search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடாளுமன்ற விவகாரத்துறை"

    • தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
    • புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட நிலையில் இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.

    நரேந்திர மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர்.

    இவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதைதொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

    கூட்டத்தில், புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட நிலையில் இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், இணையமைச்சர் எல்.முருகனுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், எல்.முருகனுக்கு கூடுதல் பொறுப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    ×