சினிமா செய்திகள்

விவாகரத்து சர்ச்சை: ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் இடையே விரிசல்?

Published On 2024-07-14 03:45 GMT   |   Update On 2024-07-14 03:45 GMT
  • ராமர் கோவில் பிரதிஷ்டை உள்பட சமீபத்திய நிகழ்வுகளில் அபிஷேக் பச்சன் தனியாகவே பங்கேற்று வருகிறார்.
  • அம்பானி இல்ல திருமண விழாவில் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

'உலக அழகி' என்ற பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் 'இருவர்', 'ஜீன்ஸ்', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

சமீபகாலமாக ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால் ஆராத்யா படிக்கும் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றதால் பிரச்சினைகள் தீர்ந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்தநிலையில் மீண்டும் விவகாரத்து சர்ச்சை எழுந்துள்ளது. அதை உறுதிபடுத்தும் விதமாக ராமர் கோவில் பிரதிஷ்டை உள்பட சமீபத்திய நிகழ்வுகளில் அபிஷேக் பச்சன் தனியாகவே பங்கேற்று வருகிறார்.

மும்பையில் நடந்த அம்பானி இல்ல திருமண விழாவிலும் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். மேலும் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடி விரைவிலேயே பிரிந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News