என் மலர்
நீங்கள் தேடியது "மாட்டுவண்டி"
- சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி இந்த பந்தயம் நடந்தது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பெரியமாடு, கரிச்சான் மாடு ஆகிய 2 வகையான காளைகள் போட்டியில் பங்கேற்றன. பந்தய காளைகளுக்கு ஏற்ப தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.
ராமநாதபுரம் மன்னர் பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தார். காளைகள் அ.காளாப்பூர்- திருப்பத்தூர் சாலையில் சீறிப்பாய்ந்து இலக்கை எட்டின. வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையா ளர்களுக்கு முறையே ரூ.33 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.27 ஆயிரத்து 777, 3-ம் பரிசாக ரூ.21 ஆயிரத்து 111, 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரத்து 666 வழங்கப்பட்டது.
கரிச்சான் மாட்டில் 44 ஜோடி மாடுகள் பங்கேற்றதால். 2 போட்டிகளாக பிரித்து நடத்த ப்பட்டது. அதில் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.23 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.19 ஆயிரத்து 999, 3-ம் பரிசாக ரூ.16 ஆயிரத்து 666, 4-ம் பரிசாக ரூ.5 ஆயிரத்து 555 வழங்கப்பட்டது.
- கூத்தங்குடியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கூத்தங்குடி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ லண்டன் முனீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 53 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 44 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கூத்தங்குடி கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
மாட்டு வண்டி பந்தயம் நடு மாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக நடந்தது.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.நடு மாட்டு பிரிவில் சசிகுமாரும், பூஞ்சிட்டு, பெரியமாடு பிரிவில் நல்லாங்குடி முத்தையாவும், கரிச்சான் பிரிவில் பாப்பன்கோட்டை பாக்கியம் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்தி ருந்தனர்.
போட்டியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 22 ஆம் ஆண்டு குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம் இன்று காலை நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் கும்பகோணம் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த13 மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி, குதிரை வண்டிகளுக்கு போக வர 8 மைல் தூரமும் சென்று வந்தன.
பெரியமாடு பிரிவில் முதலாவதாக வெளிமுத்தி வாகினி, 2-வதுவெட்டிவயல் சுந்தரேசன், 3-வது பீர்க்கலைக்காடு, வாளரமாணிக்கம் மாடுகள் பரிசு பெற்றன. சின்னமாடு பிரிவில் முதலாவது ஆலத்துபட்டி, 2-வது கண்டதேவி மருதுபிரதர்ஸ், வெளிமுத்தி வாகினி, 3-வது கோட்டையூர் மாட்டுவண்டிகள் பரிசு பெற்றன. குதிரை வண்டி பந்தயத்தில் முதலாவது உஞ்சனை புதுவயல், 2-வது கார்குடி தேவர்மகன் குனா, 3-வது ஆறாவயல் காளிதாஸ் குதிரை வண்டிகள் வெற்றி பெற்றது.ஆறாவயல் காரைக்குடி சாலையில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையாக நின்று கண்டு களித்தனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
- விருதுநகர் அருகே மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலியானார்.
- இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பொன்ராஜ்(வயது 30 )இவர் மாட்டு வண்டி ஓட்டி வந்தார். நேற்று அவர் கும்பமலை அடிவாரத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அவர் தலையில் மாட்டுவண்டி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வனப்பேச்சி அம்மன் கோவில் வருடா பிஷேகத்தை முன்னிட்டு பூஞ்சிட்டு, சின்ன மாடு, நடுமாடு ஆகிய 3 பிரிவு களாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மறவர் கரிசல்குளம் வில்வ லிங்கத்தின் மாடும், 2-வது பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடும், 3-வது பரிசை ஆப்பனூர் அனுஸ்ரீ, மேலக்கிடாரம் ஜெனிதாவின் மாடும் பெற்றன.
நடுமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடும், 2-வது பரிசை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மாடும், 3-வது பரிசை பூலாங்கால் காதர்பாட்ஷா மாடும் பெற்றன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்தரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை மறவர் கரிசல்குளம் கருப்புத் துறை மாடும், 3-வது பரிசை பூலாங்கால் சிவஞானபு ரம் மந்திரமூர்த்தி மாடும் பெற்றன.
இந்த பந்தயத்தில் சின்ன மாடு போட்டியில் சக்கரம் இல்லாமல் 2 கிலோமீட்டர் தூரம் வண்டியை ஓட்டி வந்து முதல் பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
- குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.
தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு தங்களது குல தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வார்கள். இதற்காக 15 நாட்களை செலவிட்டு கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் புறப்பட்டு செல்வார்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.
இவர்களின் குலதெய்வ கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வரை ஒன்றாக செல்வார்கள். அதன் பின்னர் அங்கிருந்து 3 பிரிவாக பிரிந்து புதுப்பட்டி கூடமுடை அய்யனார் கோவில், கீழராஜகுலராமனின் உள்ள எர்ச்சீஸ்வரர் பொன் இருளப்பசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தைலாபுரம் மல்லி வீரகாளியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்வார்கள்.
முதலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்த 56 கிராம மக்கள் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறும் குலதெய்வ வழிபாட்டுக்காக கடந்த 17-ந்தேதி 215 மாட்டு வண்டிகளில் 56 கிராம மக்கள் புறப்பட்டனர். அவர்கள் அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் அணிவகுத்து சென்றனர்.
தற்போதைய கால கட்டத்தில் போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மாட்டு வண்டியில் செல்வது பழைய கால வழக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த 56 கிராம மக்கள் காலங்கள் கடந்தாலும் தங்களது பாரம்பரியத்தை மீறக்கூடாது என்ற நோக்கத்தில் மாட்டு வண்டிகளில் செல்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக ஒரு மாட்டு வண்டிக்கு 15 நாட்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை வாடகை கொடுத்து தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.
சொந்த மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் தங்களது மாட்டு வண்டிகளில் வந்து விடுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மாட்டு வண்டிகளை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு சமைக்க தேவையான பொருட்களையும் மாட்டு வண்டிகளில் எடுத்து செல்கின்றனர்.
குலதெய்வ கோவிலை அடைந்ததும் அங்கு தங்கி இருந்து வழிபாடுகளை செய்கின்றனர். இதன் மூலம் 56 கிராம மக்களும் ஒருவரை யொருவர் அறிந்து கொண்டு குடும்ப சம்பந்தமான உறவுகளை மேம்படுத்தி கொள்கின்றனர். நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனை நாகரீகமாகவும் கருதுகின்றனர்.
தனித்தனி தீவுகளாக மாறிபோன மனிதர்களுக்கு மத்தியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் 56 கிராம மக்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு ஒன்றாக செல்வது வேறு எங்கும் காண முடியாத காட்சியாக உள்ளது. மாட்டு வண்டிகளில் செல்லும்போது இயற்கையை ரசித்து செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இது சிறுவர், சிறுமிகள் மனதை மிகவும் கவருகிறது.
இந்த மாட்டுவண்டி பயணம் 15 நாட்கள் தொடர்கிறது. சில நாட்கள் மட்டும் குல தெய்வ கோவில்களில் தங்கி இளைப்பாறுகின்றனர். அங்கு ஒன்றாக சமைத்து சாப்பிட்டு உறவினர்களுடன் உரையாடி மகிழ்கின்றனர்.
இந்த பயணத்தில் சிறுவர், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்கின்றனர். குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
100 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் கடந்து சென்று 7 நாட்கள் தங்கி இருந்து 3 கோவில்களிலும் வழிபாடுகள் நடத்தி விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் சொந்த கிராமங்களை சென்றடைவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளோம். மாட்டு வண்டி சொந்தமாக இல்லாதவர்களும் ரூ.35 ஆயிரம் வாடகை செலுத்தி மாட்டுவண்டி பூட்டி செல்கின்றோம்.
மாட்டு வண்டி இல்லாதவர்கள் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மாட்டுவண்டிகளை ஏற்பாடு செய்து குல தெய்வ கோவில்களுக்கு செல்கிறோம்.
மாட்டு வண்டிகளில் சென்று வழிபட்டால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி கிடக்கிறது. பல ஆண்டுகளாக சென்று வந்தபோதிலும் எங்களுக்குள் எந்தவித மோதல்களும் ஏற்பட்டதில்லை. எங்கள் உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. சொந்த பந்தங்களுடன் உறவாட இது வாய்ப்பாக இருக்கிறது.
இந்த வழிபாட்டில் முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், கொம்பூதி, கமுதி, பரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்கிறோம்.
தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த முறை செல்ல முடியவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் செல்கின்றோம். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் சென்றால் பல நன்மைகளை அடையலாம். ஆனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.
இந்த வழிபாட்டை முதலில் தொடங்கியவர்கள் பாத யாத்திரையாக சென்று வந்துள்ளனர். அதன் பின்னர் மாட்டு வண்டிகளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது மாட்டு வண்டி கிடைக்காதவர்கள் கார் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களில் சென்று வருகிறோம். குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அழியாநிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு அறந்தாங்கி தாலுகா அழியாநிலை கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 17 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 27ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை வீரமுத்திரையர் சங்க இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
- வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள பொன் மாடசாமி கோவில் வைகாசி கொடை விழாவை முன்னிட்டு முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.
போட்டியானது சிறிய மாடுகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்ப ட்டது. பின்னர் இப்போ ட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையா ளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது. திருவிழா வையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொது மக்கள் கூடியிருந்து கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் விழா கமிட்டியினர் ராமர், மாடசாமி, காசி, செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்,கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழக்குடி கிராமத்தில் உள்ள தூய அமல உற்பவி அன்னை மாதா கோவில் திருவிழா நடந்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் தொடங்கியது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பந்தய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.
இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயமானது கீழ்க்குடி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது. இதில் 9 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 19 ஜோடி சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.
கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கும், சாரதி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தினை பொதுமக்கள் ஏராள மானோர் கண்டு களித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலை மையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழா
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 28 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 52 ஜோடிகள் என மொத்தம் 91 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்து கொண்ட தால் 27 மற்றும் 25 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
அதேபோன்று மாடு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு 4 காளைகள் இணைந்து 2 வண்டிகள் ஒன்றாய் சென்றதால் சாலையில் நின்று மாட்டு வண்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிதறி அடித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
தாழையூர் கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் பந்தயம் தொடங்கியது. வெங்களூர் சாலையில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. பெரியமாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக போட்டி நடந்தது. பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்ன மாட்டிற்க்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப் பட்டது.
சிவகங்கை, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தேனி போன்ற மாவட்டத்தில் இருந்து 25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவில் சிவகங்கை மாவட்டம் காணிச்சாவூரணி மணி அம்பலம் மாடு முதல் பரிசு பெற்றது.
2-வது நல்லாங்குடி முத்தையா சேர்வை மாடு, 3-வது தேவகோட்டை பிரசாத் மொபைல், 4-வது சாத்தி கோட்டை கருப்பையா சேர்வை மாடுகள் இடம் பெற்றன. சின்ன மாடு பிரிவில் மதுரை மாவட்டம் கொடிக்குளம் மாடு முதலிடம் பெற்றது. தேவகோட்டை பிரசாத் மொபைல், காரைக்குடி கருப்பண சேர்வை, கண்டதேவி மருது பிரதர்ஸ் மாடுகள் அடுத்தடுத்த இடம் பிடித்தன.
வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.