சினிமா செய்திகள்

'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை - பார்த்திபன் புகார்

Published On 2024-10-14 15:56 GMT   |   Update On 2024-10-14 15:56 GMT
  • சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன்.
  • டீன்ஸ் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார் பார்த்திபன்

தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நபர் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான டீன்ஸ் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார்.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்தது.

அதை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அப்படி ஒரு பதிவை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.

நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…" என பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News