search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து"

    • வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
    • இத்தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கோவை-சேலம் பயணிகள் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் சேலம்-கோவை ரெயில் (எண்.06803) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கிராமப்புற பஸ் களை முறையாக இயக்க வேண்டும். பஸ்களை முறை யாக பராமரிக்க வேண்டும்.
    • குமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போதிய கண்டக்டர்கள், டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    நாகர்கோவில், அக்.13-

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் விடுத் துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறச்சகுளம், தெரிசனங் கோப்பு, ஞாலம், சிறமடம், அருமநல்லூர் மற்றும் கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், கேசவன்பு தூர், தடிக் காரன்கோணம், கீரிப்பாறை போன்ற பகுதி களிலிருந்து பெரும்பா லான மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அரசு பேருந்து மூலமே நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் நிறுத் தப்பட்ட பஸ்கள், தற்போ தும் முறையாக இயக்கப் படாமல் உள்ளன. இரவு நேர பஸ்களை நிறுத்தி யதுடன் அடிக்கடி காலை மற்றும் மாலை நேரங் களிலும் பஸ்கள் ரத்து செய்யப் படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இறச்சகுளம்-சாமி தோப்பு தடம் எண் 32 பஸ் பல மாத காலமாக நிறுத் தப்பட்டுள்ளது. இப்பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்ற பொதுமக்கள் வசதிக்காக தினமும் காலை 8.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த இறச்சகுளம் - நாகர்கோவில் சிறப்பு பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

    ராஜாக்க மங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்ட மணக்குடி, பொழிக் கரை, பள்ளம், புத்தன்துறை போன்ற மீனவ கிராம பகுதிகளுக்கு இயக்குப்பட்டு வந்த அரசு பேருந்துகள் முறையாக இயக்கப் படவில்லை. பொழிக்கரை நாகர்கோவில் தடம் எண் 38சி பஸ்சை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராமப்புற பஸ் களை முறையாக இயக்க வேண்டும். பஸ்களை முறை யாக பராமரிக்க வேண்டும். குமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய கண்டக்டர்கள், டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும்.
    • தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்புப் பிரிவில் உள்ள நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகளுக்காக, அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 06772 கொல்லம் சந்திப்பு- கன்னியாகுமரி மெமு எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 06773 கன்னியாகுமரி- கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 16366 நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அன்று 2.30 மணிக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

    ரெயில் எண்: 06429 கொச்சுவேளி- நாகர்கோவில் சந்திப்பு முன்பதிவில்லா எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் கொச்சுவேளியில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கொச்சுவேளியில் இருந்து 3.10 மணிக்கு(1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.

    இவ்வாறு செய்தி கூறியிருப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும்.
    • வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கோவை

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும். இங்கு பொள்ளாச்சி மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து கொப்பரையை எலத்துக்கு எடுத்து செல்வார்கள்.

    வாரம் தோறும் லட்சக்கணகான ரூபாய்க்கு கொப்பரை ஏலம் போகும். இந்த நிலையில் இந்த வருடம் கொப்பரை ஏலம் நடைபெரும் நாளான செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வர உள்ளது. இதனால் வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது,

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.

    இதில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்பது வழக்கம். வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் நடத்தப்பட இருந்த கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என்றார்.

    • பரிவேட்டை திருவிழாவையொட்டி நடவடிக்கை
    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துஉள்ளது.

    இவற்றை தினமும் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

    தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வருகிற 5-ந்தேதிகாலை 11.30 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வல மாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த பரிவேட்டை திருவிழா வில் சுற்றுலாப்ப யணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும்பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை கன்னியா குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழா நடைபெறும். வருகிற 5-ந்தேதி அன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நிறுத்துவதால் அன்றைய தினம் பகல் 12 மணி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப்படும் என்று விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

    • மேதாவி போல பேச வேண்டாம் கொடுக்க மனமில்லாத உங்களுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என நிதி அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.
    • ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது.

    மதுரை

    மதுரையில் 29-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.இது தொடர்பாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது:-

    வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், புறநகர் மேற்கு, புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

    அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்ய வேண்டும், 29-ந் தேதி காலை விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். விருதுநகர் செல்லும் வழியில் கரிசல்பட்டியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது,

    அதேபோல் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும்.

    நிதியமைச்சர் சில குற்றச்சாட்டுகளை கூறியு ள்ளார்.

    நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள நிதி அமைச்சருக்கு மக்களுடைய நாடி துடிப்பு தெரியவில்லை. 4 தலைமுறை அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நீங்கள் 30 ஆண்டுகளாக ஏன் கம்பெனியில் இருந்தீர்கள்?

    30 ஆண்டு காலம் கம்பெனியில் ஊதியம் பெற்ற நிதி அமைச்சருக்கு அரசியல் வேறு, கம்பெனி வேறு என்பது தெரியவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் 2021-22-ம் ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து ரூ.8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது, 2022-23-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது ஆக இந்த 1 1/2 ஆண்டு காலத்தில் ரூ. 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளீர்கள்? வாங்கிய கடனுக்காக எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?

    நிதி அமைச்சர் பேச்சில் வல்லவராக இருக்கலாம். செயல் வடிவில் அல்ல. உங்களுக்கு முன்பே அமைச்சராகி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளோம்.

    நீங்கள் மட்டுமே மேதாவி என்பது போல் பேசக்கூடாது. 10 வருடங்கள் அமைச்சராக இருந்த எனக்கு அடிப்படை கூட தெரிய வில்லை என்று நிதி அமைச்சர் கூறுகிறார்.

    தற்போது மின் கட்டணம் உயர்த்த ப்பட்டுள்ள து, சொத்துவரி உயர்த்தப்ப ட்டுள்ளது இந்த நிதி எல்லாம் எங்கே போய் சேரும்? அந்தத் துறைகளுக்கு தானே சேரும்? அதுவும் தமிழ்நாடு அரசு தானே? அந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் நேரு தானே? நலத்தி ட்டத்துக்கான அந்த வருவாய் செய ல்படுத்த ப்படுகிறது என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.

    கொடுக்க மனமில்லை என்று சொல்லுங்கள். அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

    கொரோனோ பேரிடர் காலத்தில் தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் வாங்கும் திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, திட்டத்தை ரத்து செய்யவில்லை. பேரிடர் காலங்களில் திட்டங்களை தள்ளி வைத்தது வேறு. தற்போது கொள்கை ரீதியாக திட்டங்களை ரத்து செய்துள்ளது வேறு. ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருமங்கலம்-உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் ரத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டம் நடந்தது.
    • கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து அந்த கல்வி மாவட்டங்களை மீண்டும் செயல்பட வைக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. போராட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    சாமானிய மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காணும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு புதிய 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கினார். இதில் திருமங்கலமும் ஒன்று.

    இந்த புதிய கல்வி மாவட்டங்கள் உருவான தன் மூலம் மாணவ, மாணவி கள் மற்றும் ஆசிரியர்கள் பயடைந்து வந்தனர்.

    இது போன்ற கல்வி மாவட்டங்களை உருவாக்கியதின் மூலம் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகமானது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 80 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    தற்போது தமிழக அரசின் சார்பில் 151 அரசாணை வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயலாகும். இது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

    எடப்பாடி பழனிசாமி 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கி சீர்திருத்த புரட்சி செய்த கல்வி மாவட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. யாரிடமும் கருத்து கேட்காமல் சர்வாதிகார போக்குடன் அரசு இந்த முடிைவ எடுத்துள்ளது.

    மீண்டும் ரத்து செய்யப்பட்ட கல்வி மாவட்டங்களை செயல்பட வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். எஸ். சரவணன், வெற்றிவேல் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் - ஈரோடு வழித்தடத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன.
    • இதையொட்டி 2 நாட்கள் முழுைமயாக ரத்து செய்யப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் - ஈரோடு வழித்தடத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் சேலம் ரெயில் நிலையத்தில் நாளை (20-ந்தேதி), நாளை மறுநாள் (21-ந்தேதி) ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி சேலம்- கரூர், கரூர்-சேலம் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் முழுைமயாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதன் காரணமாக கோவை- சேலம் ரெயில் (வண்டி எண். 06802) , கோவையில் இருந்து புறப்பட்டு, ஈரோடு வரை இன்று முதல் 21-ந்தேதி வரை பகுதியாக மட்டும் இயக்கப்படுகிறது. ஈரோடு- சேலம் இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

    அதுபோல் சேலம்- கோவை ரெயில் (வண்டி எண். 06803) ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, கோவை சென்றடையும். சேலம்- ஈேராடு இடையே இயக்கப்படாது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது.
    • அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சேலம் மாநகரில் தினமும் புதிது புதிதாக குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் சேலம் மாநகரில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    குறிப்பாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், சொந்த விஷயங்களுக்காக வாகனங்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விதிமீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை சார்பில் போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படடது. அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சரக்கு வாகனங்கள்

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், குடிபோதையில் வாகன இயக்கம், அதிவேகம், மொபைல் போன் பேசியபடியே வாகன இயக்கம், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற பிரிவுகளில் சிக்கும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, நிரந்தரமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன்படி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக, நிரந்தரமாக ரத்து செய்யகோரி அனுப்புகின்றனர் என, தெரிவித்தனர்.

    • நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தி.மு.க. அரசு ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
    • ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியா வதை தொடர்ந்து கண்ணீ ரோடு நாம் பார்க்கிறோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு நாடு முழுவதும் முக்கிய பொரு ளாக உள்ளது. இந்த கல்வி யாண்டில் நாடு முழுவதும் 497 நகரங்களில் உள்ள 3,570 மையங்களில் 17.78 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1.34 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 51.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த வரிசையை நாம் பார்க்கும்போது ஏற்கனவே 2020 கல்விஆண்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி யில் ஒரு லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.ணதில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இந்தியாவில் நாம் 15-வது இடம் பிடித்தோம். ஆனால் இன்றைக்கு ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அளவில் 28 வது இடத்திற்கு சென்ற வேதனையான புள்ளி விபரத்தை நாம் பார்க்கிற போது இது வேதனையிலும், வேதனை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

    அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்கும் வகை யில், எடப்பாடி பழனிசாமி. சமூக நீதிப் பாதையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுத்து, அதே கல்வி ஆண்டில் 435 மாணவ மாணவிகளுக்கு அவரே மருத்துவ படிப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.

    மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். அதேபோல் எடப்பாடியார் கடந்த 2019 ஆம் ஆண்டு, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தார். அதே நிலையில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியேற்று சவால் விடுத்தார் முதலமைச்சர். ஆனால் இதுவரை ஒரு மைல் தூரம் கூட முன்னேற வில்லை, நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தேக்கநிலையில் தான் உள்ளது.

    ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியா வதை தொடர்ந்து கண்ணீ ரோடு நாம் பார்க்கிறோம். இந்த ஆண்டும் மாணவர்கள் தற்கொலை என்ற செய்தி வேதனையிலும் வேதனை அளிக்கிற செய்தியாக இருக்கிறது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். முதல் கையெழுத்திடுவோம் என்று மிகப்பெரிய பொய்யை சொல்லி மாணவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையும் கேள்விக்குறியாகி இருக்கி றது அந்த அறிவிப்பு. இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம் என்கிற அச்சம் ஏற்படுகிறது.

    ஏழை மாணவர்கள் கனவை நனவாக்குவதற்கு நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நாளோ அந்த நாளை எதிர்பார்த்து நமது தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று மாணவரிடத்தில் மிகப்பெரிய அச்சம், சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. இதற்கு தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டு றவு சங்கங்கள் மூலமாக விவசா யிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .

    விவசாயிகளுக்கு தர மான உரம் தங்கு தடை யின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உர விற்பனை யாளர்கள் தங்கள் உர உரிமத்துடன் தங்களுக்கு உரம் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பெறப்பட்ட"0" படிவங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் . " O " படிவங்களை இணைக்கா மல் உரம் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 - ன்படி கடும் விதி மீறலாகும் .

    மேலும் , உர விற்பனையா ளர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கு மிகா மல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் . மானிய உரங்களை கண்டிப்பாக விற்பனை முனைய எந்திர த்தின் ( பி.ஒ.எஸ் ) மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.

    யூரியா விற்பனை செய்யு ம்பொழுது விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது . மேலும் , உர விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள உர இருப்பையும் , விலையையும் விலை விபர பலகை எழுதி கடைக்கு முன்பாக வாங்கு பவர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

    உரங்களை வைத்துக் கொண்டு விவசாயி களுக்கு இல்லை என்று தெரிவிக்க கூடாது . மேலும் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 - க்கு முரணாக செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது சட்ட நட வடிக்கை தொரடப்படும் . விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரம் குறித்த தங்கள் புகார்களை தெரிவிக்க வட்டாரத்தின் பெயர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குந ர்களின் அலைபேசி அகஸ்தீஸ்வரம் -9443700807 ராஜாக்கமங்கலம் -9442136046 , தோவாளை -9443283954 , திருவட்டார் குருந்தன்கோடு -9442151397 , கோழிப்போர்விளை -9442151397 . 9500982980 , மேல்புறம் -9500982980 , கிள்ளியூர் -8610003288 , முஞ்சிறை -8610003288 . மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) மற்றும் வேளாண்மை அலுவலர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) - 9443003044 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று வீசி வருகிறது.
    • ஊட்டியில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது, ஆனால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

    கோவை

    சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மலை ரெயில் நிலையத்தின் கெட்டி - லவ்டேல் ரெயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் மரம் விழுந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.இதன் காரணமாக இன்று குன்னூரில் இருந்து 07.45 மணிக்கு புறப்பட்ட ரெயில் கெட்டி - ஊட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி- குன்னூர் ரெயில் இன்று 09.15 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது, ஆனால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×