search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முள்ளுக்கீரை"

    • பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க பயன்படுகிறது.
    • மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    தமிழில் முள்ளுக்கீரை அல்லது முள்ளிக்கீரை என்று அழைக்கப்படும் 'அமராந்தஸ்' என்ற தாவரவியல் இனத்தை சேர்ந்த கீரை, முட்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும்.

    சிவப்பு நிற நிமிர்ந்த தண்டுகள், சில சமயங்களில் ஏறுவரிசை, 30-150 செ.மீ. நீளத்தில் கிளைத்திருக்கும். இலைகள் முட்டை வடிவில் இருந்து நீள்வட்டம், ஈட்டி-நீள் சதுரம், வடிவில் இருக்கும். மென்மையான இலை தண்டு 1 முதல் 9 செ.மீ. பூக்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

    இந்த மூலிகை கீரையின் மருத்துவ குணங்கள் ஏராளம். சிறுநீர் நன்றாக வெளியேற உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முறிந்த எலும்பு சேர துணையாக இருக்கிறது. மலமிளக்கியாக செயல்படுவதுடன் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுகிறது.

    வெப்பம் மற்றும் விஷத்தை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் போக்கை கட்டுப்படுத்துகிறது. சில நாடுகளில் பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க இந்த கீரையை பயன்படுத்துகின்றனர்.

    சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தில் தோல் அழற்சிக்கான வெளிப்பூச்சு மருந்தாகவும் தீக்காய தீவிரத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

    இது தவிர மூலம், குடல் அழற்சி, பித்தப்பை அழற்சி, சீரண மண்டல பாதிப்பை குறைக்க பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளின் பெருக்கத்தை தடுக்க உதவுவதுடன், மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    புரதம் மற்றும் கால்சியம் அதிகம். இதை மெக்சிகோ போன்ற நாடுகளில் உணவுப் பயிராகவும், ஆஸ்திரேலியாவில் கீரைக்கு மாற்றாகவும், சீனாவில் காய்கறியாகவும் பயன்படுத்துகிறார்களாம்...!. ஆனால், தமிழ்நாட்டில் மழை பெய்தால் எங்கு பார்த்தாலும் முளைத்து கிடக்கும் இந்த முள்ளுக்கீரையை பற்றி தெரியாமல் பலரும் பயன்படுத்தாமல் தவற விட்டுவிடுகிறார்கள் என்பதே உண்மை.

    ×