்த நிலையில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப் ஆகியவற்றில் ராகுல் காந்தியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான கால கட்டத்தில் கணிசமாக அதிகரித்து உள்ளது.

    அதே நேரத்தில் இந்த தளங்களில் இதே கால கட்டத்தில் மோடியை பின் தொடர்பவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஓரளவு குறைந்திருப்பதும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.

    அதாவது இந்த கால கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 30 சதவீதம் அதிகரித்தது. அதே நேரத்தில் சமூக வலை தளங்களில் மோடியை புதிதாக பின் தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம் மாதத்திற்கு சராசரியாக 5 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆட்டம் கிரே என்ற டிஜிட்டல் நிறுவன தரவுகளில் தெரியவந்துள்ளது.

    எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் மாதத்திற்கு சராசரியாக 61 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.

    அதே நேரம் எக்ஸ் தளத்தில் மோடியை பின்தொடர்பவர்களின் புதிய எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை. மேலும் யூடியூப்பிலும் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அதே நேரம் மோடியை பின் தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 3 சதவீதம் குறைந்து உள்ளது. ஒட்டு மொத்தத்தில் சமூக வலைதளங்களில் மோடியை பின்பற்று பவர்களின் எண்ணிக்கையை விட ராகுல் காந்தியை பின் தொடர்பவர்களின் ஒவ்வொரு வலைதளத்திலும் மிகவும் அதிகமாக உயர்ந்தது.

    அதே நேரம் கட்சி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களை விட பாஜகவின் பக்கங்களை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எக்ஸ் தளத்தில் பாஜகவை 2.2 கோடி பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு 1.6 கோடியாக உள்ளது.

    அதன்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியை விட எக்ஸ் தளத்தில் பாஜகவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து வருகிறது.

    ×