சினிமா செய்திகள்
null

`தனுஷ் இயக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை' - அசோக் செல்வன் விளக்கம்

Published On 2024-09-24 11:19 GMT   |   Update On 2024-09-24 11:21 GMT
  • "இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
  • இந்த படத்தை Dawn பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் வெளியான 50 ஆவது படமாக ராயன் அமைந்தது.

ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 52-வது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.

"இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார். இந்த படத்தை Dawn பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அசோக் செல்வன், அருண் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அருண் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் பரவி வரும் நிலையில். அசோக் செல்வன் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் " எனக்கும் தனுஷ் சார் மிகவும் பிடிக்கும், அவருடைய மிகப் பெரிய ரசிகன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப் படுகிறேன் ஆனால் இப்பொழுது அவர் இயக்கி கொண்டிருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை" என்று கூறினார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது தேனியில் நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News