search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானம்"

    • 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.
    • தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய தானம்.

    மதுரை மாவட்டம் மேலூர அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடு மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.

    தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களது நிலத்தை தானமாக வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நிலத்தை வழங்கிய தம்பதிக்கு கிராம மக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

    • தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள்.
    • நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.

    தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள். இந்த நாளில் தானம் செய்வது மற்ற நாட்களை விட பல மடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.

    இந்த நாளில் முன்னோரை நினைத்து உணவுப் பொட்டலம் தானம் செய்தால், நம் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறும். தனம், தானியம் பெருகும். கடன் பிரச்சனையில் இருந்து மீளலாம்.


    வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், நம் ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயெல்லாம் தீரும். வாழையடி வாழையென நம் சந்ததி செழித்தோங்கும்.

    தேன் வழங்கி நமஸ்கரித்து பிரார்த்தனைகள் செய்தாலும் மிகப்பெரிய புண்ணியம். சந்தான பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

    தீபம் மற்றும் விளக்கு தானமாக வழங்கினால், நம்மிடம் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்ணில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அரிசியை தானமாகத் தந்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும். எவருக்கேனும் நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    பால் தானமாக வழங்கினால், துக்கமெல்லாம் தீரும். நம் மனதில் இதுவரை இருந்த மனக்குழப்பமும் வருத்தமும் மறையும்.

    தயிர் தானமாகக் கொடுத்தால், இந்திரிய முதலான சுகங்களைப் பெறலாம். இல்லத்தில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் நீடிக்கும்.

    பழங்கள் தானமாக வழங்கினால் புத்தியில் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் அகலும்.


    தங்கம் தானமாக வழங்கினால் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களிடமும் உள்ள தோஷங்களும் திருஷ்டிகளும் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

    வெள்ளி தானமாகக் கொடுத்தால், மனதில் நீண்டகாலத் துயரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ஞானமும் யோகமும் கிடைப்பது உறுதி.

    தேங்காய் தானமாக வழங்கினால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

    • மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது.
    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

    மதுரை:

    தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு தனி பிரிவு, மகப்பேறு சிகிச்சைக்கு தனி பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மதுரை மட்டுமின்றி மதுரையை சுற்றி உள்ள பக்கத்து மாவட்ட மக்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவர்களின் விவரம், உடல்கள் தானம் பெற்றது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    "பொதுவாக சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 13 நபர்களிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இந்த உடல் உறுப்புகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    இதுபோல், மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது. அதன்படி, கடந்த 1½ ஆண்டில் மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு 65 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதற்கான முயற்சிகளை மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இருப்பிட மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டு, உடல் தானம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதன் விளைவாக உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தாங்களாக முன்வந்து உடலை தானமாக வழங்குவது என கிட்டத்தட்ட 65 உடல்கள் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன. தானமாக பெறப்பட்ட உடல்களில், மதுரை மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுக்கு 20 உடல்கள் போதுமானது. மீதமுள்ள உடல்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மருத்துவகல்லூரிகளுக்கும், அரசு விதிமுறைகளை பின்பற்றி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. உடல்களை தானமாக வழங்கும் நபர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் உறவினர்களுக்கு பாராட்டு சான்றிதழும், போலீஸ் நிலையங்கள் மூலம் ஒப்படைக்கப்படும் உடல்களுக்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இதுபோல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அதிநவீன சிறப்பு சிகிச்சைகளின் மூலம், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
    • ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.

    மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.

    அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.

    ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.

    எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

    காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

    காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

    குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

    தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.

    நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்

    தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.

    கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி

    பால் தானம் – சவுபாக்கியம்

    பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி

    தயிர் சாதம் / பால் சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.

    தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.

    வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.

    சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்

    பூமி தானம் – இகபரசுகங்கள்


    வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி

    கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

    திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்

    குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி

    சந்தனக்கட்டை தானம் – புகழ்

    விதை தானம் – வம்ச விருத்தியை தரும்

    மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.

    பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.

    தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

    தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

    தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

    அத்தகைய தானங்கள் பல வகைப்படும். கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

    அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.

    கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.

    பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.

    ஆலயத்துக்கு யானை தானம் – இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.

    குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –வாயுலோகத்தில் வாழ்வார்.

    தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    பயன் கருதாது தானம் – மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

    பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

    தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் – நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.

    சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.

    தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.

    நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

    தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

    தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.

    • புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும்.
    • இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும்.

    புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும்.

    இந்த காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

    தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும் தட்சிணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும்.

    தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

    அதேபோல், வாய்ப்பு இருப்பவர்கள், கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார்.
    • இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.

    விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார்.

    புதிய தொழில் தொடங்குவதற்கும் வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள். பரசுராமர் அவதரித்த தினம்.

    பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார். அன்னபூரணி தேவி பிறந்த நாளும் இதுவே. என இந்த நாளுக்கும் அட்சய என்கின்ற பதத்திற்கும் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்கிர பட்சத்தில் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர் பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர்.

    இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு வாழ்வில் நன்மை பயக்கும் மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவே தான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர் குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் நன்னாளில் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்ஷய்ய திருதீயா புண்ய காலே
    • பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...

    அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் (பித்ரு ப்ரீத்யர்த்தம்) தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..

    ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய) பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
    • பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.

    மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.

    ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.

    அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.

    அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

    இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.

    தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.

    தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர். 

    தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.

    'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.

    முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது. 

    இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    - 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • தாலிப் பொட்டு, மூக்குத்தி போன்றவைகளை தற்காலத்தில் தங்கத்தில் வாங்கி போடுவது என்பது சிரமம்.
    • தாலி பொட்டு, மெட்டி போன்றவைகளுக்கு சுமாரான தட்சணையை முறத்தில் போட்டு கொடுக்கலாம்.

    பெண்களுக்கு முறத்தில் தாலிப்பொட்டு, மூக்குத்தி மற்றும் பொருட்களை முறத்தில் போட்டு கொடுப்பதற்கு முறவாயண தானம் என்று பெயர்.

    மொத்தம் 12 பவுர்ணமிகள் கொடுக்க வேண்டும்.

    கௌரீ முறத்திற்கு போடக்கூடிய சாமான்களை தவிர மூக்கு பொட்டு, தாலிப்பொட்டு, மெட்டி, சவுரி எல்லாம் போட்டு புடவை, ரவிக்கை கொடுத்து முறவாயணம் கொடுக்க வேண்டும்.

    தாலிப் பொட்டு, மூக்குத்தி போன்றவைகளை தற்காலத்தில் தங்கத்தில் வாங்கி போடுவது என்பது சிரமம்.

    ஆகையால் புடவை, ரவிக்கை கொடுத்து முறத்திற்குப் போடும் வழக்கமான சாமான்களை போட்டு மூக்குத்தி,

    தாலி பொட்டு, மெட்டி போன்றவைகளுக்கு சுமாரான தட்சணையை முறத்தில் போட்டு கொடுக்கலாம்.

    • நிர்மலமான மனதினால் நாம் பக்தி செய்தால் முக்தி பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.
    • நமது பெரியவர் காட்டிய நல்வழியில் செல்வது என்பது நமக்கு நல்லதை கொடுக்கும்.

    ஆடி மாத பவுர்ணமியில் இருந்து ஜேஷ்ட மாத பவுர்ணமி வரை கொடுக்க வேண்டும்.

    வெற்றிலை, பாக்கில் தட்சணை, துளசி தானம் வைத்து அபிஷேகம் செய்வதற்கு உபயோகிக்கும் சங்கு வைத்து கொடுப்பது நல்லது.

    மகாலட்சிமியின் ஸாந்நித்யம் நிறைந்த சங்கு தானமாக கொடுப்பதினால் நமக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும் மற்றும் வெற்றி முழக்கம் செய்வது சங்கு என்பதால் அதனால் நமக்கு காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த தானமும் சாதுர் மாத துவாதசிகளில் ஆரம்பித்து 24 துவாதசியும் அல்லது சாதுர்மாத துவாதசிகளில் மட்டும் கொடுக்கலாம்.

    பூஜைக்கு உபபோகப் படுத்தும் எந்த பொருளை தானம் கொடுத்தாலும், அதன் பலன் நமக்கு எப்பிறவிகளிலும் கிடைக்கும்.

    பூஜை செய்யும் பாக்கியமும், அதற்கு தேவையான பகுதி, பொருள் வசதி, ஆரோக்கியம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நிர்மலமான மனதினால் நாம் பக்தி செய்தால் முக்தி பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.

    இந்த முக்கியமான கருத்தை மனதில் கொண்டு தான், நம் பெரியவர்கள் தானங்களும், தருமங்களும், நமக்கு உண்டான நியமங்களும், விரத ஆசரணைகளும், பூஜைகளும் தவறாமல் செய்து வந்தார்கள்.

    நமது பெரியவர் காட்டிய நல்வழியில் செல்வது என்பது நமக்கு நல்லதை கொடுக்கும்.

    ஆகையால் கூடுமானவவை நம்மால் முடிந்த அளவுக்கு தான தருமங்கள், நியதிகள், விரத ஆசரணைகள், பூஜைகள் முதலியவற்றை செய்வது நல்லது. 

    விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.

    ஆடி மாதம் சுக்ல பவுர்ணமியிலிருந்து இன்னொரு ஆடி பவுர்ணமி வரை சாதுர் மாத துவாதசிகளில் தேனும் நெய்யும் கொடுப்பது மிகவும் சிறப்பான தானமாகும்.

    தானம் கொடுக்கும் முறை ஒன்று தான்.

    துவாதசிகளில் கொடுப்பதை பவுர்ணமி அன்று கொடுப்பது.

    மொத்தம் 12 பவுர்ணமி நாட்களில் இந்த தானத்தை கொடுத்து முடிக்கலாம்.

    விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.

    • தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.
    • ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.

    கண்ணாடி தானம்

    பவுர்ணமி தினம் மிக, மிக சக்திவாய்ந்தது என்பதால் தான் அன்று விரதம் இருக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யவும் பெரும்பாலானவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்ககள்.

    ஆனால் பவுர்ணமியன்று பூஜை, வழிபாடுகளுடன் தானம் செய்தால் தான் 100 சதவீத புண்ணியம் கிடைக்கும்.

    தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.

    அந்த வகையில் பவுர்ணமி நாட்களில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.

    ஏதோ ஒரு பவுர்ணமிக்கு மட்டும் கொடுத்தால் போதாது.

    ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.

    ஆடி அல்லது மாசி மாதம் கண்ணாடி தானம் கொடுப்பதை தொடங்கலாம்.

    இந்த தானத்தை வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை, துளசி தனம் வைத்து தானம் கொடுக்க வேண்டும்.

    இந்த தானம் கொடுப்பதின் நோக்கம், கண்ணாடியில் நமது முகம் தெரியும்.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

    கண்ணாடியில் தெரியும் நமது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நமது அகத்தை அதாவது மனதை அழகாக வைத்து கொள்ள வேண்டும்.

    இப்படியாக அகத்தின் அழகை முகத்தில் காட்டும் கண்ணாடியை தானம் கொடுப்பவர்களும், தானம் வாங்குபவர்களும், மனதை நிர்மலமாகவும், அதாவது தூய்மையாகவும், அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி கொடுத்து வருகிறார்கள்.

    ×