சினிமா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

Published On 2019-01-16 11:16 GMT   |   Update On 2019-01-16 11:16 GMT
தன்னுடைய அடுத்த படம் பற்றி வரும் வதந்திகளுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #ARMurugaDoss #Rajini #Rajinikanth
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான படம் ‘சர்கார்’. விஜய் நாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படம் அரசியல் கதையாக இருக்கும் என்றும், படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது இயக்குனர் முருகதாஸ், ‘நான் அடுத்ததாக இயக்கும் படம் ‘நாற்காலி’ இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். 



இப்படம் பற்றிய முழு தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #ARMurugaDoss
Tags:    

Similar News