சினிமா செய்திகள்

முன்னாள் மனைவியின் புகார்... மலையாள நடிகர் பாலா கைது

Published On 2024-10-14 11:49 GMT   |   Update On 2024-10-14 11:49 GMT
  • வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்து பாலா தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.
  • பாலாவின் மனைவி அம்ருதா பிரபல மலையாள பாடகி.

வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்து பாலா தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவர் ஏராளமான தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ஜெயக்குமார் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இவரது சகோதரர் சிவா பிரபல திரைப்பட இயக்குனர் ஆவார்.

பாலாவின் மனைவி அம்ருதா பிரபல மலையாள பாடகி. இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னையும் தனது மகளையும் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து அவமதித்ததாக பாலா மீது எர்ணாகுளம் கடவந்திரா போலீஸ் நிலையத்தில் அம்ருதா புகார் செய்தார்.

அதன்பேரில் நடிகர் பாலா மீது வலைதளங்கள் மூலம் அவதூறு செய்தல், பெண்ணை அவமதித்தல், குழந்தைகளை கொடுமைப் படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கின் கீழ் நடிகர் பாலாவை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் இன்று கைது செய்தனர்.

அப்போது நடிகர் பாலாவுடன் இருந்த அவரது மேலாளர் ராஜேசும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News