சினிமா செய்திகள்

கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்... மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்

Published On 2023-12-07 03:33 GMT   |   Update On 2023-12-07 03:33 GMT
  • கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
  • வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

நடிகர் விஜய் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிச்சாங்' புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News